நாக்பூர் - விஜயவாடா பொருளாதார வழித்தடம் தொடர்பான முக்கிய சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஹைதராபாத் - விசாகப்பட்டினம் வழித்தடம் தொடர்பான சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறது
முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ஹைதராபாத் (கச்சிகுடா) - ராய்ச்சூர் - ஹைதராபாத் (கச்சிகுடா) ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தெலங்கானாவின் மஞ்சள் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசால் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்
ஹனம்கொண்டா, மகபூபாபாத், வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல வழிகளைத் திறக்கும் பொருளாதார நடைபாதை
புதிய சம்மக்கா-சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்திற்கு ரூ.900 கோடி செலவிடப்படும்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, எனது சகாவும், மத்திய அரசின் அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகா திரு சஞ்சய் குமார் பண்டி அவர்களே!

வணக்கம்!

நாட்டில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. நாரி சக்தி வந்தன் அதினியத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், நவராத்திரிக்கு முன்பே சக்தி பூஜை என்ற உணர்வை நாம் கொண்டு வந்துள்ளோம். இன்று தெலங்கானாவில் பல முக்கிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழாக்கள் நடைபெற்றுள்ளன. ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்காக தெலங்கானா மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

என் குடும்ப உறுப்பினர்களே,

இன்று நான் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும், இங்குள்ள மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும் இதுபோன்ற பல சாலை இணைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்ததும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாக்பூர்-விஜயவாடா வழித்தடம் வழியாக தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் போக்குவரத்து மிகவும் எளிதாக இருக்கும். இதன் காரணமாக, இந்த மூன்று மாநிலங்களிலும் வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்துறைக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும். இந்த வழித்தடத்தில் சில முக்கியமான பொருளாதார மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 8 சிறப்பு பொருளாதார மண்டலங்கள், 5 மெகா உணவுப் பூங்காக்கள், 4 மீன்பிடி கடல் உணவு குழுமங்கள், 3 மருந்து மற்றும் மருத்துவ குழுமங்கள் மற்றும் ஒரு ஜவுளிக் குழுமம் ஆகியவை அமைக்கப்படும். இதன் விளைவாக, ஹனம்கொண்டா, வாரங்கல், மகபூபாபாத் மற்றும் கம்மம் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உணவுப் பதப்படுத்துதல் காரணமாக, இந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்களில் மதிப்பு கூட்டல் இருக்கும்.

 

என் குடும்ப உறுப்பினர்களே,

தெலங்கானா போன்ற நிலத்தால் சூழப்பட்ட மாநிலத்திற்கு, இதுபோன்ற சாலை மற்றும் ரயில் இணைப்பு மிகவும் அவசியம், இது இங்கு தயாரிக்கப்படும் பொருட்களை  கடற்கரைக்கு கொண்டு செல்லவும், அவற்றின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் உதவும். தெலங்கானா மக்கள் உலகச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும். இதன் காரணமாக, நாட்டின் பல முக்கியப் பொருளாதார வழித்தடங்கள் தெலுங்கானா வழியாக செல்கின்றன. இவை அனைத்து மாநிலங்களையும் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையுடன் இணைக்கும். ஹைதராபாத்-விசாகப்பட்டினம் நடைபாதையின் சூர்யபேட்-கம்மம் பிரிவும் இதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதன் விளைவாக, இது கிழக்குக் கடற்கரையை அடைய உதவும். மேலும், தொழில்கள் மற்றும் வணிகங்களின் தளவாட செலவுகள் பெருமளவில் குறையும். ஜல்கெய்ர் மற்றும் கிருஷ்ணா பிரிவுக்கு இடையில் கட்டப்படும் ரயில் பாதை இங்குள்ள மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

 

