In a historic initiative for youth skilling, Prime Minister to launch PM-SETU for upgradation of 1,000 Government ITIs across the country with an investment of Rs.60,000 crore
Key focus: Youth Skilling and Education in Bihar
PM to launch Bihar’s revamped Mukhyamantri Nishchay Svyam Sahayata Bhatta Yojana, providing monthly allowance of Rs. 1,000 to 5 lakh Graduates for two years
PM to inaugurate Jan Nayak Karpoori Thakur Skill University in Bihar to boost Industry-Oriented courses and Vocational Education
PM to lay the foundation stone for new academic and research facilities in four universities of Bihar and dedicate new campus of NIT Patna in Bihta
PM to inaugurate 1,200 Vocational Skill Labs established in Navodaya Vidyalayas and Eklavya Model Residential Schools across 34 States and UTs
PM to Felicitate ITI Toppers at Kaushal Deekshant Samaroh

இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு முன்முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 4 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில்  தொடங்கிவைப்பார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது தேசிய திறன் பட்டமளிப்பு விழாவில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த 46 பேர் பாராட்டப்படுவார்கள்.

பிரதமர், ரூ.60,000 கோடி முதலீட்டில் மத்திய நிதியுதவி பெறும் திட்டமான பிஎம்-சேது (மேம்படுத்தப்பட்ட ஐடிஐகள் மூலம் பிரதமரின் திறன் அளித்தல் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் செய்தல்) திட்டத்தைத் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 1,000 அரசு ஐடிஐகளை, 200 மைய ஐடிஐகள் மற்றும் 800 நம்பிக்கை ஐடிஐகளை உள்ளடக்கிய ஒரு மையம்-மற்றும்-நம்பிக்கை மாதிரியில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, பிஎம்-சேது  இந்தியாவின் ஐடிஐ சூழல் அமைப்பை நன்கு மேம்படுத்தும். இது உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இணை நிதியுதவியுடன் அரசுக்கு  சொந்தமானதாக ஆனால் தொழில்துறையால் நிர்வகிக்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்டத்தில், பாட்னா மற்றும் தர்பங்காவில் உள்ள ஐடிஐகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் 200 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 1,200 தொழில் திறன் ஆய்வகங்களை பிரதமர் திறந்து வைப்பார். தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்ட தொழில்துறை சார்ந்த பாடங்களைக் கற்பிக்கவும், வேலைவாய்ப்புக்கான அடித்தளத்தை உருவாக்கவும் 1,200 தொழில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

பீகாரின் புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சரின் சுய உதவித்தொகை உறுதித் திட்டத்தைப் பிரதமர்

தொடங்கி வைப்பார். இதன் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பட்டதாரி இளைஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 மாதாந்தர உதவித்தொகை பெறுவார்கள்.  மேலும் இலவசத் திறன் பயிற்சியும் கிடைக்கும். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பீகார் மாணவர் கடன் அட்டைத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இது உயர்கல்வியின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும். ரூ.4 லட்சம் வரை முற்றிலும் வட்டியில்லா கல்விக் கடன்களை வழங்கும்.

உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதற்காக தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை வழங்க பீகாரில் உள்ள ஜன் நாயக் கற்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். உயர்கல்வி வழிகளை மேம்படுத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ முன்னெடுத்துச் செல்லும் பிரதமர், பீகாரின் நான்கு பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டுவார். மொத்தம் ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ள  இந்தத் திட்டங்கள், நவீன கல்வி உள்கட்டமைப்பு, நவீன ஆய்வகங்கள், விடுதிகள் மற்றும் பலதுறை கற்றலை செயல்படுத்துவதன் மூலம் 27,000-க்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயன் தரும்.

பீகார் அரசில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 4,000-க்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் வழங்குவார். மேலும், முதலமைச்சரின் சிறார் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் 25 லட்சம் மாணவர்களுக்கு நேரடிப் பயன் பரிமாற்றத்தின் மூலம் ரூ.450 கோடி உதவித்தொகையை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்குவார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
MSMEs’ contribution to GDP rises, exports triple, and NPA levels drop

Media Coverage

MSMEs’ contribution to GDP rises, exports triple, and NPA levels drop
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the importance of grasping the essence of knowledge
January 20, 2026

The Prime Minister, Shri Narendra Modi today shared a profound Sanskrit Subhashitam that underscores the timeless wisdom of focusing on the essence amid vast knowledge and limited time.

The sanskrit verse-
अनन्तशास्त्रं बहुलाश्च विद्याः अल्पश्च कालो बहुविघ्नता च।
यत्सारभूतं तदुपासनीयं हंसो यथा क्षीरमिवाम्बुमध्यात्॥

conveys that while there are innumerable scriptures and diverse branches of knowledge for attaining wisdom, human life is constrained by limited time and numerous obstacles. Therefore, one should emulate the swan, which is believed to separate milk from water, by discerning and grasping only the essence- the ultimate truth.

Shri Modi posted on X;

“अनन्तशास्त्रं बहुलाश्च विद्याः अल्पश्च कालो बहुविघ्नता च।

यत्सारभूतं तदुपासनीयं हंसो यथा क्षीरमिवाम्बुमध्यात्॥”