ஒரு காலத்தில் மிகவும் தொலைதூரத்தில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்குப் போக்குவரத்துத் தொடர்பை அதிகப்படுத்தவும் எளிதாக சென்றடைவதை விரிவுபடுத்தவுமான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலானவை இந்தத் திட்டங்கள்
தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம் பயண நேரத்தை 2.5 மணி அளவுக்குக் குறைக்கும்; வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாத வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய உயர்மட்ட பாதையாக இது இருக்கும்
சார்தாம் உள்ளிட்ட பகுதிகளுக்குத் தடையில்லா போக்குவரத்தை அளிப்பதாக சாலைத் திட்டங்கள் தொடங்கப்படுவது சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்தும்
அடிக்கடி மண்சரிவு ஏற்படும் பகுதியான லம்பாகட் மண்சரிவை கட்டுப்படுத்தும் திட்டம் பயணத்தை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும்

டேராடூனுக்குப்  பயணம் செய்யவிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை 2021 டிசம்பர் 4 அன்று பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்.  இந்த மண்டலத்தில் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் பயணத்தை மாற்றுவதற்கும், சுற்றுலாவை அதிகரிப்பதற்கும்  சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள்  பற்றியதாக இந்த பயணத்தின் நோக்கம் இருக்கும். ஒருகாலத்தில் மிகவும் தொலைதூரத்தில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்கு எளிதாகப் போக்குவரத்துத் தொடர்பை அதிகப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலானதாக இது இருக்கும்.

பதினோரு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.  ரூ.8,300 கோடி செலவில் கட்டப்படவுள்ள தில்லி – டேராடூன் (கிழக்கத்திய புறப்பகுதி விரைவுச்சாலை சந்திப்பிலிருந்து டேராடூன் வரை) பொருளாதார வழித்தடமும் இதில் அடங்கும்.  தில்லியிலிருந்து டேராடூனுக்கு 6 மணிநேர பயண நேரத்தை இது குறிப்பிடத்தக்க வகையில், 2.5 மணி நேரமாகக் குறைக்கும். 

இந்தப் பாதை ஹரித்துவார், முஸாபர்நகர், ஷாம்லி, யமுநகர், பாக்பட், மீரட், பாரௌட் ஆகிய ஏழு பெரிய இணைப்புச் சாலைகளைக் கொண்டிருக்கும்.  வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாத வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய உயர்மட்ட பாதையாக (12 கிமீ) இது இருக்கும்.  தத் காளி கோயில், டேராடூன் அருகே 340 மீட்டர் நீள சுரங்கப்பாதை, வன விலங்குகள் மீதான தாக்கத்தைக் குறைக்கவும் உதவும்.  மேலும், வன விலங்குகள் - வாகனங்கள் மோதுவதைத் தவிர்க்க கணேஷ்பூர் – டேராடூன் பிரிவில் பல இடங்களில் விலங்குகள் கடக்கும் இடங்களை இந்தப் பாதை கொண்டிருக்கும்.  தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தில் 500 மீட்டர் இடைவெளியில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளுக்கும், 400 க்கும் அதிகமான இடங்களில் தண்ணீர் தேக்கும் அமைப்புகளுக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. 

ஹல்கோவா, சஹரான்பூர் முதல் பத்ராபாத் வரை, ஹரித்துவார் ஆகியவற்றை இணைக்கும் தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தில் பசுமை நில இணைப்புத் திட்டம் ரூ.2,000 கோடி செலவில் கட்டமைக்கப்படும்.  இது தில்லியிலிருந்து ஹரித்துவார் வரை தடையில்லா போக்குவரத்தை வழங்குவதோடு பயண நேரத்தையும் குறைக்கும்.  மனோகர்பூரிலிருந்து  காங்கிரி வரையிலான ஹரித்துவார் சுற்றுவட்ட சாலைத் திட்டம் ரூ.1,600 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.  இது ஹரித்துவார் நகரில் குறிப்பாக சுற்றுலா காலம் உச்சத்தில் இருக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து நிவாரணத்தை வழங்குவதோடு, குமாவோன் மண்டலத்துடனான போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்தும். 

டேராடூன் – பௌவன்டா சாஹேப் (இமாச்சலப் பிரதேசம்) சாலைத் திட்டம் ரூ.1,700 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.  இந்த இரு இடங்களுக்கு இடையேயான  பயண நேரத்தை இது குறைப்பதோடு, தடையில்லா போக்குவரத்துத்  தொடர்பை வழங்கும்.  இது மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுலாவை அதிகரிக்கும்.  நசீமாபாத் – கோட்வார் சாலை விரிவுபடுத்தும் திட்டம், பயணநேரத்தைக் குறைப்பதோடு லான்ஸ்டோனுக்கு போக்குவரத்துத் தொடர்பையும் மேம்படுத்தும். 

லக்ஷம் ஜூலாவுக்கு அருகே கங்கை நதியின் குறுக்கே பாலம் ஒன்றும் கட்டப்படவுள்ளது.  1929-ல் கட்டப்பட்ட உலகறிந்த லக்ஷம் ஜூலா பாலத்தின் பாரம் தாங்கும் திறன் குறைந்ததன் காரணமாக இப்போது அது மூடப்பட்டுள்ளது.  இந்தப் பாலம்  கண்ணாடிப் பலகையின் மீது மக்கள் நடந்து செல்லும் வசதி கொண்டதாக இருப்பதோடு, இதன் மீது லேசான எடையுள்ள வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்படும். 

