நாக்பூர் - விஜயவாடா பொருளாதார வழித்தடம் தொடர்பான முக்கிய சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஹைதராபாத் - விசாகப்பட்டினம் வழித்தடம் தொடர்பான சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறது
முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ஹைதராபாத் (கச்சிகுடா) - ராய்ச்சூர் - ஹைதராபாத் (கச்சிகுடா) ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தெலங்கானாவின் மஞ்சள் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசால் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்
ஹனம்கொண்டா, மகபூபாபாத், வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல வழிகளைத் திறக்கும் பொருளாதார நடைபாதை
புதிய சம்மக்கா-சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்திற்கு ரூ.900 கோடி செலவிடப்படும்

தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உயர் கல்வி போன்ற முக்கிய துறைகள் இந்த வளர்ச்சித் திட்டங்களில் அடங்கும். நிகழ்ச்சியின் போது, காணொலி மூலம் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பண்டிகை காலத்தின் வருகையை சுட்டிக் காட்டினார், மேலும் நாடாளுமன்றத்தில் நாரி சக்தி வந்தன் அதினியம் நிறைவேற்றப்பட்டது நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு சக்தி பூஜையின் உணர்வை நிறுவியுள்ளது என்றார். 

 

பிராந்தியத்தின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பல சாலை இணைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுவதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். நாக்பூர் - விஜயவாடா பொருளாதார வழித்தடம் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் போக்குவரத்து மற்றும் வணிகத்தை எளிதாக்கும். இந்த மாநிலங்களில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்துறைக்கு ஊக்கம் அளிக்கிறது. 8 சிறப்பு பொருளாதார மண்டலம், 5 மெகா உணவு பூங்காக்கள், 4 மீன்பிடி கடல் உணவு தொகுப்புகள், 3 மருந்து மற்றும் மருத்துவ குழுமங்கள் மற்றும் 1 ஜவுளி கிளஸ்டர் உள்ளிட்ட முக்கிய பொருளாதார மையங்கள் இந்த வழித்தடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இது ஹனம்கொண்டா, மகபூபாபாத், வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல வழிகளைத் திறக்கும் .

இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல தெலங்கானா போன்ற நிலத்தால் சூழப்பட்ட மாநிலத்திற்கு ரயில் மற்றும் சாலை இணைப்பின் அவசியத்தை பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டின் பல முக்கிய பொருளாதார வழித்தடங்கள் தெலங்கானா வழியாக செல்கின்றன. இவை அனைத்தும் மாநிலத்தை கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் ஊடகமாக மாறும். ஹைதராபாத் விசாகப்பட்டினம் வழித்தடத்தின் சூர்யபேட்-கம்மம் பிரிவும் இதற்கு உதவும். இது கிழக்கு கடற்கரையை அடைய உதவும். தவிர, தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களின் தளவாட செலவுகளும் குறைக்கப்படும். ஜக்லெய்ர் மற்றும் கிருஷ்ணா பிரிவு இடையே கட்டப்படும் ரயில் பாதை இங்குள்ள மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

 

தெலங்கானாவின் மஞ்சள் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசால் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். விநியோகச் சங்கிலியில் மதிப்புக் கூட்டலில் தேசிய மஞ்சள் வாரியம் கவனம் செலுத்தும் என்றும், விவசாயிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.  தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்பட்டதற்காக தெலங்கானா மற்றும் முழு நாட்டைச் சேர்ந்த மஞ்சள் பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

எரிசக்தி மற்றும் எரிசக்தி பாதுகாப்புத் துறையில் உலகெங்கிலும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பேசிய பிரதமர், இந்த அரசு தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்லாமல், வீடுகளுக்கும் எரிசக்தியைப் பாதுகாத்துள்ளது என்று எடுத்துரைத்தார். எல்பிஜி சிலிண்டர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 14 கோடியிலிருந்து 2023 ஆம் ஆண்டில் 32 கோடியாக அதிகரித்ததற்கான உதாரணத்தை அவர் கூறினார், மேலும் சமீபத்தில் எரிவாயு விலை குறைப்பையும் குறிப்பிட்டார். "நாட்டில் எல்பிஜி விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் உத்வேகம் அளிக்கிறது" என்று குறிப்பிட்ட பிரதமர், ஹாசன்-செர்லபள்ளி எல்பிஜி பைப்லைன் திட்டம் இப்பகுதி மக்களுக்கு எரிசக்தி பாதுகாப்பை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார். கிருஷ்ணபட்டினம் முதல் ஹைதராபாத் வரை பல தயாரிப்பு பெட்ரோலிய பைப்லைன் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்,  இது தெலுங்கானாவில் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும். 

