இரண்டு தசாப்தங்களுக்குப் பின் ஃபிடே போட்டி இந்திய மண்ணிற்கு மீண்டும் வருவதைக் குறிக்கும் வகையில், மதிப்புமிக்க ஃபிடே உலகக் கோப்பை 2025-ஐ நடத்த இந்தியா தயாராகி வருவதால், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகுந்த பெருமையையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் எக்ஸ் தளப் பதிவிற்குப் பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இரண்டு தசாப்தங்களுக்குப் பின் மதிப்புமிக்க ஃபிடே உலகக் கோப்பை 2025-ஐ நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. நமது இளைஞர்களிடையே செஸ் பிரபலமடைந்து வருகிறது. இந்தப் போட்டி மெய்சிலிர்க்கும் பல போட்டிகளைக் காணும் என்றும், உலகெங்கிலும் உள்ள சிறந்த வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்."
India is delighted to be hosting the prestigious FIDE World Cup 2025 and that too after over two decades. Chess is gaining popularity among our youth. I am sure this tournament will witness thrilling matches and showcase the brilliance of top players from around the world. https://t.co/iyfS7f3gGz
— Narendra Modi (@narendramodi) August 26, 2025


