ஜம்மு-காஷ்மீரில் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்த சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
'முழுமையான வேளாண் மேம்பாட்டுத் திட்டம்' ஜம்மு காஷ்மீரில் சுமார் 2.5 லட்சம் விவசாயிகளை பிரத்யேக தக்ஷ் கிசான் போர்ட்டல் மூலம் திறன் மேம்பாட்டுடன் ஆயத்தப்படுத்தும்; இத்திட்டத்தின் கீழ் சுமார் 2000 உழவர் சேவை மையங்களும் நிறுவப்படும்
சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், உள்நாட்டு சுற்றுலா மற்றும் பிரசாதத் திட்டத்தின் கீழ் ரூ.1400 கோடிக்கும் அதிகமான சுற்றுலாத் துறை திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைக்கிறார்
ஸ்ரீநகரின் 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தை' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
முக்கியமான மதத் தலங்கள், அனுபவ மையங்கள், சூழல் சுற்றுலாத் தலங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும்
சவால் அடிப்படையிலான சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட சுற்றுலாத் தலங்களைப் பிரதமர் அறிவிக்கிறார்
‘உங்கள் நாட்டைப் பாருங்கள் மக்கள் தேர்வு 2024' மற்றும் 'இந்த
இந்தத் திட்டம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான குறு குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 மார்ச் 7 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொள்கிறார். நண்பகல் 12 மணியளவில், ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி ஸ்டேடியத்தை அடையும் பிரதமர், அங்கு 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ஜம்மு-காஷ்மீரில் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.5000 கோடி மதிப்புள்ள 'முழுமையான விவசாய மேம்பாட்டு திட்டத்தை'ப் பிரதமர் தேசத்திற்கு அர்ப்பணிப்பார். ஸ்ரீநகரில் உள்ள 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' திட்டம் உட்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் பிரசாதத் (புனித யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீக, பாரம்பரிய விரிவாக்க இயக்கம்) திட்டத்தின் கீழ் ரூ.1400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுற்றுலாத் துறை தொடர்பான பல திட்டங்களையும் அவர் தேசத்திற்கு அர்ப்பணிப்பார். ‘உங்கள் நாட்டைப் பாருங்கள் மக்கள் தேர்வு 2024' மற்றும் 'இந்தியாவுக்கு செல்லுங்கள்' என்னும் உலக அளவிலான பிரச்சாரத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தல மேம்பாடு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களையும் அவர் அறிவிப்பார். இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் புதிதாக அரசுத் தேர்வில் சேரும் சுமார் 1000 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்குவார், மேலும் பெண் சாதனையாளர்கள், லட்சாதிபதி சகோதரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் கலந்துரையாடுவார்.

ஜம்மு-காஷ்மீரின் வேளாண் பொருளாதாரத்திற்கு  பெரும் ஊக்கமளிக்கும் ஒரு நடவடிக்கையாக, 'முழுமையான வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தை' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்பது ஜம்மு காஷ்மீரில் தோட்டக்கலை, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய வேளாண் பொருளாதாரத்தின் மூன்று முக்கிய களங்களில் முழு அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும். இந்தத் திட்டம் சுமார் 2.5 லட்சம் விவசாயிகளை பிரத்யேக தக்ஷ் கிசான் போர்ட்டல் மூலம் திறன் மேம்பாட்டுடன் ஆயத்தப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 2000 உழவர் சேவை மையங்கள் நிறுவப்பட்டு, விவசாய சமூகத்தின் நலனுக்காக வலுவான மதிப்புச் சங்கிலிகள் அமைக்கப்படும். இந்தத் திட்டம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான குறு குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய புனித தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதே பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும். இதற்கு ஏற்ப, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, உள்நாட்டு சுற்றுலா மற்றும் பிரசாதத் திட்டங்களின் கீழ் ரூ.1400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல முயற்சிகளைத் தொடங்குவார். பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ள திட்டங்களில் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' மேம்பாடு; மேகாலயாவில் வடகிழக்கு சுற்றுவட்டாரத்தில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டன; பீகார் மற்றும் ராஜஸ்தானில் ஆன்மீக சுற்றுலா; பீகாரில் கிராமப்புற மற்றும் தீர்த்தங்கர் சுற்றுலா; தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பா தேவி கோயில் மேம்பாடு; மத்தியப் பிரதேசத்தின் அன்னுபூர் மாவட்டத்தில் உள்ள அமர்கந்தக் கோயிலின் மேம்பாடு ஆகியவை இதில் அடங்கும்.

