Quoteஇன்று இந்தியா தனது பாரம்பரியம், அறிவு மற்றும் பழமையான போதனைகளின் அடிப்படையில் முன்னேறி வருகிறது: பிரதமர்
Quoteவளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தீர்மானத்துடன் அமிர்த காலத்தின் புதிய பயணத்தை நாம் தொடங்கியுள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அதனை நாம் நிறைவேற்ற வேண்டும்: பிரதமர்
Quoteநாட்டை கட்டமைப்பதில் அனைத்து பகுதிகளிலும் தலைமைத்துவப் பண்பிற்கு நமது இளைஞர்களை நாம் தயார்படுத்தி அரசியலிலும் வழிநடத்தச் செய்ய வேண்டும்: பிரதமர்
Quote21-ம் நூற்றாண்டின் இந்திய அரசியலில் புதிய முகமாக, நாட்டின் எதிர்காலமாக மாறும் ஒரு லட்சம் அறிவுசார் மற்றும் ஆற்றல் வாய்ந்த இளைஞர்களை அரசியலில் கொண்டு வருவதே எங்கள் லட்சிமயாகும்: பிரதமர்
Quoteஆன்மீகம், நீடித்த வளர்ச்சி ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு செயலாற்றுவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்: பிரதமர்

மதிப்பிற்குரிய சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ் அவர்களே, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் மதிப்புமிக்க துறவிகளே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, வணக்கம்!

குஜராத்தின் மைந்தன் என்ற முறையில், இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை சாரதா, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் பாதங்களில் நான் வணங்குகிறேன். இன்றைய நிகழ்ச்சி சுவாமி பிரேமானந்த் மகராஜ் ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறுகிறது. நானும் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

நண்பர்களே,

மகத்தான ஆளுமைகளின் ஆற்றல் பல நூற்றாண்டுகளாக உலகில் நேர்மறையான படைப்பாக்கத்தை விரிவுபடுத்துகிறது. அதனால்தான் இன்று, சுவாமி பிரேமானந்த் மகாராஜின் பிறந்த நாளில் இத்தகைய புனிதமான நிகழ்வை நாம் காண்கிறோம். லேகம்பாவில் புதிதாக கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபம் மற்றும் சாது இல்லம் பாரதத்தின் புனித பாரம்பரியத்தை வளர்க்கும். சேவை மற்றும் கல்விக்கான பயணம் இங்கே தொடங்குகிறது, இது பல தலைமுறைகளுக்கு பயனளிக்கும்.

 

|

நண்பர்களே,

ஒரு மரத்தின் ஆற்றலை அதன் விதையிலிருந்து அறியலாம். சுவாமி விவேகானந்தர் போன்ற பெரும் துறவிகளின் எல்லையற்ற சக்தியைக் கொண்ட அந்த மரமே ராமகிருஷ்ண மடம். எனவே, அதன் தொடர்ச்சியான விரிவாக்கமும் அது மனிதகுலத்திற்கு வழங்கும் நிழலும் எல்லையற்றது. ராமகிருஷ்ண மடத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள, ஒருவர் சுவாமி விவேகானந்தரைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் மிக முக்கியமாக, அவரது போதனைகளை பின்பற்றி வாழ வேண்டும். அவரது எண்ணங்களை நீங்கள் வாழத் தொடங்கிவிட்டால், ஒரு வித்தியாசமான ஒளி உங்களை எவ்வாறு வழிநடத்துகிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். இதை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன். ராமகிருஷ்ண மிஷனும், அதன் மகான்களும், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும் என் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்தின என்பதை பழைய மகான்கள் அறிவார்கள்.

