India has embarked on the path of becoming self-reliant in meeting its energy needs: PM
Today, India ranks among the world's top 5 countries in solar power: PM
India needs two key things to become self-reliant - energy and semiconductors. Assam is playing a significant role in this journey: PM
We are constantly strengthening Assam's identity: PM

அசாமின் கோலாகாட்டில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு ஆலையில், அஸ்ஸாம் உயிரி எத்தனால் ஆலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று  திறந்து வைத்தார். பாலிப்ரொப்பிலீன் ஆலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கில் இருப்பதாகவும், இந்தப் பகுதிக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், அபரிமிதமான பாசத்தையும் ஆசீர்வாதங்களையும் பெறுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அசாமின் இந்தப் பகுதியில் தான் அனுபவிக்கும் தனித்துவமான அரவணைப்பு மற்றும் சொந்தம் என்ற உணர்வை அவர் எடுத்துரைத்தார்,

வளர்ச்சியடைந்த அசாம் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் தருணம் என்று திரு. மோடி கூறினார். அஸ்ஸாமுக்கு சுமார் ரூ 18,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். முன்னதாக, தர்ராங்கில் இணைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

 

அஸ்ஸாம் இந்தியாவின் எரிசக்தி திறன்களை வலுப்படுத்தும் நிலம் என்பதை எடுத்துரைத்த பிரதமர், அஸ்ஸாமில் இருந்து உருவாகும் பெட்ரோலியப் பொருட்கள் நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்று குறிப்பிட்டார். இந்த வலிமையை புதிய உயரத்திற்கு உயர்த்த தங்கள் அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார், நாடு முன்னேறும்போது, மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த எரிசக்தி தேவைகளுக்கு இந்தியா நீண்ட காலமாக வெளிநாட்டு ஆதாரங்களைச் சார்ந்து இருந்து வருகிறது, அதிக அளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். இதன் விளைவாக, நாடு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மற்ற நாடுகளுக்கு செலுத்த வேண்டியுள்ளது. இது வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடுகளில் வருமானத்தை அதிகரிக்கிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று திரு  மோடி வலியுறுத்தினார். இந்தியா இப்போது தனது எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவு பெறும் பாதையில் இறங்கியுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

இந்தியா ஒரே நேரத்தில் நாட்டிற்குள் புதிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளைக் கண்டுபிடிப்பதிலும், அதன் பசுமை எரிசக்தி திறன்களை மேம்படுத்துவதிலும் செயல்பட்டு வருவதைக் குறிப்பிட்ட திரு மோடி, 'சமுத்திர மந்தன்' முயற்சி குறித்து செங்கோட்டையிலிருந்து தனது அறிவிப்பை நினைவு கூர்ந்தார். இந்தியாவின் கடல்களில் கணிசமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு இருக்கலாம் என்ற நிபுணர் மதிப்பீடுகளை அவர் எடுத்துரைத்தார். இந்த வளங்கள் தேசிய வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டது குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

பசுமை எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் துறையில் இந்தியா விரைவான முன்னேற்றங்களை அடைந்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, சூரிய மின் உற்பத்தியில் இந்தியா கணிசமாக பின்தங்கியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இன்று, சூரிய மின்சக்தி திறனில் உலகளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது.

 

மாறிவரும் காலங்களில், எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தியாவுக்கு மாற்று எரிபொருள்கள் தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார். அத்தகைய ஒரு சாத்தியமான விருப்பமாக எத்தனாலை எடுத்துக்காட்டிய அவர்,  மூங்கிலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் ஒரு புதிய ஆலை இன்று திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முயற்சி அஸ்ஸாமில் உள்ள விவசாயிகள் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் கூறினார்.

 

 

உயிரி-எத்தனால் ஆலையை இயக்குவதற்கு மூங்கிலின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறிய திரு மோடி, மூங்கிலை வளர்ப்பதில் உள்ளூர் விவசாயிகளுக்கு அரசு ஆதரவளிக்கும் என்றும், அதை நேரடியாக கொள்முதல் செய்யும் என்றும் எடுத்துரைத்தார். மூங்கில் சிப்பிங் தொடர்பான சிறிய அலகுகள் இப்பகுதியில் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் துறையில் ஆண்டுதோறும் சுமார் ரூ 200 கோடி செலவிடப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இந்த ஒற்றை ஆலை இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

 

அஸ்ஸாமில் ஒரு புதிய வளர்ச்சி சகாப்தம் தொடங்கியுள்ளது, மேலும் அஸ்ஸாம் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கான முக்கிய மையமாக மாறத் தயாராக உள்ளது" என்று பிரதமர் தெரிவித்தார். வளர்ச்சித் திட்டங்களுக்கு அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதன் மூலம் வளர்ச்சியடைந்த அஸ்ஸாம் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டுத் தீர்மானத்தை உறுதிப்படுத்தி அவர் உரையை நிறைவு செய்தார்.

 

 

அசாமின் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள், திரு சர்பானந்த சோனோவால், திரு ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

அசாமின் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள், திரு சர்பானந்த சோனோவால், திரு ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian Railways is now world's second-most electrified large rail network: Vaishnaw

Media Coverage

Indian Railways is now world's second-most electrified large rail network: Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister announces fast-track courts for paper leak cases to safeguard the future of youth
July 23, 2026

Prime Minister Shri Narendra Modi today emphasized that nothing is more important than the welfare and future of the youth.

The Prime Minister stated that the government has decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Shri Modi noted that he has directed the concerned authorities and officials to take all necessary steps in this regard, adding that this continues a series of measures aimed at safeguarding the interests of students.

The Prime Minister firmly asserted that those who try to harm the future of the youth will not be spared.

In a post on X, the Prime Minister shared:

"Nothing is more important than the welfare and future of our youth!

We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interests of students.

Those who try to harm the future of our youth will not be spared.

देश के युवाओं का हित और उनका भविष्य हमारी सर्वोच्च प्राथमिकता है।

पेपर लीक के सभी मामलों में दोषियों को जल्द से जल्द कठोर दंड देने के लिए, केस के त्वरित निस्तारण के लिए फास्ट ट्रैक कोर्ट्स का गठन किया जाएगा। इस संबंध में निर्देश दे दिए गए हैं कि संबंधित विभाग आवश्यक कार्रवाई सुनिश्चित करें।

विद्यार्थियों के हितों को सुरक्षित करने के लिए, सरकार द्वारा लिए जा रहे निर्णयों की श्रृंखला में ये एक महत्वपूर्ण कदम है।

युवाओं के भविष्य के साथ खिलवाड़ करने वाले किसी भी व्यक्ति को बख्शा नहीं जाएगा।"