ஹஸ்ரத்பால் ஆலயத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்கும் முயற்சியிலும், அவர்களின் முழுமையான ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்தவும், 'ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சன்னதியின் எல்லைச் சுவர் கட்டுமானம் உட்பட முழுப் பகுதியின் தள மேம்பாடு திட்டத்தின் முக்கிய கூறுகளில் இதில் அடங்கும். ஹஸ்ரத்பால் ஆலய வளாகத்தின் ஒளியூட்டல், சன்னதியைச் சுற்றியுள்ள படித்துறைகள், தேவ்ரி பாதைகளை மேம்படுத்துதல், சூஃபி விளக்க மையம் அமைத்தல், சுற்றுலா உதவி மையம் கட்டுதல், அறிவிப்புப் பலகைகளை நிறுவுதல், பல அடுக்கு மாடி கார் பார்க்கிங், ஆலயத்தின் பொது கழிப்பிட தொகுதி மற்றும் நுழைவு வாயில் கட்டுமானமும் இந்தத் திட்டத்தில் செயல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தளங்களை மேம்படுத்தும் சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள அன்னாவரம் கோயில் போன்ற முக்கியமான மதத் தலங்களும் இதில் அடங்கும்; தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள நவக்கிரக கோயில்கள்; அருள்மிகு சாமுண்டீஸ்வரி தேவி திருக்கோயில், மைசூர் மாவட்டம், கர்நாடகா. கர்ணி மாதா மந்திர், பிகானேர் மாவட்டம் ராஜஸ்தான்; மா சிந்த்பூர்ணி கோயில், உனா மாவட்டம், இமாச்சல பிரதேசம்; பசிலிக்கா ஆஃப் போம் ஜீசஸ் சர்ச், கோவா ஆகியவை இதில் அடங்கும். இந்தத் திட்டங்களில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மெச்சுகா சாகச பூங்கா போன்ற பல்வேறு தளங்கள் மற்றும் அனுபவ மையங்களின் மேம்பாடு, உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் கிராமப்புற சுற்றுலா தொகுப்பு அனுபவம்; தெலங்கானா மாநிலம் அனந்தகிரி வனப்பகுதியில் சூழல் சுற்றுலா மண்டலம்; மேகாலயாவின் சோஹ்ராவில் உள்ள மேகாலயா வயது குகை அனுபவம் மற்றும் நீர்வீழ்ச்சி பாதைகள் அனுபவம்;   சின்னமாரா தேயிலைத் தோட்டத்தை மறுகற்பனை செய்தல், ஜோர்ஹாட், அசாம்; பஞ்சாபின் கபுர்தலாவில் உள்ள கஞ்ச்லி ஈரநிலத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலா அனுபவம்; ஜூல்லி லே பல்லுயிர் பூங்கா, லே போன்றவையும் இதில் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியின் போது, சவால் அடிப்படையிலான சுற்றுலாத்தல மேம்பாடு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 42 சுற்றுலாத் தலங்களைப்  பிரதமர் அறிவிப்பார். 2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தப் புதுமையான திட்டம், சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதே நேரத்தில் சுற்றுலாத் துறையில் நிலைத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் போட்டித்தன்மையைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக 42  இடங்கள் நான்கு பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.  (கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இலக்கு 16;   ஆன்மீக ஸ்தலங்கள் 11; சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் அமிர்த தரோஹரில் 10; எழுச்சிமிகு கிராமங்கள் 5).    

 

'உங்கள் நாட்டைப் பாருங்கள் மக்கள் தேர்வு 2024' என்ற வடிவத்தில், சுற்றுலா குறித்த தேசத்தின் துடிப்பை அடையாளம் காணும் நாடு தழுவிய முதல் முயற்சியைப் பிரதமர் தொடங்குவார். ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், இயற்கை & வனவிலங்குகள், சாகசம் மற்றும் பிற பிரிவுகளில் மிகவும் விருப்பமான சுற்றுலா தலங்களை அடையாளம் காணவும், சுற்றுலா உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் மக்களுடன் ஈடுபடுவதே நாடு தழுவிய வாக்கெடுப்பின் நோக்கமாகும். நான்கு முக்கிய பிரிவுகளைத் தவிர, 'மற்றவை' பிரிவில் ஒருவர் தங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிக்கலாம். ஆராயப்படாத சுற்றுலா ஈர்ப்புகள் மற்றும் துடிப்பான எல்லைக் கிராமங்கள், ஆரோக்கிய சுற்றுலா, திருமண சுற்றுலா போன்ற இடங்களின் வடிவத்தில் மறைக்கப்பட்ட சுற்றுலா ரத்தினங்களை வெளிக்கொணர உதவலாம். இந்தக் கருத்துக்கணிப்பு நிகழ்ச்சி மத்திய அரசின் குடிமக்கள் பங்கேற்கும் இணையதளமான MyGov தளத்தில் நடைபெறுகிறது.

 

வெளிநாடுவாழ் இந்தியர்கள் வியத்தகு இந்தியாவின் தூதர்களாக மாறுவதை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவுக்கு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் 'இந்தியாவுக்கு செல்லுங்கள் உலகளாவிய பிரச்சாரத்தை' பிரதமர் தொடங்கி வைப்பார். இந்தியரல்லாத குறைந்தது 5 நண்பர்களையாவது இந்தியாவுக்கு வர ஊக்குவிக்க வேண்டும் என்று வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கேட்டுக்கொண்ட பிரதமரின் அறைகூவலின் அடிப்படையில் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்படுகிறது. 3  கோடிக்கும்  அதிகமான   வெளிநாடு வாழ்  இந்தியர்களைக் கொண்டு,   இந்திய  வம்சாவளியினர்  இந்திய சுற்றுலாவுக்கு கலாச்சார தூதர்களாகவும், ஒரு சக்திவாய்ந்த ஊக்கியாகவும் செயல்பட முடியும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How PLI schemes, design in India and manufacturing excellence are transforming the architectural lighting industry

Media Coverage

How PLI schemes, design in India and manufacturing excellence are transforming the architectural lighting industry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Shilpa Kanchugarakoppalu Shyla on winning Bronze in Women’s Shot Put F57 at Commonwealth Games 2026
July 28, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has congratulated Shilpa Kanchugarakoppalu Shyla on winning the Bronze medal in the Women’s Shot Put F57 Final at the Glasgow Commonwealth Games 2026.

The Prime Minister said that Shilpa’s personal best throw made the achievement even more remarkable.

Shri Modi congratulated her on the accomplishment.

The Prime Minister wrote on X;

“A brilliant performance by Shilpa Kanchugarakoppalu Shyla at the Commonwealth Games 2026!

Congratulations to Shilpa for having won the Bronze Medal in the Women's Shot Put F57 Final and that too with a personal best throw. This is indeed a remarkable accomplishment.

#CWG2026”