நண்பர்களே,

தற்போது, ராமகிருஷ்ண மிஷன் உலகளவில் 280-க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது. மேலும் பாரதத்தில் ராமகிருஷ்ண இயக்கத்துடன் இணைந்த கிட்டத்தட்ட 1200 ஆசிரமங்கள் உள்ளன. இந்த ஆசிரமங்கள் மனித சேவை மையங்களாக செயல்படுகின்றன. ராமகிருஷ்ண மிஷனின் பணிகளுக்கு குஜராத் நீண்டகாலமாக சாட்சியாக இருந்து வருகிறது. கடந்த சில பத்தாண்டுகளில் குஜராத்தில் எப்போதெல்லாம் நெருக்கடி வந்ததோ, அப்போதெல்லாம் ராமகிருஷ்ண மிஷன் எப்போதும் அங்கேயே இருந்து மக்களுக்காக உழைத்து வந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகள் அனைத்தையும் நான் நினைவு கூர்ந்தால், அதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால் சூரத்தில் வெள்ளம் ஏற்பட்ட காலம், மோர்பி அணை சோகம், பூஜ் பூகம்பத்திற்குப் பிந்தைய விளைவுகள், பஞ்ச காலம் மற்றும் அதிக மழை பெய்த காலங்கள் உங்களுக்கு நினைவிருக்கும். குஜராத்தில் எப்போதெல்லாம் பேரிடர் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் ராமகிருஷ்ண மிஷனுடன் தொடர்புடையவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர். பூகம்பத்தால் அழிக்கப்பட்ட 80 க்கும் மேற்பட்ட பள்ளிகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் ராமகிருஷ்ண மிஷன் முக்கிய பங்கு வகித்தது. குஜராத் மக்கள் இந்த சேவையை இன்னும் நினைவுகூர்கிறார்கள், உத்வேகம் பெறுகிறார்கள்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தருக்கு குஜராத்துடன் சிறப்பான தொடர்பு உண்டு. அவரது வாழ்க்கைப் பயணத்தில் குஜராத் முக்கிய பங்கு வகித்தது. சுவாமி விவேகானந்தர் குஜராத்தில் பல இடங்களுக்குச் சென்றார். இங்குதான் சுவாமிஜி முதன்முதலில் சிகாகோ உலக மதங்களின் பாராளுமன்றத்தைப் பற்றி அறிந்தார். இங்கு பல சாஸ்திரங்களை ஆராய்ந்து வேதாந்தத்தை பரப்ப தன்னை தயார்படுத்திக் கொண்டார். 1891 ஆம் ஆண்டில், சுவாமிஜி போர்பந்தரில் உள்ள போஜேஷ்வர் பவனில் பல மாதங்கள் தங்கியிருந்தார். குஜராத் அரசு இந்த கட்டிடத்தை நினைவு கோயிலாக மாற்றுவதற்காக ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைத்தது. குஜராத் அரசு 2012 முதல் 2014 வரை சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டைக் கொண்டாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

சகோதர சகோதரிகளே,

சுவாமி விவேகானந்தர் நவீன அறிவியலின் பெரும் ஆதரவாளர். விஷயங்களை அல்லது நிகழ்வுகளை விவரிப்பதில் மட்டுமல்ல, நம்மை ஊக்குவித்து முன்னேற்றுவதிலும் அறிவியலின் முக்கியத்துவம் உள்ளது என்று சுவாமிஜி நம்பினார். தற்போது, நவீன தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் இருப்பு, உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பு மற்றும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான படிகள், நவீன உள்கட்டமைப்பு திட்டங்களுடன், பாரதம் அதன் அறிவு, பாரம்பரியம் மற்றும் பண்டைய போதனைகளின் அடிப்படையில் வேகமாக முன்னேறி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இளைஞர் சக்தியே நாட்டின் முதுகெலும்பு என்று சுவாமி விவேகானந்தர் நம்பினார். சுவாமிஜி ஒருமுறை கூறினார், "தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலுடன் நிரப்பப்பட்ட 100 இளைஞர்களை எனக்கு கொடுங்கள், நான் பாரதத்தை மாற்றுவேன்." இப்போது, இந்த பொறுப்பை நாம் ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

 

|

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தர் இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த மற்றும் தற்சார்பு தேசமாகக் காண விரும்பினார். அவரது கனவை நனவாக்க நாடு இப்போது அந்த திசையில் முன்னேறி வருகிறது. இந்தக் கனவு கூடிய விரைவில் நிறைவேறட்டும், வலிமையான, திறமையான இந்தியா மீண்டும் ஒருமுறை மனிதகுலத்திற்கு வழிகாட்டட்டும். இதற்காக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வுகளும், துறவிகளின் முயற்சிகளும் இதை அடைய ஒரு முக்கிய வழியாகும். மீண்டும் ஒருமுறை, இந்த நிகழ்ச்சிக்காக உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், வணக்கத்திற்குரிய அனைத்து புனிதர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்தப் புதிய தொடக்கம், புதிய சக்தியுடன், சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்குவதற்கான அடித்தளமாக அமையட்டும். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

 

  • Jitendra Kumar April 28, 2025

    ❤️🇮🇳🙏
  • Bhushan Vilasrao Dandade February 10, 2025

    जय हिंद
  • Vivek Kumar Gupta February 09, 2025

    नमो ..🙏🙏🙏🙏🙏
  • Vivek Kumar Gupta February 09, 2025

    नमो ...................🙏🙏🙏🙏🙏
  • Dr Mukesh Ludanan February 08, 2025

    Jai ho
  • Yash Wilankar January 29, 2025

    Namo 🙏
  • Jitendra Kumar January 27, 2025

    🇮🇳🇮🇳🇮🇳🙏❤️
  • Jayanta Kumar Bhadra January 14, 2025

    om Shanti Om namaste 🙏 🕉
  • krishangopal sharma Bjp January 13, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
  • krishangopal sharma Bjp January 13, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Modi’s India hits back: How Operation Sindoor is the unveiling of a strategic doctrine

