குறுகிய காலத்தில் 1.25 கோடிக்கும் அதிகமானோர் 'மோடியின் உத்தரவாதம்' வாகனத்துடன் இணைந்துள்ளனர்.
"வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை அரசாங்க சலுகைகளை நிறைவு செய்வதில் கவனம் செலுத்துகிறது, அவை இந்தியா முழுவதும் உள்ள மக்களை சென்றடைவதை உறுதிசெய்கின்றன"
'மோடியின் உத்தரவாதம்' என்பது நிறைவேற்றத்திற்கான உத்தரவாதம் என்று மக்கள் நம்புகிறார்கள்.
"வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை இதுவரை அரசாங்க திட்டங்களுடன் இணைக்க முடியாத மக்களைச் சென்றடைய ஒரு சிறந்த ஊடகமாக மாறியுள்ளது" என்று அவர் கூறினார்.
"எங்கள் அரசு ஒரு தந்தையின் அரசு அல்ல, மாறாக அது தந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சேவை செய்யும் அரசு"
"ஒவ்வொரு ஏழையும், பெண்ணும், இளைஞர்களும், விவசாயியும் எனக்கு வி.ஐ.பி.”
"பெண் சக்தி, இளைஞர் சக்தி, விவசாயிகள் அல்லது ஏழைகளாக இருந்தாலும், வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரைக்கு அவர்களின் ஆதரவு குறிப்பிடத்தக்கது"

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (வி.பி.எஸ்.ஒய்) பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து இலக்கு பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசின் முக்கிய திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு கிராமத்திலும் 'மோடியின் உத்தரவாதம்' வாகனம் கண்டு வரும் குறிப்பிடத்தக்க உற்சாகத்தைக் குறிப்பிட்டார். சிறிது நேரத்திற்கு முன்பு பயனாளிகளுடன் தான் உரையாடியதை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த பயணத்தின் போது 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

நிரந்தர வீடு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை, இலவச சிகிச்சை, இலவச ரேஷன், எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு, வங்கிக் கணக்கு தொடங்குதல், பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ் கிடைக்கும் நன்மைகள், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம், பிரதமர் ஸ்வநிதி யோஜனா மற்றும் பிரதமர் சுவாமித்வா சொத்து அட்டைகள் ஆகியவற்றின் நன்மைகளை அவர் குறிப்பிட்டார்.

 

நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் மீண்டும் எந்த அரசு அலுவலகத்திற்கும் செல்லாமல் அரசாங்கத்தின் சில திட்டங்களின் பயனைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

பயனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சலுகைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. "அதனால்தான் மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேற்றத்தின் உத்தரவாதம்", என்று மக்கள் கூறுவதாக அவர் மேலும் கூறினார்.

"வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை இதுவரை அரசாங்க திட்டங்களுடன் இணைக்க முடியாத மக்களைச் சென்றடைய ஒரு சிறந்த ஊடகமாக மாறியுள்ளது" என்று பிரதமர் குறிப்பிட்டார்.

வி.பி.எஸ்.ஒய்.யின் பயணம் ஒரு மாதத்திற்குள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பல நகரங்களை எட்டியுள்ளது, அங்கு 1.25 கோடிக்கும் அதிகமான மக்கள் 'மோடியின் உத்தரவாதம்' வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

'மோடியின் உத்தரவாதம்' வாகனத்தை வரவேற்ற  மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளை குறிப்பிட்ட பிரதமர் மோடி, தூய்மைப் பணிகள், விழிப்புணர்வை ஏற்படுத்த நடைபயிற்சி, பள்ளிகளில் பிரார்த்தனைக் கூட்டங்களில் குழந்தைகள் வளர்ந்த இந்தியாவைப் பற்றி விவாதிப்பது, ரங்கோலிகள் போடுவது, ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் விளக்குகள் ஏற்றப்படுவது ஆகியவற்றை குறிப்பிட்டார்.

ஊராட்சிகள் சிறப்புக் குழுக்களை அமைத்து வி.பி.எஸ்.ஒய்.யை வரவேற்கும் முக்கியப் பொறுப்பை ஏற்றிருப்பது குறித்து திரு. மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்களின் பங்களிப்பை பாராட்டிய அவர், வி.பி.எஸ்.ஒய் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதாக மனநிறைவு தெரிவித்தார்.

 

ஒடிசாவின் பல்வேறு இடங்களில் பாரம்பரிய பழங்குடி நடனத்துடன் யாத்திரை வரவேற்கப்படுவதைக் கவனித்த பிரதமர், மேற்கு காசி மலையில் உள்ள ராம்ப்ராய் என்ற இடத்தில் உள்ளூர் மக்கள் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் நடனத்தை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார்  தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் கார்கில் ஆகிய இடங்களில் 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு வி.பி.எஸ்.ஒய்.யை வரவேற்கும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் அவர் குறிப்பிட்டார்.

