11 மாநிலங்களின் 11 பிஏசிஎஸ்களில் கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின்' முன்னோடித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
நாடு முழுவதும் கிடங்குகள் மற்றும் இதர வேளாண் உள்கட்டமைப்புகளுக்கான கூடுதலாக
நாடு முழுவதும் 18,000 பிஏசி-களை கணினிமயமாக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய முன்னெடுப்பாக, பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 பிப்ரவரி   24 அன்று காலை 10:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கூட்டுறவுத் துறைக்கான பல முக்கியத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

11 மாநிலங்களில் உள்ள 11 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) மேற்கொள்ளப்படும் 'கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின்' முன்னோடித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்த முன்முயற்சியின் கீழ், நாடு முழுவதும் கிடங்குகள் மற்றும் இதர வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக கூடுதலாக 500 பிஏசிஎஸ் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த முயற்சி பிஏசிஎஸ் கிடங்குகளை உணவு தானிய விநியோகச் சங்கிலியுடன் தடையின்றி ஒருங்கிணைப்பதையும், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், நபார்டின் ஆதரவுடனும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியுடனும் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண் உள்கட்டமைப்பு நிதி வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு போன்ற தற்போதுள்ள பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது, இதில் பங்கேற்கும் பிஏசிஎஸ் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்வதற்கான மானியங்கள் மற்றும் வட்டி மானிய நன்மைகளைப் பெற உதவுகிறது.

கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் அளித்து, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தலை நோக்கமாகக் கொண்ட "கூட்டுறவு மூலம் வளர்ச்சி" என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நாடு முழுவதும் உள்ள 18,000 பிஏசி-களில் கணினிமயமாக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

ரூ.2,500 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் இந்த நினைவுச்சின்னத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது அனைத்து செயல்பாட்டு பிஏசிஎஸ்- களையும் ஒருங்கிணைந்த நிறுவன வள திட்டமிடல் அடிப்படையிலான தேசிய மென்பொருளாக மாற்றுவதை உள்ளடக்கியது, இது தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்கிறது. மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த பிஏசிஎஸ்களை நபார்டு வங்கியுடன் இணைப்பதன் மூலம், தொடக்கக் கணக்குக் கணக்கின் செயல்பாட்டுத் திறன் மற்றும் ஆளுமையை மேம்படுத்தி, கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கென தேசிய அளவிலான பொது மென்பொருளை நபார்டு வங்கி உருவாக்கியுள்ளது. இஆர்பி மென்பொருளில் 18,000 பிஏசிஎஸ்-களை இணைப்பது நிறைவடைந்துள்ளது. இது திட்டத்தின் செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Shrimp industry gets a fresh lease of life after cut in US tariffs

Media Coverage

Shrimp industry gets a fresh lease of life after cut in US tariffs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Highlights the Power of Laughter for Health and Happiness sharing a Sanskrit Subhashitam
February 04, 2026

Prime Minister Shri Narendra Modi today shared an inspiring message rooted in ancient wisdom, emphasizing the timeless value of laughter as the best medicine.

Quoting a Sanskrit verse on X, the Prime Minister underscored that:

"औषधेष्वपि सर्वेषु हास्यं श्रेष्ठं वदन्ति ह।
स्वाधीनं सुलभं चैवारोग्यानन्दविवर्धनम्।। "