கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
கடந்த 10 ஆண்டுகளில் மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்காக எங்கள் அரசு முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகளை எடுத்துள்ளது: பிரதமர்
தற்போது, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற தீர்மானத்துடன் இந்தியா முன்னேறிச் செல்கிறது: பிரதமர்
மகளிருக்கு அதிகாரம் அளிக்க, அவர்கள் முன்னேறிச் செல்ல போதுமான வாய்ப்புகளைப் பெறுவதும், அவர்களின் பாதையில் உள்ள ஒவ்வொரு தடையும் அகற்றப்படுவதும் மிகவும் முக்கியம்: பிரதமர்
தற்போது லட்சக்கணக்கான மகள்களை குடும்ப சக்திகளாக மாற்றும் இயக்கம் தொடங்கியுள்ளது: பிரதமர்

மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிதி உள்ளடக்கம் குறித்த உறுதிப்பாட்டின் அடிப்படையில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் பானிபட்டில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது உரையாற்றிய திரு மோடி, மகளிருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கி இந்தியா மற்றொரு வலுவான அடியை எடுத்து வைக்கிறது என்று கூறினார். இன்று மாதத்தின் 9 வது நாளாக இருப்பது சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் எண் 9 நமது புனிதங்களில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது மற்றும் நவராத்திரியின் போது வணங்கப்படும் நவ துர்க்கையின் ஒன்பது வடிவங்களுடன் தொடர்புடையது என்று அவர் கூறினார். இன்றைய தினம் பெண் சக்தியை வழிபடும் நாளாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

டிசம்பர் 9 அன்றுதான் அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது என்பதையும் நினைவுகூர்ந்த பிரதமர், தற்போது நாடு அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், சமத்துவம் மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய இந்த நாள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது என்றார்.

 

நெறிமுறைகள் மற்றும் மத அறிவை உலகிற்கு வழங்கிய சிறந்த பூமி என்று ஹரியானாவைப் பாராட்டிய திரு மோடி, இந்த நேரத்தில், குருஷேத்ராவில் சர்வதேச கீதா ஜெயந்தி மஹோத்சவம் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். கீதை பூமியை வணங்கிய அவர், ஹரியானாவின் தேசபக்த மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். "ஒன்று இருந்தால் அதுவே பாதுகாப்பானது" என்ற மந்திரத்தை பின்பற்றியதற்காக ஹரியானா மக்களை திரு மோடி பாராட்டினார். இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

ஹரியானாவுடனான தனது உறுதியான உறவு மற்றும் பிணைப்பை வெளிப்படுத்திய பிரதமர், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சமீபத்தில் அமைக்கப்பட்ட மாநில அரசை அனைத்து தரப்பினரும் பாராட்டுவதாக அவர் மேலும் கூறினார். இங்கு அரசு அமைந்த பிறகு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊழல் இல்லாமல் நிரந்தர வேலை கிடைத்த முறையை நாடு கவனித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். ஹரியானா பெண்களுக்கு நன்றி தெரிவித்த திரு மோடி, நாட்டில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பீமா தோழிகள் திட்டத்தை தாம் தொடங்கியதாகக் குறிப்பிட்டு, அதற்காக அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பானிபட்டில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்கத்தை தொடங்கி வைத்த பெருமையை நினைவுகூர்ந்த பிரதமர், அது ஹரியானாவிலும், நாடு முழுவதிலும் நேர்மறையான பலனை ஏற்படுத்தியதாக சுட்டிக் காட்டினார். கடந்த பத்தாண்டுகளில் ஹரியானாவில் மட்டும் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். தற்போது பத்தாண்டுகளுக்குப் பிறகு, சகோதரிகள் மற்றும் மகள்களுக்கான பீமா சகி திட்டம் பானிபட்டின் இதே பூமியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். பானிபட் பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது என்றும் அவர் கூறினார்.

 

2047-ம் ஆண்டு  வளர்ச்சியடைந்த இந்தியா தீர்மானத்தை நிறைவேற்றி இந்தியா முன்னேறி செல்வதாக குறிப்பிட்ட திரு மோடி, 1947-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒவ்வொரு வகுப்பினர் மற்றும் பிராந்தியத்தின் சக்தியும் இந்தியாவை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றார். இருப்பினும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைய, இந்தியாவுக்கு பல புதிய சக்தி ஆதாரங்கள் தேவை என்று அவர் மேலும் கூறினார். வடகிழக்கு இந்தியா அத்தகைய ஒரு ஆதாரமாக இருப்பதால், மகளிர் சுய உதவிக் குழுக்கள், காப்பீட்டு தோழிகள், வங்கி தோழிகள், விவசாய தோழிகள் போன்ற மற்றொரு முக்கிய சக்தி ஆதாரமாக இந்தியாவின் பெண் சக்தி உள்ளது என்றும், இது வளர்ந்த இந்தியாவின் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் என்றும் திரு மோடி கூறினார்.