என் குடும்ப உறுப்பினர்களே,

மஞ்சள் உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளராக பாரதம் திகழ்கிறது. தெலங்கானாவில் உள்ள விவசாயிகளும் மஞ்சளை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர். கொரோனாவுக்குப் பிறகு மஞ்சளின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து, அதன் தேவையும் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. உற்பத்தி முதல் ஏற்றுமதி மற்றும் ஆராய்ச்சி வரை மஞ்சளின் முழு மதிப்புச் சங்கிலியும் அதிக தொழில்முறை கவனம் செலுத்த வேண்டியது இன்று கட்டாயமாகும்; மற்றும் இது தொடர்பாக முன்முயற்சி எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பான முக்கிய முடிவை தெலங்கானா மண்ணில் இருந்து இன்று அறிவிக்கிறேன். மஞ்சள் விவசாயிகளின் தேவைகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, அவர்களின் நலனுக்காக 'தேசிய மஞ்சள் வாரியம்' அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விநியோகச் சங்கிலியில் மதிப்புக் கூட்டல் முதல் உள்கட்டமைப்பு தொடர்பான பணிகள் வரை பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 'தேசிய மஞ்சள் வாரியம்' உதவும். 'தேசிய மஞ்சள் வாரியம்' அமைத்ததற்காக தெலங்கானா மற்றும் நாட்டின் மஞ்சள் பயிரிடும் அனைத்து விவசாயிகளையும் நான் பாராட்டுகிறேன்.

 

என் குடும்ப உறுப்பினர்களே,

இன்று, உலகெங்கிலும் எரிசக்தி மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன. இந்தியா தனது தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல, வீட்டு உபயோகத்திற்கும் எரிசக்தியை உறுதி செய்துள்ளது. நாட்டில் எல்பிஜி இணைப்புகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் சுமார் 14 கோடியாக இருந்தது, 2023 ஆம் ஆண்டில் 32 கோடியாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் கேஸ் சிலிண்டர் விலையையும் குறைத்துள்ளோம். எல்பிஜி அணுகலை அதிகரிப்பதோடு, அதன் விநியோக வலையமைப்பையும் விரிவுபடுத்துவது அவசியம் என்று இந்திய அரசு இப்போது கருதுகிறது. ஹாசன்-செர்லபள்ளி எல்பிஜி குழாய் இப்போது இந்த பிராந்திய மக்களுக்கு எரிசக்தி பாதுகாப்பை வழங்குவதில் நீண்ட தூரம் செல்லும். கிருஷ்ணபட்டினம் மற்றும் ஹைதராபாத் இடையே மல்டி ப்ராடக்ட் பைப்லைனுக்கும் இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

 

என் குடும்ப உறுப்பினர்களே,

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு கட்டிடங்களை இன்று திறந்து வைத்தேன். பா.ஜ.க, அரசு, ஐதராபாத் பல்கலைக்கு, 'இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்' என்ற அந்தஸ்தை வழங்கி, சிறப்பு நிதி வழங்கியுள்ளது. இன்று உங்கள் மத்தியில் இன்னொரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகிறேன். முலுகு மாவட்டத்தில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தப் பல்கலைக்கழகம் மரியாதைக்குரிய பழங்குடி தெய்வங்களான சம்மக்கா-சரக்கா ஆகியோரின் பெயரால் அழைக்கப்படும். சம்மக்கா-சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்திற்கு ரூ.900 கோடி செலவிடப்படும். இந்த மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்திற்காக தெலங்கானா மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெலங்கானா மக்களின் அன்புக்கும், பாசத்துக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, நான் இந்த அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்வில் இருக்கிறேன், எனவே நான் ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் பேசினேன். 10 நிமிடங்களுக்குப் பிறகு, நான் ஒரு திறந்த மைதானத்திற்குச் சென்று அங்கு சுதந்திரமாக பேசுவேன், நான் என்ன சொன்னாலும் அது தெலுங்கானாவின் உணர்வுகளை பிரதிபலிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

மிகவும் நன்றி!

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
IMF retains India's economic growth outlook for FY26 and FY27 at 6.5%

Media Coverage

IMF retains India's economic growth outlook for FY26 and FY27 at 6.5%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Rural Land Digitisation is furthering rural empowerment by leveraging the power of technology and good governance: Prime Minister
January 18, 2025

The Prime Minister today remarked that Rural Land Digitisation was furthering rural empowerment by leveraging the power of technology and good governance.

Responding to a post by MyGovIndia on X, he said:

“Furthering rural empowerment by leveraging the power of technology and good governance…”