“ Path of duty and responsibility has led me to be here but my heart is with the victims of the Morbi mishap”
“Entire country is drawing inspiration from the resolute determination of Sardar Patel”
“Sardar Patel’s Jayanti and Ekta Diwas are not merely dates on the calendar for us, they are grand celebrations of India’s cultural strength”
“Slave mentality, selfishness, appeasement, nepotism, greed and corruption can divide and weaken the country”
“We have to counter the poison of divisiveness with the Amrit of Unity”
“Government schemes are reaching every part of India while connecting the last person without discrimination”
“The smaller the gap between the infrastructure, the stronger the unity”
“A museum will be built in Ekta Nagar dedicated to the sacrifice of the royal families who sacrificed their rights for the unity of the country”

கெவாடியாவில் நான் இருந்தாலும் எனது உள்ளம் மோர்பி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது. ஒருபுறம், துக்கத்தால் நிறைந்த இதயம் உள்ளது, மறுபுறம் பொறுப்பு மற்றும் கடமைப் பாதை உள்ளது. தேசிய ஒற்றுமை தினத்தில், கடமை மற்றும் பொறுப்பின் பாதையே என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. நேற்றைய விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் அரசு தோளோடு தோள் நிற்கும். மாநில அரசு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இராணுவம் மற்றும் விமானப்படையின் குழுக்களைத் தவிர மற்ற மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு உதவி வழங்கப்படுகிறது. குஜராத் முதலமைச்சர் மோர்பிக்கு சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் எந்தக் குறையும் இருக்காது என்று உறுதியளிக்கிறேன்.

இது நமது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்த ஆண்டு, நாம் புதிய தீர்மானங்களுடன் முன்னேறி வருகிறோம்.  2022 ஆம் ஆண்டில் தேசிய ஒற்றுமை தினம் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பம், சமூகம் அல்லது தேசம் என ஒவ்வொரு கட்டத்திலும் ஒற்றுமை அவசியம். இந்த உணர்வு நாடு முழுவதும் 75,000 ஒற்றுமை ஓட்டங்களில் வெளிப்படுகிறது. சர்தார் படேலின் வலுவான உறுதியிலிருந்து முழு நாடும் உத்வேகம் பெறுகிறது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் ஒற்றுமைக்காகவும், ‘ஐந்து உறுதிமொழிகளை’ செயல்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சர்தார் படேல் போன்ற தலைவர்களால் நமது சுதந்திரப் போராட்டம் நடத்தப்படாவிட்டால், சூழ்நிலையை கற்பனை செய்வது கடினம். 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இணைக்கப்படாவிட்டால் என்ன நடந்திருக்கும்? நமது சமஸ்தானங்கள் ஆழ்ந்த தியாக உணர்வையும் நம்பிக்கையையும் அன்னை இந்தியாவின் மீது காட்டாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்த அசாத்தியமான பணியை சர்தார் படேல் செய்து முடித்தார். சர்தார் படேலின் ஜெயந்தி மற்றும் ஒற்றுமை தினம் ஆகியவை நமக்கு நாட்காட்டியில் உள்ள தேதிகள் மட்டுமல்ல, அவை இந்தியாவின் கலாச்சார வலிமையின் பிரமாண்டமான கொண்டாட்டங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, ஒற்றுமை ஒரு கட்டாயம் அல்ல, அது எப்போதும் நம் நாட்டின் ஒரு அம்சமாக இருந்தது. ஒற்றுமையே நமது தனித்துவம். நேற்று மோர்பியில் நடந்தது போன்ற ஒரு பேரிடரில், முழு நாடும் ஒன்றாக முன்னோக்கி வருகிறது, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மக்கள் பிரார்த்தனை மற்றும் உதவிகளை வழங்குகிறார்கள். தொற்றுநோய் பரவிய காலத்தில், மருந்து, ரேஷன் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றில் ஒத்துழைக்கும் உணர்வுபூர்வமான ஒற்றுமையில் இது முழுமையாக வெளிப்பட்டது. விளையாட்டு வெற்றிகளின் போதும், திருவிழாக்களிலும், நமது எல்லைகள் அச்சுறுத்தப்படும்போதும், நமது வீரர்கள் அவர்களைப் பாதுகாக்கும்போதும் இதே உணர்வுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இந்தியாவின் ஒற்றுமையின் ஆழத்தை உணர்த்துகின்றன. இந்த ஒற்றுமை பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்களின் பக்கங்களில் ஒரு முள்ளாக இருந்தது, அவர்கள் பிரிவினையை விதைப்பதன் மூலம் அதை நீர்த்துப்போகச் செய்ய முயன்றனர், இருப்பினும், அவர்களின் வடிவமைப்புகள் நமது நனவில் நேரடி நீரோட்டமாக இருந்த ஒற்றுமையின் அமிர்தத்தால் தோல்வியடைந்தன. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்ளும் சக்திகள் இன்னும் உள்ளதாலும், சாதி, பிரதேசம், மொழி, வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினையை தூண்டும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாலும் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தும் மற்றும் பலவீனப்படுத்தும் அடிமை மனப்பான்மை, சுயநலம், சமரசம், உறவினர்களுக்கு உதவுதல், பேராசை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்பட வேண்டும். பிரிவினையின் விஷத்தை நாம் ஒற்றுமையின் அமிர்தத்தால் எதிர்கொள்ள வேண்டும்.