Media Coverage

Modi’s India hits back: How Operation Sindoor is the unveiling of a strategic doctrine
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
We are moving towards an India where energy is cheap, clean and easily available: PM Modi in Alipurduar, West Bengal
May 29, 2025
QuoteToday when India is moving towards becoming a developed nation, the participation of Bengal is both expected and essential: PM
QuoteWith this intention, the Central Government is continuously giving new impetus to infrastructure, innovation and investment here: PM
QuoteBengal's development is the foundation of India's future: PM
QuoteThis city gas distribution project is not just a pipeline project, it is an example of doorstep delivery of government schemes: PM
QuoteWe are moving towards an India where energy is cheap, clean and easily available: PM


केंद्रीय मंत्रिमंडल के मेरे सहयोगी सुकांता मजूमदार जी, पश्चिम बंगाल विधानसभा के नेता प्रतिपक्ष, सुवेंदु अधिकारी जी, अलीपुरद्वार के लोकप्रिय सांसद भाई मनोज तिग्गा जी, अन्य सांसद, विधायक, और बंगाल के मेरे भाइयों और बहनों!

अलीपुरद्वार की इस ऐतिहासिक भूमि से बंगाल के सभी लोगों को मेरा नमस्कार!

अलीपुरद्वार की ये भूमि सिर्फ सीमाओं से नहीं, संस्कृतियों से जुड़ी है। एक ओर भूटान की सीमा है, दूसरी ओर असम का अभिनंदन है। एक ओर जलपाईगुड़ी का सौंदर्य है, दूसरी ओर कूचबिहार का गौरव है। आज इसी समृद्ध भू-भाग पर मुझे आप सबके दर्शन करने का सौभाग्य मिला है।

साथियों,

आज जब भारत विकसित राष्ट्र की ओर बढ़ रहा है, तो बंगाल की भागीदारी अपेक्षित भी है और अनिवार्य भी है। इसी इरादे के साथ, केंद्र सरकार यहां लगातार इंफ्रास्ट्रक्चर, इनोवेशन और इन्वेस्टमेंट को नई गति दे रही है। बंगाल का विकास, भारत के भविष्य की नींव है। और आज का दिन उसी नींव में एक और मजबूत ईंट जोड़ने का दिन है। कुछ देर पहले, हमने इस मंच से अलीपुरद्वार और कूचबिहार में सिटी गैस डिस्ट्रीब्यूशन प्रोजेक्ट का शुभारंभ किया है। इस प्रोजेक्ट से ढाई लाख से अधिक घरों तक, साफ, सुरक्षित और सस्ती गैस पाइपलाइन से पहुंचाई जाएगी। इससे ना सिर्फ रसोई के लिए सिलेंडर खरीदने की चिंता खत्म होगी, बल्कि परिवारों को सुरक्षित गैस सप्लाई भी मिल पाएगी। इसके साथ-साथ, सीएनजी स्टेशंस के निर्माण से ग्रीन फ्यूल की सुविधाओं का भी विस्तार होगा। इससे पैसे की भी बचत होगी, समय की भी बचत होगी, और पर्यावरण को भी राहत मिलेगी। मैं अलीपुरद्वार और कूचबिहार के नागरिकों को इस नई शुरुआत के लिए बधाई देता हूं। सिटी गैस डिस्ट्रीब्यूशन का ये प्रोजेक्ट, सिर्फ एक पाइपलाइन प्रोजेक्ट नहीं है, ये सरकार की योजनाओं की, डोर स्टेप डिलिवरी का भी एक उदाहरण है।

|

साथियों,

बीते कुछ वर्षों में भारत ने ऊर्जा के क्षेत्र में जो प्रगति की है, वो अभूतपूर्व है। आज हमारा देश गैस आधारित इकोनॉमी की तरफ तेज़ी से आगे बढ़ रहा है। 2014 से पहले, देश के 66 ज़िलों में सिटी गैस की सुविधा थी। आज 550 से ज्यादा ज़िलों में सिटी गैस डिस्ट्रीब्यूशन नेटवर्क पहुँच चुका है। ये नेटवर्क अब हमारे गांवों और छोटे शहरों तक पहुँच रहा है। लाखों घरों को पाइप से गैस मिल रही है। CNG की वजह से पब्लिक ट्रांसपोर्ट में भी बदलाव आया है। इससे प्रदूषण कम हो रहा है। यानि, देशवासियों की सेहत भी बेहतर हो रही है और जेब पर भी बोझ कम पड़ रहा है।

