'பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்கு' அடிக்கல் நாட்டினார்
நர்மதாபுரத்தில் 'மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்' மற்றும் ரத்லாமில் மெகா தொழிற்பூங்கா ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்
இந்தூரில் இரண்டு தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் மாநிலம் முழுவதும் ஆறு புதிய தொழில் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்
"இன்றைய திட்டங்கள் மத்தியப் பிரதேசத்திற்கான எங்கள் தீர்மானங்களின் மகத்தான தன்மையைக் குறிக்கின்றன"
"எந்தவொரு நாட்டின் அல்லது எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், நிர்வாகம் வெளிப்படையானதாகவும், ஊழல் ஒழிக்கப்படவும் வேண்டியது அவசியம்"
‘’அடிமை மனப்பான்மையை கைவிட்டு, சுதந்திரம் என்ற நம்பிக்கையுடன் இந்தியா முன்னேறத் தொடங்கியுள்ளது’’
‘’இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கும் சனாதனத்தை உடைக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’’
"ஜி 20 இன் மகத்தான வெற்றி 140 கோடி இந்தியர்களின் வெற்றி"
"உலகை ஒன்றிணைத்து உலக நண்பனாக உருவெடுப்பதில் பாரதம் தனது நிபுணத்துவத
"இது மத்தியப் பிரதேசத்திற்கான எங்கள் தீர்மானங்களின் மகத்தான தன்மையைக் குறிக்கிறது", என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கும் சனாதனத்தை உடைக்க நினைப்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அவர், இதுபோன்ற போக்குகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
எந்தவொரு சகோதரியும் எரிவாயு இணைப்பிலிருந்து விடுபடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்", என்று பிரதமர் மேலும் கூறினார்.
2,60,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் பினாவில் ரூ.50,700 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின்   (பிபிசிஎல்) பினா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகம் சுமார் 49,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் திட்டங்களில் அடங்கும்;  நர்மதாபுரம் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்; இந்தூரில் இரண்டு ஐடி பூங்காக்கள்; ரத்லாமில் ஒரு மெகா தொழில் பூங்கா;  மத்தியப் பிரதேசம் முழுவதும் ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், புந்தேல்கண்ட் போர் வீரர்களின் பூமி என்று குறிப்பிட்டார். ஒரு மாதத்திற்குள் மத்தியப் பிரதேசத்தின் சாகருக்கு விஜயம் செய்வதைக் குறிப்பிட்ட அவர், இந்த வாய்ப்பிற்காக மத்தியப் பிரதேச அரசுக்கு நன்றி தெரிவித்தார். சந்த் ரவிதாஸ்  நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இன்றைய திட்டங்கள் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை வழங்கும் என்று பிரதமர் கூறினார். இந்தத் திட்டங்களுக்காக மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது, இது நாட்டின் பல மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார். "இது மத்தியப் பிரதேசத்திற்கான எங்கள் தீர்மானங்களின் மகத்தான தன்மையைக் குறிக்கிறது", என்று அவர் மேலும் கூறினார்.

 

 நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உறுதி பூண்டுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  பினா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட திரு. மோடி, பெட்ரோகெமிக்கல் துறையில் தற்சார்பு திசையில் இது ஒரு படி முன்னோக்கி இருக்கும் என்றார். பெட்ரோகெமிக்கல்கள் அதன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறிய அவர், "பினா சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகம் முழு பிராந்தியத்திலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வளர்ச்சியை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்" என்று கூறினார்.  இது புதிய தொழில்களுக்கு வழிவகுக்கும் என்பது மட்டுமல்லாமல், சிறு விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் மற்றும் இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். உற்பத்தித் துறையின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய பிரதமர், 10 புதிய தொழில் திட்டங்களுக்கான பணிகள் இன்று தொடங்கப்படுவது குறித்துத் தெரிவித்தார். நர்மதாபுரம், இந்தூர் மற்றும் ரத்லம் ஆகிய இடங்களில் உள்ள திட்டங்கள் மத்திய பிரதேசத்தின் தொழில்துறை திறனை அதிகரிக்கும் என்றும், இது அனைவருக்கும் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

