தில்லி கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 2026 ஜனவரி 28 அன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெறவுள்ள என்சிசி பிஎம் ஆண்டு பேரணியில் உரையாற்ற உள்ளார்.
தேசம் முதன்மையானது – கடமைக்கு அர்ப்பணிப்புமிக்க இளையோர் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு பேரணி நடைபெறவுள்ளது. இந்திய இளைஞர்களிடையே கடமை உணர்வு, ஒழுக்கம், தேசிய உறுதிப்பாடு ஆகியவற்றை இது பிரதிபலிக்கிறது.
ஒரு மாதகாலம் நடைபெற்ற தேசிய மாணவர் படை குடியரசுதின முகாம் 2026-ன் நிறைவைக் குறைக்கும் வகையில், இப்பேரணி நடைபெறுகிறது. இந்த முகாமில், நாடு முழுவதிலுமிருந்து 898 மாணவிகள் உட்பட 2,406 என்சிசி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


