Our government is committed to all-round development: PM
Today, I had the privilege of launching the nationwide HPV vaccination campaign from Ajmer, inaugurating and laying foundation stones for multiple projects and distributing appointment letters to the youth: PM
The HPV vaccination campaign has commenced from Ajmer, this campaign is a significant step towards empowering the Nari Shakti of the country: PM
The double-engine government is moving forward by taking both Rajasthan’s heritage and development together: PM
The campaign to link rivers started by our government will significantly benefit Rajasthan: PM
There is no shortage of sunlight in Rajasthan, this very sunshine is becoming a source of savings and income for the common man: PM
A very significant role is being played by the PM Surya Ghar Free Electricity Scheme, this scheme has the power to change Rajasthan's destiny: PM

ராஜஸ்தானின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.02.2026) அஜ்மீரில் ₹17,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

ராஜஸ்தானில் உள்ள "இரட்டை இன்ஜின் அரசு" இரண்டு ஆண்டு விரைவான முன்னேற்றத்தை நிறைவு செய்வதாக பிரதமர் தெரிவித்தார். மக்களுக்கு சேவை செய்வதற்காக கொடுக்கப்பட்ட வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி வருகிறது என்று அவர் கூறினார். தமது அரசு அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இன்று தொடங்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள் ராஜஸ்தான் மக்களின் வசதியை அதிகரிக்கும் எனவும் இளைஞர்களுக்கு மகத்தான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.

 

இன்று 21,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதன் மூலம், மாநில இளைஞர்களுக்கு ஒரு புதிய சகாப்தம் தொடங்குவதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். அஜ்மீரில் இருந்து நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு இருப்பது இந்தியாவின் மகளிர் சக்தியை மேம்படுத்துவதற்கும் தாய்மார்கள், மகள்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும் என்று அவர் விவரித்தார். குடும்பத்தில் ஒரு தாய் நோய்வாய்ப்பட்டால், வீடு முழுவதும் பாதிக்கப்படும் என்றும் தாய் ஆரோக்கியமாக இருந்தால், குடும்பம் எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார். இந்த உணர்வோடு, பெண்களுக்கு ஆதரவளிக்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

பெண்களின் ஆரோக்கியத்திற்கான அரசின் அணுகுமுறையை பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். உள்கட்டமைப்பு குறித்துப் பேசிய பிரதமர், சாலைகள், ரயில், விமானம் ஆகியவை மூலம் நவீன இணைப்பு ராஜஸ்தானின் நிலையை மாற்றி வருவதாகக் கூறினார். தில்லியில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு குறித்து திரு நரேந்திர மோடி பேசினார். உலகின் பல நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் இதற்கு வந்து திறந்த மனதுடன் இந்தியாவைப் பாராட்டினர் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

 

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஆயுதப் படைகளின் வெற்றியை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இந்திய ராணுவம் பயங்கரவாதிகளுக்கும், நாட்டின் எதிரிகளுக்கும் ஒவ்வொரு முனையிலும் பெரும் அடியை கொடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். துல்லிய தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை, ராணுவம் தமது திறமையை நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார்.

 

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஆயுதப் படைகளின் வெற்றியை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இந்திய ராணுவம் பயங்கரவாதிகளுக்கும், நாட்டின் எதிரிகளுக்கும் ஒவ்வொரு முனையிலும் பெரும் அடியை கொடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். துல்லிய தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை, ராணுவம் தமது திறமையை நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார்.

 

ராஜஸ்தானில் பிரதமரின் சூரிய ஒளி மின்சார வீடுகள் திட்டத்தின் முன்னேற்றத்தை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், சூரிய மின் தகடுகளை நிறுவுவதற்கு அரசு ₹78,000 உதவி வழங்குகிறது என்று அவர் கூறினார். ராஜஸ்தானில் ஏற்கனவே 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதில் இணைந்துள்ளதால், பல வீடுகளின் மின் கட்டணம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த ராஜஸ்தானிலிருந்து வளர்ச்சியடைந்த இந்தியா என்ற என்ற தொலைநோக்குப் பார்வை நிறைவேறும் என்று கூறி, பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரை நிறைவு செய்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Labour reforms: Govt fully operationalises four new codes by publishing rules

Media Coverage

Labour reforms: Govt fully operationalises four new codes by publishing rules
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister meets Andhra Pradesh Chief Minister Shri N. Chandrababu Naidu and his family in Hyderabad
May 10, 2026

The Prime Minister, Shri Narendra Modi met the Chief Minister of Andhra Pradesh, Shri N. Chandrababu Naidu, and his family at his residence in Hyderabad today.

The Prime Minister said that it is always a delight to meet Shri Chandrababu Naidu and his family and exchange views on a wide range of subjects and diverse topics.

The Prime Minister wrote on X;

“In Hyderabad, went to Andhra Pradesh Chief Minister Shri Chandrababu Naidu Garu’s residence and met him along with his family. It’s always a delight to meet them and exchange views on so many diverse topics.

@ncbn”