எந்தவொரு மாநிலத்தின் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மத்தியப் பிரதேசம் நாட்டின் மிகவும் பலவீனமான  மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தை நினைவு கூர்ந்தார். "மத்தியப் பிரதேசத்தில் பல தசாப்தங்களாக ஆட்சி செய்தவர்களுக்கு குற்றம் மற்றும் ஊழலைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று திரு மோடி குறிப்பிட்டார். மாநிலத்தில் உள்ள குற்றவாளிகளுக்கு எவ்வாறு சுதந்திரம் இருந்தது, சட்டம் ஒழுங்கு மீதான பொதுமக்களின் நம்பிக்கையின்மை எப்படி இருந்தது என்பதை நினைவு கூர்ந்த திரு. மோடி, இதுபோன்ற சூழ்நிலைகள் தொழில்துறைகளை மாநிலத்திலிருந்து விரட்டியடித்தன என்றார். மத்தியப் பிரதேசம் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நிலைமையை மாற்ற தற்போதைய அரசாங்கம் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பது, மக்கள் மனதில் உள்ள அச்சத்தைப் போக்குவது, சாலைகள் அமைத்தல், மின்சார விநியோகம் போன்ற சாதனைகளை எடுத்துரைத்தார். மேம்பட்ட இணைப்பு மாநிலத்தில் ஒரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது, அங்கு பெரிய தொழிற்சாலைகள் தொழில் நடத்த அமைக்க தயாராக உள்ளன என்று அவர் கூறினார். அடுத்த சில ஆண்டுகளில் மத்தியப் பிரதேசம் தொழில்துறை வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டும் என்று திரு. மோடி நம்பிக்கை தெரிவித்தார். 

இன்றைய புதிய பாரதம் வேகமாக உருமாற்றம் அடைந்து வருவதாகக் கூறிய பிரதமர், அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டு ' சப்கா பிரயாஸ்' என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தனது அறைகூவலைக் குறிப்பிட்டார். "இந்தியா அடிமைத்தன மனநிலையை விட்டுவிட்டு, இப்போது சுதந்திரம் என்ற நம்பிக்கையுடன் முன்னேறத் தொடங்கியுள்ளது", என்று அவர் கூறினார். இது சமீபத்தில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பிரதிபலித்தது, இது அனைவருக்கும் ஒரு இயக்கமாக மாறியது என்றும், நாட்டின் சாதனைகள் குறித்து அனைவரும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார். ஜி 20 மாநாட்டின் மகத்தான வெற்றிக்கு மக்களை பிரதமர் பாராட்டினார். "இது 140 கோடி இந்தியர்களின் வெற்றி", என்று அவர் கூறினார். பல்வேறு நகரங்களில் நடந்த நிகழ்வுகள் பாரதத்தின் பன்முகத்தன்மையையும் திறன்களையும் வெளிப்படுத்தியதாகவும், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்ததாகவும் அவர் கூறினார். கஜுராஹோ, இந்தூர் மற்றும் போபாலில் நடந்த ஜி 20 நிகழ்வுகளின் தாக்கத்தை குறிப்பிட்ட அவர், இது உலகின் பார்வையில் மத்தியப் பிரதேசத்தின் பிம்பத்தை உயர்த்தியுள்ளது என்றார்.