மகளிருக்கு அதிகாரம் அளிக்க போதுமான வாய்ப்புகளை உறுதி செய்வதும், அவர்கள் செல்வதற்கான பாதையில் உள்ள ஒவ்வொரு தடையையும் அகற்றுவதும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். மகளிருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டபோது, நாட்டின் வாய்ப்புகளுக்கான புதிய கதவுகள் திறக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். பெண்களுக்கு தடை செய்யப்பட்ட பல வேலைகளை அரசு தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்திய மகள்கள் தற்போது ராணுவத்தின் முன்னணியில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டார். இந்தியாவின் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் போர் விமானிகளாகவும், காவல்துறையில் பணியமர்த்தப்படுவதாகவும்,  பெரு நிறுவனங்களின் தலைவர்களாகவும் ஆகிறார்கள் என்றும் அவர் கூறினார். நாட்டில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் 1200 உற்பத்தியாளர் சங்கங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்கள் மகளிரால் தலைமை தாங்கப்பட்டு வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். விளையாட்டு முதல் கல்வி வரை ஒவ்வொரு துறையிலும் மாணவிகள் முன்னேறி வருவதாக அவர் கூறினார். கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை 26 வாரங்களாக உயர்த்தியதன் மூலம் லட்சக்கணக்கான மகள்கள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

இன்று தொடங்கப்பட்ட பீமா தோழிகள் திட்டத்தின் அடித்தளம் பல ஆண்டுகால கடின உழைப்பு மற்றும் தவத்தின் அடிப்படையிலானது என்று பிரதமர் குறிப்பிட்டார். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என்று குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த வங்கி அமைப்பிலிருந்தும் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார். மக்கள் வங்கி கணக்கு திட்டத்தின் கீழ், 30 கோடி மகளிருக்கு வங்கி கணக்குகள் வழங்கப்பட்டிருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்த திரு மோடி, எரிவாயு மானியம் போன்ற மானியங்கள் குடும்பத்தின் பொறுப்பான கரங்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக தனது அரசு பெண்களுக்காக மக்கள் வங்கி கணக்குகளைத் திறந்துள்ளது என்றார். செல்வமகள் சேமிப்புத் திட்டம், சொந்த வீடுகள் கட்டுவதற்கான நிதி, நடைபாதை வியாபாரிகளுக்கான கடைகள் அமைப்பதற்கான நிதி, முத்ரா திட்டம் போன்ற திட்டங்களிலிருந்து பணப் பரிமாற்றம் கிடைப்பதை உறுதி செய்யவும் மக்கள் நிதித் திட்டம் உதவியுள்ளது என்றும் அவர் கூறினார்.

 

ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி வசதிகளை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய பெண்களைப் பாராட்டிய பிரதமர், வங்கிக் கணக்கு கூட இல்லாதவர்கள் தற்போது கிராமவாசிகளை வங்கிகளுடன் வங்கி தோழிகள் என்ற பெயரில் இணைத்து வருவதாகக் கூறினார். வங்கியில் பணத்தை எவ்வாறு சேமிப்பது, கடன் பெறுவது எப்படி என்பதை வங்கி தோழிகள்  மக்களுக்கு கற்பிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும், இதுபோன்ற லட்சக்கணக்கான வங்கி தோழிகள் இன்று ஒவ்வொரு கிராமத்திலும் சேவைகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

முன்பு இந்தியப் பெண்கள் காப்பீடு எடுக்கவில்லை என்பதை நினைவுகூர்ந்த திரு மோடி, தற்போது லட்சக்கணக்கான மகளிர்  காப்பீட்டு முகவர்களை அல்லது பீமா தோழிகளை உருவாக்கும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். காப்பீடு போன்ற துறைகளின் விரிவாக்கத்திலும் தற்போது பெண்கள் முன்னிலை வகிப்பார்கள். பீமா சகி திட்டத்தின் கீழ், 2 லட்சம் மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே இலக்கு என்று பிரதமர் குறிப்பிட்டார். 10 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு பீமா சகி திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். எல்.ஐ.சி முகவர் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்பதைக் காட்டும் காப்பீட்டுத் துறை தொடர்பான புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய திரு மோடி, நமது பீமா தோழிகள் ஒவ்வொரு ஆண்டும் 1.75 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவார்கள் என்றும் இது குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும் என்றும் கூறினார்.