 

முன்னதாக, ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பல கட்டிடங்களை பிரதமர் திறந்து வைத்தார்.   மத்திய அரசு ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு 'இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்' என்ற அந்தஸ்தையும், சிறப்பு நிதியையும் வழங்கியுள்ளது. முலுகு மாவட்டத்தில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் ஒன்றை மத்திய அரசு அமைக்க உள்ளது. இப்பல்கலைக்கழகத்திற்கு சம்மக்கா-சரக்கா என்ற பழங்குடி தெய்வங்களின் பெயர் சூட்டப்படும். சம்மக்கா-சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்திற்கு சுமார் 900 கோடி ரூபாய் செலவிடப்படும். இந்த மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்திற்காக தெலங்கானா மக்களுக்கு திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் பண்டி சஞ்சய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

நாடு முழுவதும் நவீன சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், பல சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த நிகழ்ச்சியின் போது செய்யப்பட்டன. நாக்பூர் - விஜயவாடா பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியான முக்கிய சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை -163 ஜி இன் வாரங்கலில் இருந்து கம்மம் பிரிவு வரை 108 கி.மீ நீளமுள்ள 'நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை' மற்றும் என்.எச் -163 ஜி இன் கம்மம் முதல் விஜயவாடா பிரிவு வரை 90 கி.மீ நீளமுள்ள 'நான்கு வழி அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட கிரீன்ஃபீல்டு நெடுஞ்சாலை' ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். சுமார் ரூ.6400 கோடி செலவில் இந்த சாலை திட்டங்கள் உருவாக்கப்படும். இந்த திட்டங்கள் வாரங்கல் மற்றும் கம்மம் இடையிலான பயண தூரத்தை சுமார் 14 கி.மீ குறைக்கும்; கம்மம் மற்றும் விஜயவாடா இடையே சுமார் 27 கி.மீ குறையும்.

தேசிய நெடுஞ்சாலை 365 பிபியின் சூர்யபேட்டை முதல் கம்மம் வரையிலான 59 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச்சாலை திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ.2,460 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த திட்டம் ஹைதராபாத் - விசாகப்பட்டினம் நடைபாதையின் ஒரு பகுதியாகும், மேலும் இது பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இது கம்மம் மாவட்டம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்கும்.

 

இந்தத் திட்டத்தின் போது, '37 கி.மீ., ஜக்லெய்ர் - கிருஷ்ணா புதிய ரயில் பாதையை' பிரதமர் அர்ப்பணித்தார். ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த புதிய ரயில் பாதை பிரிவு பின்தங்கிய மாவட்டமான நாராயண்பேட்டையின் பகுதிகளை முதல் முறையாக ரயில்வே வரைபடத்தில் கொண்டு வருகிறது. கிருஷ்ணா ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் (கச்சிகுடா) - ராய்ச்சூர் - ஹைதராபாத் (கச்சிகுடா) ரயில் சேவையை காணொலி  மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை தெலுங்கானாவின் ஹைதராபாத், ரங்காரெட்டி, மகபூப்நகர் மற்றும் நாராயண்பேட்டை மாவட்டங்களை கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்துடன் இணைக்கும். இந்தச் சேவை பின்தங்கிய மாவட்டங்களான மகபூப்நகர் மற்றும் நாராயண்பேட்டையில் உள்ள பல புதிய பகுதிகளுக்கு முதல் முறையாக ரயில் இணைப்பை வழங்கும், இது மாணவர்கள், தினசரி பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள உள்ளூர் கைத்தறி தொழிலுக்கு பயனளிக்கும்.

நாட்டில் தளவாட செயல்திறனை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்த் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த திட்டத்தின் போது செய்யப்பட்டன. 'ஹாசன்-செர்லபள்ளி எல்பிஜி பைப்லைன் திட்டத்தை' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ.2170 கோடி செலவில் கட்டப்பட்ட எல்பிஜி குழாய், கர்நாடகாவின் ஹாசனில் இருந்து செர்லபள்ளி (ஹைதராபாத்தின் புறநகர்) வரை, இப்பகுதியில் எல்பிஜி போக்குவரத்து மற்றும் விநியோகத்தின் பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையை வழங்குகிறது. கிருஷ்ணப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் (மல்காபூர்) வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (பிபிசிஎல்) மல்டி புரொடக்ட் பெட்ரோலியம் பைப்லைனுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ரூ.1940 கோடி செலவில் 425 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கப்படும். இந்த பைப்லைன் பிராந்தியத்தில் பாதுகாப்பான, வேகமான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பெட்ரோலிய பொருட்களை வழங்கும்.

 

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் 5 புதிய கட்டிடங்களான ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்,  கணிதம் மற்றும் புள்ளியியல் துறை; மேலாண்மை ஆய்வுகள் துறை; விரிவுரை அரங்க வளாகம் - III;  மற்றும் சரோஜினி நாயுடு கலை மற்றும் தொடர்பியல் புலம்  (இணைப்பு) ஆகியவற்றை பிரதமர் திறந்து வைத்தார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்குவதற்கான ஒரு படியாகும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
But where is India’s economic growth?

Media Coverage

But where is India’s economic growth?
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares moments from his metro journey to and from the SRCC programme
September 05, 2026

Prime Minister Shri Narendra Modi today shared glimpses of his metro journey while traveling to and from the SRCC programme.

In a post on X, the Prime Minister shared:

"Metro moments…

On the way to the SRCC programme and back."