பணிகளை பட்டியலிடக்கூடிய ஒரு கையேட்டைத் தயாரிக்கவும், வி.பி.எஸ்.ஒய் வருவதற்கு முன்னும் பின்னும் முன்னேற்றத்தை அளவிடவும் பிரதமர் பரிந்துரைத்தார். "இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாகனம் இன்னும் சென்றடையாத பகுதிகளில் உள்ள மக்களுக்கும் இது உதவும்", என்று அவர் மேலும் கூறினார்.

 

கிராமத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் 'மோடியின் உத்தரவாதம்' வாகனம் வரும்போது அதை அடைவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார், இதன் மூலம் அரசுத் திட்டங்களின் இலக்குகள் நிறைவேறும்.

அரசின் முயற்சிகளின் தாக்கத்தை ஒவ்வொரு கிராமத்திலும் காண முடியும் என்று குறிப்பிட்ட திரு. மோடி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்புகளுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் புதிய பயனாளிகள் விண்ணப்பித்துள்ளதாகவும், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகளும் சம்பவ இடத்திலேயே வழங்கப்பட்டுள்ளன என்றும், லட்சக்கணக்கான மக்களின் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மற்றும் ஏராளமான மக்கள் இப்போது ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களுக்கும் பல்வேறு சோதனைகளுக்கும் செல்கின்றனர்.

"மத்திய அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே ஒரு நேரடி உறவை, உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நிறுவியுள்ளோம்" என்று திரு மோடி குறிப்பிட்டார். "எங்கள் அரசாங்கம் ஒரு தந்தையின் அரசு அல்ல, மாறாக இது தந்தை மற்றும் தாய்மார்களுக்கு சேவை செய்யும் அரசாங்கம்", என்று அவர் தொடர்ந்து பேசினார்.

 

" ஏழைகள், மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்களின் கதவுகள் கூட மூடப்பட்டவர்கள் ஆகியோர்தான் மோடியின் வி.ஐ.பி.க்கள்.". நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையும் தனக்கு விஐபியாக கருதப்படுகிறார் என்று அவர் குறிப்பிட்டார். "நாட்டின் ஒவ்வொரு தாய், சகோதரி மற்றும் மகள் எனக்கு வி.ஐ.பி. நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் எனக்கு விஐபி தான். நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களும் எனக்கு விஐபி தான்" என்று பிரதமர் மோடி கூறினார்.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், தேர்தல் முடிவுகள் மோடியின் உத்தரவாதத்தின் செல்லுபடியாகும் தன்மைக்கு தெளிவான அறிகுறியைக் கொடுத்துள்ளன என்றார். மோடியின் உத்தரவாதத்துக்கு நம்பிக்கை தெரிவித்த அனைத்து வாக்காளர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக நிற்பவர்கள் மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கை குறித்து சிந்தித்த பிரதமர், பொய்யான கூற்றுக்களை முன்வைக்கும் அவர்களின் போக்கை எடுத்துக்காட்டினார். சமூக வலைத்தளங்களில் அல்ல, மக்களை சென்றடைவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

"தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன், மக்களின் இதயங்களை வெல்வது அவசியம்" என்று குறிப்பிட்ட பிரதமர், பொது மனசாட்சியை குறைத்து மதிப்பிடுவதற்கான அவர்களின் விருப்பத்தை சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சிகள் அரசியல் நலனை விட சேவை மனப்பான்மையை முதன்மையாக வைத்திருந்தால், நாட்டின் மக்களில் பெரும் பகுதியினர் வறுமையில் இருந்திருக்க மாட்டார்கள் என்றும், இன்றைய மோடியின் உத்தரவாதங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேறியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை பற்றி குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையில் ஏராளமான பெண்கள் பங்கேற்கின்றனர் என்று குறிப்பிட்டார். பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4 கோடி வீடுகளில் 70 சதவீத பெண்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். 10 முத்ரா பயனாளிகளில் 7 பேர் பெண்கள், சுமார் 10 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்களில் உள்ளனர். திறன் மேம்பாடு மூலம் 2 கோடி பெண்கள் கோடீஸ்வர சகோதரிகளாகவும், 15 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் ட்ரோன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரைக்கு பெண்கள் சக்தி, இளைஞர் சக்தி, விவசாயிகள் மற்றும் ஏழைகளின் ஆதரவை பிரதமர் மோடி பாராட்டினார். இந்த பயணத்தின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டுள்ளது, இது இளம் வீரர்களை மேலும் ஊக்குவிக்கும் என்று அவர் திருப்தி தெரிவித்தார்.