 

ஒருபுறம், புதிய பாரதம் உலகை ஒன்றிணைத்து உலக நண்பனாக  உருவெடுப்பதில் தனது நிபுணத்துவத்தைக் காட்டுகிறது, மறுபுறம், தேசத்தையும் சமூகத்தையும் பிளவுபடுத்துவதில் சில அமைப்புகள் முனைப்புக் காட்டுகின்றன என்று பிரதமர் கூறினார். சமீபத்தில் அமைக்கப்பட்ட கூட்டணியைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் கொள்கைகள் இந்திய மதிப்புகளைத் தாக்குவதற்கும், அனைவரையும் ஒன்றிணைக்க உதவும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் பாரம்பரியங்களை அழிப்பதற்கும் ஏற்படுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டணி சனாதனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், தனது சமூக சேவையால் நாட்டின் நம்பிக்கையைப் பாதுகாத்த தேவி அகல்யாபாய் ஹோல்கர், ஆங்கிலேயர்களுக்கு சவால் விடுத்த ஜான்சி ராணி லட்சுமிபாய், பகவான் ஸ்ரீ ராமரால் ஈர்க்கப்பட்ட தீண்டாமை இயக்கம் மகாத்மா காந்தி, சமூகத்தின் பல்வேறு தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய சுவாமி விவேகானந்தர் ஆகியோரைக் குறிப்பிட்டார்.  பாரத அன்னையைப் பாதுகாக்க முன்முயற்சி எடுத்து, கணேஷ் பூஜையை சுதந்திர இயக்கத்துடன் இணைத்த லோக்மான்ய திலகர், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த சனாதனத்தின் அதிகாரத்தை பிரதமர் தொடர்ந்தார், இது சந்த் ரவிதாஸ், மாதா ஷாப்ரி மற்றும் வால்மீகி மகரிஷி ஆகியோரை பிரதிபலித்தது. இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கும் சனாதனத்தை உடைக்க நினைப்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அவர், இதுபோன்ற போக்குகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். 

நாட்டின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் பொது சேவைக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே உணர்வுப்பூர்வமான  அரசின் அடிப்படை தாரக மந்திரம் என்றார் அவர். தொற்றுநோய்களின் போது மக்களுக்கு ஆதரவான உதவிகள், 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் குறித்தும் பிரதமர் பேசினார்.

"மத்தியப் பிரதேசம் வளர்ச்சியின் புதிய உயரங்களை அடைய வேண்டும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையும் எளிதாகிறது, ஒவ்வொரு வீடும் செழிப்பைக் கொண்டுவருகிறது என்பது எங்கள் தொடர்ச்சியான முயற்சியாகும்" என்று பிரதமர் கூறினார். மோடியின் உத்தரவாதத்தின் சாதனைகள்  உங்கள் முன் உள்ளன". ஏழைகளுக்காக 40 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், கழிவறைகள், இலவச மருத்துவ சிகிச்சை, வங்கிக் கணக்குகள், புகையில்லா சமையலறைகள் ஆகியவற்றுக்கான உத்தரவாதங்களை நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். "இதன் காரணமாக, உஜ்வாலாவின் பயனாளி சகோதரிகள் இப்போது சிலிண்டரை ரூ .400 மலிவாகப் பெறுகிறார்கள்", என்று அவர் கூறினார். எனவே, நேற்று மத்திய அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்தது. நாட்டில் மேலும் 75 லட்சம் சகோதரிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும். எந்தவொரு சகோதரியும் எரிவாயு இணைப்பிலிருந்து விடுபடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்", என்று பிரதமர் மேலும் கூறினார்.

அரசாங்கம் அதன் ஒவ்வொரு உத்தரவாதத்தையும் நிறைவேற்ற முழு நேர்மையுடன் செயல்படுகிறது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒவ்வொரு பயனாளிக்கும் முழு நன்மைகளை உறுதி செய்யும் இடைத்தரகர்களை அகற்றுவதைக் குறிப்பிட்ட அவர், பயனாளியாக இருக்கும் ஒவ்வொரு விவசாயியும் ரூ .28,000 நேரடியாக அவரது வங்கிக் கணக்கில் பெற்ற பிரதமர் கிசான் சம்மான் நிதியின் எடுத்துக்காட்டைக் கூறினார். இந்த திட்டத்திற்காக அரசு ரூ.2,60,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

 

