Prime Minister pays homage to Sri Sathya Sai Baba at Prasanthi Nilayam
Prime Minister participates in Gaudan Ceremony organised by Sri Sathya Sai Central Trust

 

ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி சென்றடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஸ்ரீராம் என்ற மந்திர உச்சாடனத்துடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து ஓம்கார் மண்டபத்தில் அவர் வழிபாடு செய்தார். இந்த இடம் எல்லையற்ற கருணை மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட ஸ்ரீசத்ய சாய் பாபாவின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீசத்ய சாய் பாபாவின் தன்னலமற்ற சேவைகள் குறித்த போதனைகள் தொடர்ந்து நம்மை வழிநடத்துவதாகவும், லட்சக்கணக்கான மக்களால் பின்பற்றி வருவதாகவும் கூறினார். விலங்குகளுக்கான நலவாழ்வு தொடர்பான அம்சங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறிப்பிடத்தக்க பணிகள் உட்பட பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீசத்ய சாய் மத்திய அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோமாதா வழிபாட்டில் பிரதமர் பங்கேற்றார். இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டு வகை இனமான கிர் வகை பசுக்கள் உட்பட பல்வேறு பசுக்களைத் தானமாக  வழங்கினர். சமூகத்தின் நலனுக்காக ஒவ்வொருவரும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் போதனைகளைப் பின்பற்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் பிரதமர் பிரத்யேகமாக வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி சென்றடைந்ததும் அங்கு ஸ்ரீராம் என்ற மந்திர உச்சாடனத்துடன் தனக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.”

 

“Paid homage to Sri Sathya Sai Baba at the Sai Kulwant Hall, Prasanthi Nilayam and went to Omkar Hall for Darshan. Being in these sacred spaces is a reminder of his boundless compassion and lifelong commitment to uplifting humanity. His message of selfless service continues to guide and inspire millions.”

 

“Among the many noble deeds they are doing, the Sri Sathya Sai Central Trust has focused greatly on animal welfare. Today, took part in the Gaudan Ceremony, in which farmers are being given cows. The cows in the pictures below are Gir Cows! May we all keep working for the welfare of our society, as shown by Sri Sathya Sai Baba.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending

Media Coverage

Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026