 

பீமா சகி பங்களிப்பு பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும்  மேலும் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் 'அனைவருக்கும் காப்பீடு' என்பதே நாளின் முடிவில் நோக்கம் என்று கூறினார். சமூக பாதுகாப்புக்கும், வறுமையை வேரோடு ஒழிக்கவும் இது அவசியம் என்று அவர் மேலும் கூறினார். அனைவருக்கும் காப்பீடு என்ற இயக்கத்தை பீமா தோழிகள் வலுப்படுத்தும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஒரு தனிநபர் காப்பீடு செய்யப்படும்போது, அதனால் கிடைக்கும் பயன் அளப்பரியது என்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா மற்றும் பிரதமரின் சுரக்ஷ  பீமா திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறினார். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் ரூபாய் 2 லட்சம் காப்பீடு மிகக் குறைந்த பிரீமியத்தில் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார். காப்பீடு பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாத நாட்டில் 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் காப்பீடு செய்துள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த இரண்டு திட்டங்களின் கீழ், இதுவரை சுமார் ரூ .20 ஆயிரம் கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். நாட்டில் உள்ள பல குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பதற்கு பீமா சகி பணியாற்றும் என்று திரு மோடி குறிப்பிட்டார். இது ஒரு வகையான புண்ணியப் பணி என்று அவர் கூறினார்.

 

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கிராமப்புற மகளிருக்காக உருவாக்கப்பட்ட புரட்சிகரமான கொள்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட கொள்கை முடிவுகள் உண்மையில் ஆய்வுக்குரியவை என்று தெரிவித்த பிரதமர், பீமா தோழிகள், வங்கி தோழிகள், கிருஷி தோழிகள், பஷு தோழிகள், ட்ரோன் தீதி, லக்பதி தீதி போன்ற திட்டங்கள் எளிமையானவையாகவும், பொதுவானவையாகவும் இருந்தாலும், அவை இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்கின்றன என்று கூறினார். இந்தியாவின் சுய உதவிக் குழு திட்டம் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை கருத்தில் கொண்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஊரகப் பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொண்டுவர மகளிர் சுய உதவிக் குழுக்களை அரசு பெரிய ஊடகமாக மாற்றியுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். நாடு முழுவதும் 10 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணைந்திருப்பதாகவும், கடந்த பத்தாண்டுகளில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிரின் பங்களிப்பு அசாதாரணமானது என்று பாராட்டிய பிரதமர், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்ற அவர்கள் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார். ஒவ்வொரு சமூகம், வர்க்கம் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த மகளிர் இதில் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு பெண்ணும் இதில் வாய்ப்புகளைப் பெற்று வருவதாகக் கூறினார். சுய உதவிக் குழுக்களின் இயக்கம் சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக நீதியை வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். சுய உதவிக் குழுக்கள் ஒரு பெண்ணின் வருமானத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, ஒரு குடும்பத்தின் மற்றும் ஒட்டுமொத்த கிராமத்தின் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

 

செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து 3 கோடி லட்சாதிபதி சகோதரிகள் உருவாக்கப்படுவார்கள் என்று தாம் அறிவித்ததையும், இதுவரை நாடு முழுவதும் 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமான லட்சாதிபதி சகோதரிகள் உருவாக்கப்பட்டுள்ளதையும் திரு மோடி நினைவுகூர்ந்தார். இந்தப் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கத் தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். லட்சாதிபதி சகோதரி இயக்கத்திற்கு அரசின் நமோ ட்ரோன் தீதி திட்டத்திலிருந்தும் தேவையான ஆதரவு கிடைத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். ஹரியானாவைச் சேர்ந்த நமோ துரோனோ தீதி பற்றிய கணக்கை விவரித்த திரு மோடி, இந்தத் திட்டம் விவசாயத்திலும், பெண்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

நாட்டில் நவீன வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆயிரக்கணக்கான விவசாய சாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சுமார் 70 ஆயிரம் விவசாய தோழிகள் ஏற்கனவே சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர் என்றும், இந்த விவசாய தோழிகள்கள் ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் அவர் கூறினார். பசு சாகிகள் பற்றி குறிப்பிட்ட திரு மோடி, கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பசு தோழிகள் தற்போது இணைந்துள்ளனர் என்றார். இவை வேலைவாய்ப்புக்கான வழிமுறை மட்டுமல்ல, மனிதகுலத்திற்கு ஒரு பெரிய சேவையைச் செய்கின்றன என்றும் அவர் கூறினார். வேளாண் தோழிகள் எதிர்கால சந்ததியினருக்காக பூமியைக் காப்பாற்ற மட்டுமின்றி, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மண்ணுக்கும் நமது விவசாயிகளுக்கும் சேவை செய்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல், நமது பசு தோழிகள் விலங்குகளுக்கு சேவை செய்வதன் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் புனிதமான பணியை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

 

