வளத்தின் உண்மையான அழகு, பணிவிலும் தன்னலமற்ற சேவையிலுமே அடங்கியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பொது நலன், சமூக நல்வாழ்வு என்ற உணர்வால் வழிகாட்டப்படும்போதுதான் வெற்றி அர்த்தமுள்ளதாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
"பழங்கள் நிறைந்த மரங்களும், மழை கனத்த மேகங்களும் பூமியை நோக்கி வளைவதைப் போல, கருணையுள்ள, உன்னதமான மனிதர்கள் செல்வத்தையும் புகழையும் அடைந்த பின்னரும் பணிவுடன் இருக்கின்றனர் என்று சுபாஷிதம் கூறுகிறது. கர்வத்திற்கு பதிலாக, அவர்கள் தங்கள் வாழ்க்கையை சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கிறார்கள்."
समृद्धि की शोभा विनम्रता और परोपकार में निहित है। सफलता वही सार्थक है, जिसमें लोककल्याण की भावना सर्वोपरि हो।… pic.twitter.com/MyMm5WhSlM
— Narendra Modi (@narendramodi) July 7, 2026