ஒற்றுமை தின விழாவில், சர்தார் சாகேப் ஒப்படைத்த பொறுப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவது குடிமக்களின் பொறுப்பு. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புணர்வுடன் கடமைகளைச் செய்யத் தயாராக இருந்தால் மட்டுமே இது நடக்கும். இந்த பொறுப்புணர்வுடன், அனைவரும் இணைந்து முயற்சித்து உயருவோம். இதனால், இந்தியா வளர்ச்சிப் பாதையில் மேலும் முன்னேறும். பாரபட்சமின்றி, நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசின் கொள்கைகள் சென்றடைந்து வருகிறது. குஜராத்தின் சூரத்தில் உள்ள மக்களைப் போலவே அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சியாங் மக்களுக்கும் இலவச தடுப்பூசிகள் எளிதாகக் கிடைக்கின்றன. எய்ம்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்களை கோரக்பூரில் மட்டுமல்லாமல், பிலாஸ்பூர், தர்பங்கா, குவஹாத்தி, ராஜ்கோட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் காணலாம். தமிழகம் மட்டுமின்றி உத்தரப் பிரதேசத்திலும் பாதுகாப்பு வழித்தடங்கள் மேம்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், வரிசையில் நிற்கும் கடைசி நபரை இணைக்கும் போது, அரசின் திட்டங்கள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைகின்றன.

நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் அடிப்படைத் தேவைகளைப் பெற பல தசாப்தங்களாக காத்திருந்தார்கள். உள்கட்டமைப்புக்கு இடையே உள்ள இடைவெளி சிறியதாக இருந்தால், ஒற்றுமை பலமாகிறது. ஒவ்வொரு திட்டத்தின் பலனும் ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம். அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் டிஜிட்டல் இணைப்பு, அனைவருக்கும் சுத்தமான சமையல், அனைவருக்கும் மின்சாரம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 100% குடிமக்களை சென்றடையும் நோக்கம் ஒரே மாதிரியான வசதிகளுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒன்றுபட்ட இலக்குகள், ஒன்றுபட்ட வளர்ச்சி மற்றும் ஒன்றுபட்ட முயற்சியின் பொதுவான நோக்கத்தை வலியுறுத்துகின்றன. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள், நாட்டின் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் சாமானியர்களின் நம்பிக்கைக்கு ஒரு ஊடகமாக மாறி வருகிறது. சாமானியர்களின் நம்பிக்கைக்கான ஊடகமாக அது செயல்படுகிறது. சர்தார் படேலின் இந்தியாவின் தொலைநோக்கு பார்வையாகும் இது. ஒவ்வொரு இந்தியருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும், சமத்துவ உணர்வு இருக்கும். அந்த எண்ணம் நிறைவேறுவதை இன்று நாடு காண்கிறது.

கடந்த 8 ஆண்டுகளில், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் நாடு முன்னுரிமை அளித்துள்ளது. பழங்குடியினரின் பெருமைகளை நினைவுகூரும் வகையில் பழங்குடியின பெருமை தினத்தை கொண்டாடும் பாரம்பரியத்தை நாடு தொடங்கியுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் பழங்குடியினர் அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ஏக்தா நகர் உலகிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் முன்மாதிரி நகரமாக உருவாகி வருகிறது. மக்கள் மற்றும் நகரத்தின் ஒற்றுமையே பொதுப் பங்கேற்பு ஆற்றலுடன் வளர்ச்சியடைந்து வருவதுடன், ஒரு மகத்தான நிலைப்பாட்டை மட்டுமல்ல, தெய்வீக நிலைப்பாட்டையம் வழங்குகின்றன. ஒற்றுமை சிலை வடிவில் உலகின் மிகப்பெரிய சிலைக்கான உத்வேகம் நம்மிடையே உள்ளது.

பல நூற்றாண்டுகளாக ஆட்சியில் இருந்த அரச குடும்பங்கள், சர்தார் படேலின் முயற்சியால் நாட்டின் ஒற்றுமைக்கான புதிய அமைப்பிற்கு தங்கள் உரிமைகளை தியாகம் செய்துள்ளன. இந்த பங்களிப்பு சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த அரச குடும்பங்களின் தியாகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஏக்தா நகரில் கட்டப்படும். இது நாட்டின் ஒற்றுமைக்காக தியாகம் செய்யும் பாரம்பரியத்தை புதிய தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும்.

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Gyan Bharatam Portal Houses Over 88,800 Manuscripts, Government Informs Lok Sabha

Media Coverage

Gyan Bharatam Portal Houses Over 88,800 Manuscripts, Government Informs Lok Sabha
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses delight as Sarnath is inscribed on the UNESCO World Heritage List
July 25, 2026

Prime Minister Shri Narendra Modi today expressed that it is a proud moment for every Indian, sharing his delight that Sarnath in Uttar Pradesh has been inscribed on the UNESCO World Heritage List.

He noted that Sarnath has a close association with Lord Buddha, whose timeless message of wisdom, compassion and harmony inspires the world.

Shri Modi highlighted that this recognition celebrates India’s profound civilisational and spiritual heritage. The Prime Minister observed that it will also inspire more people across the world to come to Sarnath and connect with the ideals of Lord Buddha.

In a post on X, the Prime Minister shared:

 "A proud moment for every Indian!

Delighted that Sarnath in Uttar Pradesh has been inscribed on the UNESCO World Heritage List.

Sarnath has a close association with Lord Buddha, whose timeless message of wisdom, compassion and harmony inspires the world.

This recognition celebrates India’s profound civilisational and spiritual heritage. It will also inspire more people across the world to come to Sarnath and connect with the ideals of Lord Buddha.

@UNESCO"