மத்தியப் பிரதேசத்தில் ரூ.50,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
நர்மதாபுரத்தில் 'மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்', ரத்லாமில் பெரிய தொழிற்பூங்கா ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
இந்தூரில் இரண்டு தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் மாநிலம் முழுவதும் ஆறு புதிய தொழில் பூங்காக்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
சத்தீஸ்கரில் சுமார் ரூ.6,350 கோடி மதிப்பிலான பல முக்கியமான ரயில்வே துறை திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
சத்தீஸ்கரின் 9 மாவட்டங்களில் ‘அவசர சிகிச்சைப்பிரிவு கட்டடத்திற்கு' பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
ஒரு லட்சம் அரிவாள் செல் ரத்த சோகை நோய் தடுப்பு ஆலோசனை அட்டைகளை நிகழ்ச்சியின் போது பிரதமர் வழங்குகிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 செப்டம்பர் 14 அன்று மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11.15 மணியளவில் மத்தியப்  பிரதேசத்தின் பினா செல்லும் பிரதமர், அங்கு 'பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகம்' மற்றும் மாநிலம் முழுவதும் பத்து புதிய தொழில்துறை திட்டங்கள் உட்பட ரூ .50,700 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3:15 மணியளவில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் நகருக்கு செல்லும் அவர், அங்கு முக்கியமான ரயில்வே துறை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது,  சத்தீஸ்கரின் ஒன்பது மாவட்டங்களில்  'அவசர சிகிச்சைப்பிரிவு கட்டடங்களுக்கு' பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார், மேலும் ஒரு லட்சம் அரிவாள் செல் நோய்தடுப்பு ஆலோசனை அட்டைகளையும் வழங்குகிறார்.

 

மத்தியப் பிரதேசத்தில் பிரதமர்
மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை வழங்கும் ஒரு நடவடிக்கையாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல்  நாட்டுகிறார். சுமார் ரூ.49,000 கோடி செலவில் உருவாக்கப்படும் இந்த அதிநவீன சுத்திகரிப்பு ஆலை, ஜவுளி, பேக்கேஜிங், மருந்து போன்ற பல்வேறு துறைகளுக்கு முக்கிய அங்கமான எத்திலீன் மற்றும் புரோபிலீன் ஆகியவற்றை ஆண்டுக்கு சுமார் 1200 கே.டி.பி.ஏ (கிலோ-டன்) உற்பத்தி செய்யும். இது நாட்டின் இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கும் மற்றும் பிரதமரின் 'தற்சார்பு இந்தியா' கனவை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இருக்கும். இந்த மெகா திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பெட்ரோலியத் துறையில் கீழ்நிலை தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இந்நிகழ்ச்சியின் போது, நர்மதாபுரம் மாவட்டத்தில் 'மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்' என்ற 10 திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தூரில் இரண்டு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்; ரத்லாமில் ஒரு பெரிய தொழில் பூங்கா; மத்தியப் பிரதேசத்தில் ஆறு புதிய தொழில்துறை பகுதிகள்.

'மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம், நர்மதாபுரம்' ரூ.460 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்படும், இது பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு படியாகும். இந்தூரில் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் 'ஐ தகவல் தொழில்நுட்ப பூங்கா 3 மற்றும் 4' தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

ரூ.460 கோடிக்கும் அதிகமான செலவில் ரத்லாமில் பெரிய தொழில் பூங்கா கட்டப்படும், இது ஜவுளி, வாகன உற்பத்தி, மருந்துகள் போன்ற முக்கியத் துறைகளின் முக்கிய மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பூங்கா டெல்லி, மும்பை அதிவேக நெடுஞ்சாலையுடன் நன்கு இணைக்கப்படும் மற்றும் முழு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும், இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

மாநிலத்தில் சீரான பிராந்திய வளர்ச்சி மற்றும் சீரான வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில், ஷாஜாபூர், குணா, மௌகஞ்ச், அகர் மால்வா, நர்மதாபுரம் மற்றும் மக்சி ஆகிய ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் சுமார் ரூ .310 கோடி செலவில் உருவாக்கப்படும்.