साथियों,
प्रधानमंत्री उज्ज्वला योजना से इस परिवर्तन में और गति आई है। हमारी सरकार ने वर्ष 2016 में ये योजना शुरू की थी। इस योजना ने करोड़ों गरीब बहनों का जीवन आसान बनाया है। इससे महिलाओं को धुएं से मुक्ति मिली है, उनका स्वास्थ्य सुधरा है, और सबसे बड़ी बात, घर की रसोई में सम्मान का माहौल बना है। 2014 में, हमारे देश में 14 करोड़ से कम LPG के कनेक्शन थे। आज ये संख्या 31 करोड़ से भी ज्यादा है। यानी हर घर तक गैस पहुँचाने का जो सपना था, वो अब साकार हो रहा है। हमारी सरकार ने इसके लिए देश के कोने-कोने में गैस डिस्ट्रिब्यूशन नेटवर्क को मजबूत किया है। इसलिए, देशभर में LPG डिस्ट्रीब्यूटरों की संख्या भी दोगुनी से ज्यादा हो चुकी है। 2014 से पहले देश में 14 हजार से भी कम LPG डिस्ट्रीब्यूटर थे। अब इनकी संख्या भी बढ़कर 25 हजार से ज्यादा हो गई है। गाँव-गाँव में अब आसानी से गैस सिलेंडर मिल जाते हैं

|

साथियों,

आप सभी ऊर्जा गंगा परियोजना से भी परिचित हैं। ये प्रोजेक्ट गैस आधारित अर्थव्यवस्था की दिशा में एक क्रांतिकारी कदम है। इस योजना के तहत गैस पाइपलाइन को पूर्वी भारत के राज्यों से जोड़ने का काम हो रहा है। अब पश्चिम बंगाल समेत पूर्वी भारत के अनेक राज्यों में गैस पाइप से पहुंच रही है। भारत सरकार के इन सारे प्रयासों से शहर हो या गांव, रोज़गार के नए अवसर भी बने हैं। पाइपलाइन बिछाने से लेकर गैस की सप्लाई तक, हर स्तर पर रोज़गार बढ़ा है। गैस आधारित इंडस्ट्रीज़ को भी इससे बल मिला है। अब हम एक ऐसे भारत की ओर बढ़ रहे हैं, जहाँ ऊर्जा सस्ती भी हो, स्वच्छ हो, और सर्वसुलभ हो।

|

साथियों,

पश्चिम बंगाल, भारत की संस्कृति का, ज्ञान विज्ञान का एक बड़ा केंद्र रहा है। विकसित भारत का स्वप्न, बंगाल के विकास के बिना पूरा नहीं हो सकता है। और इसी बात को ध्यान में रखते हुए, केंद्र सरकार ने बीते 10 वर्षों में यहां हजारों करोड़ के विकास कार्य शुरू करवाए हैं। पूर्वा एक्सप्रेसवे हो या दुर्गापुर एक्सप्रेसवे, श्यामा प्रसाद मुखर्जी पोर्ट का आधुनिकीकरण हो या कोलकाता मेट्रो का विस्तार हो, न्यू जलपाईगुड़ी स्टेशन का कायाकल्प हो या डुआर्स रूट पर नई ट्रेनों का संचालन हो, केंद्र सरकार ने बंगाल के विकास का हर संभव प्रयास किया है। आज जो ये प्रोजेक्ट शुरू हुआ है, वो भी सिर्फ एक पाइपलाइन नहीं, प्रगति की जीवन रेखा है। आपका जीवन आसान हो, आपका भविष्य उज्ज्वल हो, यही हमारा प्रयास है। हमारा बंगाल विकसित होने की दिशा में तेजी से आगे बढ़े, इसी कामना के साथ एक बार फिर, इन सारी सुविधाओं के लिए मैं ढेर सारी शुभकामनाएं देता हूं। अभी 5 मिनट के बाद, मैं यहां से एक खुले मंच पर जा रहा हूं, बहुत सी बातें आप मुझसे सुनना चाहते होंगे, वो मंच ज्यादा उपयुक्त है, इसलिए बाकी बातें मैं वही बताऊंगा 5 मिनट के बाद। इस कार्यक्रम में इतना ही काफी है, विकास के इस यात्रा को उमंग और उत्साह के साथ आप आगे बढा़एं।

बहुत-बहुत शुभकामनाएं, बहुत-बहुत धन्यवाद।