குழந்தைகள்  பாதுகாப்பாகப் பயணம் செய்யும் வகையில், டேராடூனில்  அமையவிருக்கும் குழந்தைகளுக்கு உகந்த நகர் திட்டத்திற்கும், பிரதமர்  அடிக்கல் நாட்டவுள்ளார்.  டேராடூனில் ரூ.700 கோடிக்கும் அதிக செலவிலான குடிநீர் விநியோகம், சாலை, கழிவு நீர்  தொடர்பான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. 

பொலிவுறு ஆன்மீக நகரங்கள் உருவாக்கம், சுற்றுலா தொடர்பான கட்டமைப்பு மேம்பாடு என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் ஸ்ரீபத்ரிநாத் தாம், கங்கோத்ரி – யமுனோத்ரி தாம் ஆகியவற்றின் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்படும்.  மேலும், ஹரித்துவாரில் ரூ.500 கோடிக்கும் அதிக செலவில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டப்படவுள்ளது. 

இந்த பிராந்தியத்தில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படும் பிரச்சனையைக் கையாண்டு பாதுகாப்பான பயணத்தின் மீது கவனம் செலுத்துவது உட்பட  7 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டங்களில் லம்பாகடில் (பத்ரிநாத் தாம் செல்லும் வழியில்) நிலச்சரிவைக் கட்டுப்படுத்தும் திட்டம், என் ஹெச்-58-ல் சகநிதார், ஸ்ரீநகர், தேவ்பிரயாக் ஆகிய இடங்களில் நிலச்சரிவை சரிசெய்யும் திட்டம் ஆகியவையும் அடங்கும்.  லம்பாகட்  நிலச்சரிவு கட்டுப்படுத்தும் திட்டம் என்பது  மண்சுவர் மற்றும் கல்சுவர் தடுப்புகளைக் கட்டுவதையும் உட்படுத்தியதாகும்.  இந்தத் திட்டம் அமையும் இடம் ராணுவ ரீதியில் மிக முக்கியமானதாகும்.  

சார்தாம் சாலை தொடர்பு திட்டத்தின்கீழ், தேவ் பிரயாக்கில் இருந்து ஸ்ரீகோட் வரையும் என் ஹெச்-58-ல் ப்ரம்பூரியிலிருந்து கொடியாலா வரையும் சாலை விரிவாக்கத் திட்டமும் தொடங்கி வைக்கப்படவுள்ளது. 

டேராடூனில் இமாலய கலாச்சார மையத்தோடு யமுனா நதிக்குக் குறுக்கே ரூ. 1,700 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்படவுள்ள 120 மெகாவாட் வியாசி புனல் மின் திட்டமும் தொடங்கி வைக்கப்படும். இந்த இமாலய கலாச்சார மையம் மாநில அளவிலான அருங்காட்சியகம், 800 இருக்கை கொண்ட  அரங்கம், நூலகம், கருத்தரங்க கூடம் இன்னபிறவற்றைக்  கொண்டிருக்கும்.  இது கலாச்சார நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற உதவுவதோடு, மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் போற்றுவதாகவும் இருக்கும். 

டேராடூனில் நவீன வாசனை திரவியம் மற்றும் நறுமணப் பொருட்கள் பரிசோதனைக் கூடத்தையும் (நறுமண தாவரங்களுக்கான மையம்) பிரதமர் தொடங்கி வைப்பார்.  இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வு வாசனைப் பொருட்கள், சோப்புகள், கிருமிநாசினி, காற்று சுத்தப்படுத்திகள், ஊதுவத்திகள் உள்ளிட்ட பலவகையான பொருட்களுக்குப் பயன்படும் என்பது நிரூபிக்கப்படும்.  மேலும், இந்தப் பகுதியில் இதுதொடர்பான தொழிற்சாலைகள் அமைவதற்கும் வழிவகுக்கும்.  மேலும், அதிக விளைச்சல் தரும் பலவகையான நறுமணத் தாவரங்களை உருவாக்குவதிலும் இது கவனம் செலுத்தும். 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Union Budget 2026-27: Strengthening India's long-term growth engines

Media Coverage

Union Budget 2026-27: Strengthening India's long-term growth engines
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi calls upon people to watch the special Pariksha Pe Charcha episode
February 03, 2026

The Prime Minister Shri Narendra Modi today invited citizens to watch the special Pariksha Pe Charcha episode on February 6, 2026, to witness these engaging conversations and the collective spirit of India’s youth.

As examination season approaches, Prime Minister once again engaged with young students through Pariksha Pe Charcha. This year, the interactive sessions were held with Exam Warriors in Devmogra, Coimbatore, Raipur, Guwahati, and at 7, Lok Kalyan Marg in Delhi.

The Prime Minister described the experience as refreshing and inspiring, noting the enthusiasm and openness of the students. He emphasized the importance of stress-free exams and shared practical insights on overcoming challenges, maintaining balance, and nurturing confidence.

In a post of X, Shri Modi stated:

"As the Parikshas are approaching, #ParikshaPeCharcha is back too!

This time, the Charcha happened with #ExamWarriors in Devmogra, Coimbatore, Raipur, Guwahati and at 7, LKM in Delhi. As always, it is refreshing to interact with my young friends and discuss stress free exams and several other things.

Do watch the PPC Episode on 6th February!"