கடந்த 9 ஆண்டுகளில், விவசாயிகளின் செலவைக் குறைக்கவும், குறைந்த விலைக்கு உரங்களை வழங்கவும் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று கூறிய பிரதமர், 9 ஆண்டுகளில் ரூ .10 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டதைப் பற்றி தெரிவித்தார். அமெரிக்க விவசாயிகளுக்கு ரூ.3000 வரை செலவாகும் யூரியா மூட்டை இந்திய விவசாயிகளுக்கு ரூ.300-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. கடந்த காலங்களில் நடந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள யூரியா ஊழல்களை சுட்டிக்காட்டிய அவர், அதே யூரியா இப்போது எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கிறது என்று குறுக்கிட்டார்.

"புந்தேல்கண்டை விட நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவத்தை யார் நன்கு அறிவார்கள்", என்று பிரதமர் வினவினார்.  இரட்டை இயந்திர அரசாங்கத்தால் புந்தேல்கண்டில் நீர்ப்பாசன திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடுத்துரைத்தார். கென்-பெட்வா இணைப்புக் கால்வாயைக் குறிப்பிட்ட பிரதமர், இது புந்தேல்கண்ட் உட்பட இந்த பிராந்தியத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறினார். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீரை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், வெறும் 4 ஆண்டுகளில், நாடு முழுவதும் சுமார் 10 கோடி புதிய குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டுள்ளது என்றும், மத்திய பிரதேசத்தில் 65 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். "புந்தேல்கண்டில், அடல் நிலத்தடி நீர் திட்டத்தின் கீழ் நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கான பணிகளும் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று பிரதமர் மேலும் கூறினார்.

இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், ராணி துர்காவதியின் 500 வது பிறந்த நாள் 2023 அக்டோபர் 5 ஆம் தேதி மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும் என்று குறிப்பிட்டார்.

 நமது அரசின் முயற்சிகளால் ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மிகவும் பயனடைந்துள்ளனர் என்பதை அவர் விளக்கினார். "ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மாதிரி, 'சப்கா சாத் சப்கா விகாஸ்' இன்று உலகிற்கு வழி காட்டுகிறது", என்று கூறிய திரு மோடி, உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நாடு செயல்படுகிறது என்பதை எடுத்துரைத்தார். "இந்தியாவை டாப்-3 ஆக மாற்றுவதில் மத்தியப் பிரதேசம் பெரும் பங்கு வகிக்கும்" என்று கூறிய அவர், விவசாயிகள், தொழிற்சாலைகள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். இன்றைய திட்டங்கள் மாநிலத்தின் விரைவான வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். "அடுத்த 5 ஆண்டுகள் மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு புதிய உயரங்களைக் கொடுக்கும்" என்று கூறிய திரு மோடி தனது உரையை நிறைவு செய்தார். 

 

மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னணி

மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை வழங்கும் ஒரு நடவடிக்கையாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்  (பிபிசிஎல்) பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல்  நாட்டினார். சுமார் ரூ.49,000 கோடி செலவில் உருவாக்கப்படும் இந்த அதிநவீன சுத்திகரிப்பு ஆலை, ஜவுளி, பேக்கேஜிங், பார்மா போன்ற பல்வேறு துறைகளுக்கு முக்கிய கூறுகளான சுமார் 1200 கே.டி.பி.ஏ (ஆண்டுக்கு கிலோ-டன்) எத்திலீன் மற்றும் புரோபிலீன் ஆகியவற்றை உற்பத்தி செய்யும். இது நாட்டின் இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கும். பிரதமரின் 'தற்சார்பு இந்தியா' கனவை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இருக்கும். இந்த மெகா திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். பெட்ரோலியத் துறையில் கீழ்நிலை தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

 

இந்நிகழ்ச்சியின்போது, நர்மதாபுரம் மாவட்டத்தில் 'மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்', இந்தூரில் இரண்டு ஐடி பூங்காக்கள்; ரத்லாமில் ஒரு மெகா தொழில் பூங்கா; மற்றும் மத்தியப் பிரதேசம் முழுவதும் ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் என 10 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

'மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம், நர்மதாபுரம்' ரூ.460 கோடிக்கு மேல் உருவாக்கப்படும், இது பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு படியாகும். இந்தூரில் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் 'ஐடி பார்க் 3 மற்றும் 4' கட்டப்படும், இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடிஇஎஸ் துறைக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைத் திறக்கும்.

