பிரதமர் திரு நரேந்திர மோடி, பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் சந்திப்புகளிலும் தனக்குக் கிடைத்த பரிசுகளின் தொகுப்பு அடங்கிய ஆன்லைன் ஏலம் தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஏலத்தின் மூலம் வரும் வருமானம், கங்கை நதியைச் சுத்தப்படுத்துதல் மற்றும் புத்துயிரளிப்பதற்கான இந்தியாவின் முதன்மையான திட்டமான நமாமி கங்கை திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஏலத்தில் பங்கேற்க அவர் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கடந்த சில நாட்களாக, எனக்கு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கிடைத்த பல்வேறு பரிசுகளுக்கான ஆன்லைன் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலைச் சித்தரிக்கும் மிகவும் சுவாரஸ்யமான கலைப் படைப்புகள் இந்த ஏலத்தில் உள்ளன. ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் நமாமி கங்கை திட்டத்துக்குச் செல்லும். அனைவரும் ஏலத்தில் பங்கு பெறுங்கள். pmmementos.gov.in”
Over the past few days, the online auction for the various gifts I have received during my different programmes has been underway. The auction includes very interesting works which illustrate the culture and creativity of India. The proceeds from the auction will go towards… pic.twitter.com/ONOq88XOXZ
— Narendra Modi (@narendramodi) September 24, 2025