'மை பாரத் தொண்டர்' என்று தங்களைப் பதிவு செய்வதில் இளைஞர்கள் காட்டும் அபரிமிதமான ஆர்வத்தைக் குறிப்பிட்ட பிரதமர், இது வளர்ந்த இந்தியாவுக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என்றார். "இந்த தன்னார்வலர்கள் அனைவரும் இப்போது ஃபிட் இந்தியா என்ற மந்திரத்தை எடுத்துக்கொண்டு முன்னேறுவார்கள்" என்று கூறிய பிரதமர், தண்ணீர், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி அல்லது உடற்கட்டுக்கோப்பு மற்றும் இறுதியாக போதுமான தூக்கம் ஆகிய நான்கு விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தினார்.

ஆரோக்கியமான உடலுக்கு இந்த நான்கும் மிகவும் அவசியம். இந்த நான்கில் நாம் கவனம் செலுத்தினால், நமது இளைஞர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள், நமது இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது நாடு ஆரோக்கியமாக இருக்கும்" என்று பிரதமர் கூறினார்.

இந்த வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் போது எடுக்கப்பட்ட உறுதிமொழிகள் உயிர் மந்திரங்களாக மாற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் முழு பக்தியுடன் ஒன்றிணைய வேண்டும். அனைவரின் முயற்சியின் மூலம் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும்" என்று திரு. மோடி முடித்தார்.

பின்னணி

நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை பயனாளிகள் இந்த திட்டத்தில் மெய்நிகர் முறையில் இணைந்தனர். நாடு முழுவதிலுமிருந்து 2,000 க்கும் மேற்பட்ட வி.பி.எஸ்.ஒய் வேன்கள், ஆயிரக்கணக்கான வேளாண் அறிவியல் மையங்கள் (கே.வி.கே) மற்றும் பொது சேவை மையங்களும் (சி.எஸ்.சி) இந்த திட்டத்தின் போது இணைக்கப்பட்டன. இதில் ஏராளமான மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
The great toy turnaround: Made in India, played across the world

Media Coverage

The great toy turnaround: Made in India, played across the world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi participated in the 3rd India-Australia Annual Summit hosted by the Prime Minister of Australia, the Hon. Anthony Albanese MP, in Melbourne on 9 July 2026. On arrival at Government House, Prime Minister Modi was warmly received by Prime Minister Albanese and accorded a ceremonial welcome.

The Prime Ministers held one-on-one discussions followed by delegation level talks. They welcomed the successful completion of six years of the India-Australia Comprehensive Strategic Partnership. The two leaders reviewed the significant progress achieved across the full spectrum of bilateral relations and discussed ways to further deepen cooperation in priority areas, including trade and investment, defence and security, critical minerals, cyber and emerging technologies, space, civil nuclear, clean energy, education, and people-to-people ties.

The two Prime Ministers noted the expanding economic partnership and reaffirmed their commitment to early finalization of an ambitious, balanced and mutually beneficial Comprehensive Economic Cooperation Agreement (CECA). They welcomed the outcomes of the Australia-India CEOs Forum and the discussions of the Economic Business Roadmap event held earlier in the day and encouraged businesses from both countries to explore new investment opportunities in priority sectors. They also highlighted the continued expansion of education cooperation between the two countries. In this context, they noted with satisfaction the growing presence of Australian universities in India and the contribution of educational partnerships towards building a future-ready workforce, fostering innovation, and strengthening people-to-people ties.

The leaders appreciated the vibrant Indian diaspora in Australia for its significant contribution to Australian society and for serving as a living bridge between the two countries. They also noted the growing cultural exchanges that continue to deepen mutual understanding and welcomed the voluntary return to India of several cultural artefacts held by Australian institutions. These artefacts of Tamil Nadu origin – a stone sculpture of sacred Nandi, a metal Trident with the image of Bhadrakali, and a six headed Karthikeya statue in stone - will be transported back to India in due course.

The two Prime Ministers reaffirmed their commitment to further deepen the multifaceted India-Australia Comprehensive Strategic Partnership. They also exchanged views on regional and global developments and reaffirmed their commitment to a free, open, and prosperous Indo-Pacific.

On the occasion of the visit, the two sides finalised MoUs/ agreements in the fields of maritime security, civil nuclear energy, skill development, emerging technologies, science and technology and film making. In addition, they also concluded bilateral documents in the fields of defence and security, energy security, education, repatriation of cultural properties, solar energy, traditional knowledge and education. The full list of outcomes may be seen here [link].

Prime Minister Modi thanked Prime Minister Albanese for the warm hospitality extended to him and his delegation.