ரூ.460 கோடிக்கும் அதிகமான செலவில் ரத்லாமில் மெகா தொழில் பூங்கா கட்டப்பட உள்ளது, மேலும் ஜவுளி, ஆட்டோமொபைல் மற்றும் மருந்துகள் போன்ற முக்கிய துறைகளின் முக்கிய மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பூங்கா தில்லி மும்பை விரைவு சாலையுடன் நன்கு இணைக்கப்படும். இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும், இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

மாநிலத்தில் சீரான பிராந்திய வளர்ச்சி மற்றும் சீரான வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில், ஷாஜாபூர், குணா, மௌகஞ்ச், அகர் மால்வா, நர்மதாபுரம் மற்றும் மக்சி ஆகிய ஆறு புதிய தொழில்துறை பகுதிகள் சுமார் ரூ .310 கோடி செலவில் உருவாக்கப்படும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
'Gamcha' in the air: PM Modi leads celebrations after NDA secures sweeping victory in Bihar elections- Watch

Media Coverage

'Gamcha' in the air: PM Modi leads celebrations after NDA secures sweeping victory in Bihar elections- Watch
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings to people of Jharkhand on State Foundation Day
November 15, 2025
Prime Minister pays tributes to Bhagwan Birsa Munda on his 150th Jayanti

The Prime Minister, Shri Narendra Modi, has conveyed his heartfelt wishes to all people of Jharkhand on the occasion of the State’s Foundation Day. He said that Jharkhand is a glorious land enriched with vibrant tribal culture. Recalling the legacy of Bhagwan Birsa Munda, the Prime Minister noted that the history of this sacred land is filled with inspiring tales of courage, struggle and dignity.

The Prime Minister also extended his good wishes for the continued progress and prosperity of all families in the State on this special occasion.

The Prime Minister, Shri Narendra Modihas also paid respectful tributes to the great freedom fighter Bhagwan Birsa Munda on his 150th Jayanti. He said that on the sacred occasion of Janjatiya Gaurav Diwas, the entire nation gratefully remembers his unparalleled contribution to protecting the honour and dignity of the motherland. The Prime Minister added that Bhagwan Birsa Munda’s struggle and sacrifice against the injustices of foreign rule will continue to inspire generations to come.

The Prime Minister posted on X;

“जनजातीय संस्कृति से समृद्ध गौरवशाली प्रदेश झारखंड के सभी निवासियों को राज्य के स्थापना दिवस की बहुत-बहुत शुभकामनाएं। भगवान बिरसा मुंडा जी की इस धरती का इतिहास साहस, संघर्ष और स्वाभिमान की गाथाओं से भरा हुआ है। आज इस विशेष अवसर पर मैं राज्य के अपने सभी परिवारजनों के साथ ही यहां की प्रगति और समृद्धि की कामना करता हूं।”

“देश के महान स्वतंत्रता सेनानी भगवान बिरसा मुंडा जी को उनकी 150वीं जयंती पर शत-शत नमन। जनजातीय गौरव दिवस के इस पावन अवसर पर पूरा देश मातृभूमि के स्वाभिमान की रक्षा के लिए उनके अतुलनीय योगदान को श्रद्धापूर्वक स्मरण कर रहा है। विदेशी हुकूमत के अन्याय के खिलाफ उनका संघर्ष और बलिदान हर पीढ़ी को प्रेरित करता रहेगा।”