தண்டியாத்திரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று (12.03.2026) நெக்ஸ்ட் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முன்முயற்சி ஆகியவற்றை பிரதமர் ஒப்பிட்டு பேசினார்.
1930-ம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரை சுதந்திரப் போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்தது போல தற்போதைய வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான நடவடிக்கைகள் 140 கோடி மக்களின் ஒருங்கிணைந்த இலக்காக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தண்டியாத்திரை நடைபெற்று 100 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய புதிய பயணத்தை தொடங்கியுள்ளதாக பிரதமர் கூறினார். 21-ம் நூற்றாண்டில் உலகளவில் பல்வேறு சாவல்கள் நிறைந்துள்ள சூழலில், இந்தியா நம்பிக்கை மற்றும் ஸ்திரத்தன்மையுடன் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். உலக நாடுகளின் தலைவர்கள் தற்போது இந்தியாவை வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கான முன்னோடி நாடாக கருதுவதைப் பிரதமர் குறிப்பிட்டார். அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்போது, பின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப், இனி உலகின் செயல்பாடுகளை தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளே தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியாவை மையமாகக் கொண்டு உலகின் பொருளாதார நடவடிக்கைகள் இருக்கும் என்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னி தெரிவித்துள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உலகளவிலான சவால்களுக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய நாடாக திகழும் என்று கருதுவதாக பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளதை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஒரு காலத்தில் சாத்தியமில்லாதது என்று கருதப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய அளவிலான சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவற்றில் இந்தியா முன்னணி நாடாக தற்போது திகழ்ந்து வருவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

நவீன இந்தியா வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமின்றி, புவிசார் மற்றும் டிஜிட்டல் சொத்துகளை உருவாக்குவது மூலம் உலகின் வலிமை வாய்ந்த நாடாக உயர்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நவீன இந்தியா வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமின்றி, புவிசார் மற்றும் டிஜிட்டல் சொத்துகளை உருவாக்குவது மூலம் உலகின் வலிமை வாய்ந்த நாடாக உயர்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
One goal, one destination... Viksit Bharat. pic.twitter.com/QTG8R5Qbtn
— PMO India (@PMOIndia) March 12, 2026
Despite many global crises, the world's leaders and experts look to India with great hope. pic.twitter.com/BoEMfjcsGS
— PMO India (@PMOIndia) March 12, 2026
If you want to be part of the future, you have to be in India. pic.twitter.com/8nPrWxVcMh
— PMO India (@PMOIndia) March 12, 2026
India is not just progressing.
— PMO India (@PMOIndia) March 12, 2026
India is moving to the Next. pic.twitter.com/mF8Sr2Yw2Y
India will make every effort to ensure that its farmers and citizens are protected from the burden of global challenges. pic.twitter.com/oqP4tNUvr8
— PMO India (@PMOIndia) March 12, 2026