 

சத்தீஸ்கரில் பிரதமர்

ராய்கரில் நடைபெறும் பொதுத் திட்டத்தில் சுமார் ரூ.6,350 கோடி மதிப்பிலான முக்கியமான ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் வலியுறுத்தலுக்கு  ஊக்கமளிக்கும். சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம் -1, சம்பா முதல் ஜம்கா வரை 3 வது ரயில் பாதை, பெந்த்ரா சாலை முதல் அனுப்பூர் வரை 3 வது ரயில் பாதை மற்றும் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை என்.டி.பி.சி லாரா சூப்பர் அனல் மின் நிலையத்துடன் (எஸ்.டி.பி.எஸ்) இணைக்கும் எம்.ஜி.ஆர் (மெர்ரி-கோ-ரவுண்ட்) அமைப்பு ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். இந்த ரயில் திட்டங்கள் இப்பகுதியில் பயணிகளின் இயக்கம் மற்றும்  சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்.

சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம் -1 பன்முக இணைப்பிற்கான தொலைநோக்குத் திட்டமான பிரதமர் விரைவுசக்தி - தேசிய மாஸ்டர் பிளானின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது, மேலும் இது கார்சியாவிலிருந்து தரம்ஜய்கர் வரை 124.8 கி.மீ ரயில் பாதையை உள்ளடக்கியது, இதில் கரே-பெல்மாவுக்கு ஒரு பாதை மற்றும் சால், பரோட், துர்காபூர் மற்றும் பிற நிலக்கரி சுரங்கங்களை இணைக்கும் 3 இணைப்புச்சாலைகள் அடங்கும். சுமார் ரூ.3,055 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாதையில், மின்மயமாக்கப்பட்ட அகல ரயில்பாதை லெவல் கிராசிங்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளுடன் கூடிய இரட்டைப் பாதை ஆகியவை உள்ளன. இது சத்தீஸ்கரின் ராய்கரில் அமைந்துள்ள மாண்ட்-ராய்கர் நிலக்கரி வயல்களில் இருந்து நிலக்கரி போக்குவரத்திற்கு ரயில் இணைப்பை வழங்கும்.

பெந்த்ரா சாலை முதல் அனுப்பூர் வரை 50 கி.மீ நீளமுள்ள மூன்றாவது ரயில் பாதை சுமார் ரூ .516 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. சம்பா மற்றும் ஜம்கா ரயில் பிரிவு இடையே 98 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்றாவது பாதை சுமார் 796 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதைகள் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்துவதோடு சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

65 கி.மீ நீளமுள்ள மின்மயமாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் (மெர்ரி-கோ-ரவுண்ட்) அமைப்பு தேசிய அனல்மின் நிலையத்தின் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள 1600 மெகாவாட்   லாரா சூப்பர் அனல் மின் நிலையத்திற்கு குறைந்த விலை, உயர் தர நிலக்கரியை வழங்கும். இது தேசிய அனல்மின் நிலையம் லாராவிலிருந்து குறைந்த செலவில் மற்றும் நம்பகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதை அதிகரிக்கும், இதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும்.  ரூ.2070 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர் அமைப்பு, நிலக்கரி சுரங்கங்களிலிருந்து மின் நிலையங்களுக்கு நிலக்கரி போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தொழில்நுட்ப அதிசயமாகும்.

இந்த நிகழ்ச்சியின் போது, சத்தீஸ்கரின் ஒன்பது மாவட்டங்களில் 50 படுக்கைகள் கொண்ட 'அவசரகால சிகிச்சைப்பிரிவு கட்டடங்களுக்கு' பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் - ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் துர்க், கொண்டகான், ராஜ்நந்த்கான், கரியாபந்த், ஜஷ்பூர், சூரஜ்பூர், சுர்குஜா, பஸ்தர் மற்றும் ராய்கர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.210 கோடிக்கும் அதிகமான செலவில் ஒன்பது  அவசர கால சிகிச்சைப்பிரிவு கட்டடங்கள் கட்டப்படும்.

அரிவாள் செல் ரத்த சோகை நோயால், குறிப்பாக பழங்குடி மக்களிடையே ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், பரிசோதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் அரிவாள் செல்  ரத்த சோகை நோய் தடுப்பு ஆலோசனை அட்டைகளையும் பிரதமர் வழங்குவார். மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் ஜூலை 2023-ல் பிரதமரால் தொடங்கப்பட்ட தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தின் கீழ் அரிவாள் செல் தடுப்பு ஆலோசனை அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report

Media Coverage

India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 20, 2026
July 20, 2026

Yuva to Global Stage: How PM Modi’s Policies Are Turning India’s Youth, Farms & Factories into Growth Engines