நாட்டின் சகோதரிகள் மற்றும் தாய்மார்களிடமிருந்து பெறப்பட்ட அன்பு மற்றும் பாசத்தை பற்றி கூறிய திரு மோடி, கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகளைக் கட்டியுள்ளது என்றும், இதன் மூலம் கழிவறைகள் இல்லாத பல பெண்களுக்கு இது உதவியுள்ளது என்றும் கூறினார். இதேபோல், 10 ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு இணைப்பு இல்லாத கோடிக்கணக்கான பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார். குழாய் நீர் இணைப்புகள், அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் இல்லாத பெண்களுக்கு வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டது என்று அவர் மேலும் கூறினார். சட்டசபையிலும், மக்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவும் இயற்றப்பட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சரியான நோக்கங்களுடன் இதுபோன்ற நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசீர்வாதம் உறுதி செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

விவசாயிகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பணிகளைத் தொகுத்துப் பேசிய பிரதமர், முதல் இரண்டு பதவிக்காலங்களில் ஹரியானா விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையாக 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளனர் என்றும், ஹரியானாவில் மூன்றாவது முறையாக அரசு அமைந்த பிறகு, நெல்லுக்கு 14,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். சிறுதானியங்கள் மற்றும் பாசிப்பயறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதற்காக 800 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹரியானாவை பசுமைப் புரட்சியின் தலைமையாக மாற்றுவதில் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம் ஆற்றிய முக்கிய பங்கை நினைவுகூர்ந்த திரு மோடி, தற்போது 21-ம் நூற்றாண்டில், தோட்டக்கலைத் துறையில் ஹரியானாவை முன்னோடியாக மாற்றுவதில் மகாராணா பிரதாப் பல்கலைக்கழகத்தின் பங்கு மிகவும் அவசியமானதாக இருக்கும் என்றார். இன்று, மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றும், இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளைஞர்களுக்கு இது புதிய வசதிகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

 

ஹரியானா மாநிலம் விரைவாக வளர்ச்சி அடையும் என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் மூன்று மடங்கு விரைவாக செயல்படும் என்றும் உறுதியளித்தார். ஹரியானாவில் மகளிர் சக்தியின் பங்கு தொடர்ந்து வலுவாக வளரும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

ஹரியானா ஆளுநர் திரு. பண்டாரு தத்தாத்ரேயா, ஹரியானா முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி, மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு. கிரிஷன் பால் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி) 'பீமா சகி திட்டம்' பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-70 வயதுடைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதியியல் அறிவு மற்றும் காப்புறுதி விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் எல்.ஐ.சி முகவர்களாக பணியாற்ற முடியும். மேலும் பட்டதாரி பீமா தோழிகள் எல்.ஐ.சியில் மேம்பாட்டு அதிகாரியாக இருக்க பரிசீலிக்க தகுதி பெறுவார்.

கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் மற்றும் 495 ஏக்கர் பரப்பளவில் ஆறு பிராந்திய ஆராய்ச்சி நிலையங்கள் ரூ .700 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்படும். இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு ஒரு தோட்டக்கலைக் கல்லூரியும், 10 தோட்டக்கலைத் துறைகளை உள்ளடக்கிய ஐந்து பள்ளிகளும் இருக்கும். இது பயிர் மாற்றுத்தன்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியை நோக்கி செயல்படும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Parliament on verge of history, says PM Modi, as it readies to take up women's bills

Media Coverage

Parliament on verge of history, says PM Modi, as it readies to take up women's bills
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM to visit Karnataka on 15th April
April 14, 2026
PM to inaugurate Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri in Mandya
Sri Guru Bhairavaikya Mandira is a memorial dedicated to Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji, the 71st Pontiff of Sri Adichunchanagiri Mahasamsthana Math
PM to also jointly release the book titled “Saundarya Lahari and Shiva Mahimna Stotram” along with former Prime Minister Shri H. D. Deve Gowda ji

Prime Minister, Shri Narendra Modi will visit Karnataka on 15th April 2026. At around 11 AM, Prime Minister will inaugurate the Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri in Mandya district. He will also address the gathering on the occasion.

During the visit, Prime Minister will also jointly release the book titled “Saundarya Lahari and Shiva Mahimna Stotram” along with former Prime Minister Shri H. D. Deve Gowda ji.

Sri Guru Bhairavaikya Mandira is a memorial dedicated to the revered seer, Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji, the 71st Pontiff of Sri Adichunchanagiri Mahasamsthana Math. Constructed in the traditional Dravidian architectural style, the Mandira stands as a tribute to the life and legacy of the late seer. The Mandira is envisioned not only as a place of reverence but also as a source of inspiration for future generations.

Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji was widely respected for his lifelong commitment to social service, having established numerous educational institutions and healthcare facilities. He firmly believed that service to society is the highest form of worship, and his teachings transcended barriers of caste, creed, and region, inspiring millions.