India’s youth are playing a vital role in accelerating the journey towards a Viksit Bharat: PM
Rozgar Mela reflects our Government’s commitment to empowering the Yuva Shakti with new opportunities: PM
The world is excited by India’s youth and technological progress and today the global community wants to partner in India’s development journey: PM
Sectors like clean energy, critical minerals, green hydrogen, and sustainable manufacturing are advancing rapidly and partnerships in these areas are creating new opportunities: PM Modi
Every Indian is moving forward with the resolve of building a Viksit Bharat by 2047: PM Modi at Rozgar Mela
Today, Rapid transformation is clearly visible even in rural areas; Enhanced connectivity has opened new avenues for farmers, small traders, and students: PM
Viksit Bharat will be built by the efforts of such youth who view their work as a means of national service: PM Modi

பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நியமனக் கடிதங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்று விவரித்தார். அரசு சேவையில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்ற அவர், ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்களின் உடனடி பங்களிப்பை வலியுறுத்தினார். "வரவிருக்கும் ஆண்டுகளில், வளர்ந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்கு வகிப்பீர்கள்" என்று திரு மோடி கூறினார்.

இந்தச் சாதனைக்கு நியமனதாரர்களை கொண்டு வந்த அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான தயார்நிலையை பாராட்டிய பிரதமர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். எந்தவொரு தனிப்பட்ட சாதனையும் தனித்து நிற்காது என்று கூறிய  அவர், வழியில் இன்றியமையாத ஆதரவைக் கொண்டிருந்த குடும்பங்களுக்கும் பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சமீபத்தில் முடிவடைந்த ஐந்து நாடுகளின் அரசுமுறை  சுற்றுப்பயணத்தின் சாராம்சங்களை பகிர்ந்து கொண்ட பிரதமர், டஜன் கணக்கான நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள், இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் அதன் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து வெளிப்படுத்திய உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க உலகம் ஆர்வமாக இருப்பதாக அவர் விவரித்தார். "இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உலகம் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறது" என்று திரு மோடி குறிப்பிட்டார்.

சுற்றுப்பயணத்தின் தூதரக மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து விரிவாக விளக்கிய பிரதமர், ஒவ்வொரு நாட்டுடனும் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் மற்றும் உரையாடல்களை சுட்டிக்காட்டினார். இதில் நெதர்லாந்துடன் செமிகண்டக்டர்கள், நீர், விவசாயம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி குறித்த விவாதங்கள் அடங்கும்; ஸ்வீடனுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் துறைகளில் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள்; நார்வேயுடன் பசுமை தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு குறித்த விவாதங்கள்; ஐக்கிய அரபு அமீரகத்துடன் எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்;  இத்தாலியுடன் பாதுகாப்பு, முக்கியமான தாதுக்கள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஒப்பந்தங்களை அவர் விவரித்தார். இந்தியாவின் சர்வதேச கூட்டாண்மை அதன் இளைஞர்களுக்கு சேவை செய்வதற்கான நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். "இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பையும், உலகளாவிய வெளிப்பாட்டையும் பெறுவதே இதன் நோக்கம்" என்று திரு மோடி கூறினார்.

ஒவ்வொரு புதிய முதலீடு, ஒவ்வொரு தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் ஒவ்வொரு தொழில்துறை ஒத்துழைப்பும் இறுதியில் இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். இந்த ஒத்துழைப்புகளின் நீண்டகால முக்கியத்துவத்தை அவர் மேலும் விளக்கினார். "அடுத்த 25 ஆண்டுகளுக்கு உலகளாவிய வளர்ச்சியை வரையறுக்கும் தொழில்துறைகளை வடிவமைக்கும் துறைகள் இவைதான்" என்று திரு மோடி குறிப்பிட்டார்.

தூய்மையான எரிசக்தி, முக்கியமான கனிமங்கள், பசுமை ஹைட்ரஜன், நிலையான உற்பத்தி ஆகியவை மகத்தான வாய்ப்புகளின் துறைகளாக வேகமாக வளர்ந்து வருவதை எடுத்துரைத்த பிரதமர், பசுமை மாற்றம் மற்றும் நிலையான தொழில்நுட்பத்தில் ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலியுடன் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு எதிர்கால தூய்மையான உற்பத்தித் தொழில்களில் இந்தியாவை வலுவாக நிலைநிறுத்தும் என்று குறிப்பிட்டார். "இந்த கூட்டணிகள் புதிய பொருளாதாரம் மற்றும் புதிய வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கின்றன" என்று திரு மோடி உறுதிப்படுத்தினார்.

சுற்றுப்பயணத்தின் தூதரக மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து விரிவாக விளக்கிய பிரதமர், ஒவ்வொரு நாட்டுடனும் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் மற்றும் உரையாடல்களை சுட்டிக்காட்டினார். இதில் நெதர்லாந்துடன் செமிகண்டக்டர்கள், நீர், விவசாயம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி குறித்த விவாதங்கள் அடங்கும்; ஸ்வீடனுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் துறைகளில் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள்; நார்வேயுடன் பசுமை தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு குறித்த விவாதங்கள்; ஐக்கிய அரபு அமீரகத்துடன் எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்;  இத்தாலியுடன் பாதுகாப்பு, முக்கியமான தாதுக்கள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஒப்பந்தங்களை அவர் விவரித்தார். இந்தியாவின் சர்வதேச கூட்டாண்மை அதன் இளைஞர்களுக்கு சேவை செய்வதற்கான நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். "இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பையும், உலகளாவிய வெளிப்பாட்டையும் பெறுவதே இதன் நோக்கம்" என்று திரு மோடி கூறினார்.

ஒவ்வொரு புதிய முதலீடு, ஒவ்வொரு தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் ஒவ்வொரு தொழில்துறை ஒத்துழைப்பும் இறுதியில் இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். இந்த ஒத்துழைப்புகளின் நீண்டகால முக்கியத்துவத்தை அவர் மேலும் விளக்கினார். "அடுத்த 25 ஆண்டுகளுக்கு உலகளாவிய வளர்ச்சியை வரையறுக்கும் தொழில்துறைகளை வடிவமைக்கும் துறைகள் இவைதான்" என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

தூய்மையான எரிசக்தி, முக்கியமான கனிமங்கள், பசுமை ஹைட்ரஜன், நிலையான உற்பத்தி ஆகியவை மகத்தான வாய்ப்புகளின் துறைகளாக வேகமாக வளர்ந்து வருவதை எடுத்துரைத்த பிரதமர், பசுமை மாற்றம் மற்றும் நிலையான தொழில்நுட்பத்தில் ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலியுடன் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு எதிர்கால தூய்மையான உற்பத்தித் தொழில்களில் இந்தியாவை வலுவாக நிலைநிறுத்தும் என்று குறிப்பிட்டார். "இந்த கூட்டணிகள் புதிய பொருளாதாரம் மற்றும் புதிய வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கின்றன" என்று திரு மோடி உறுதிப்படுத்தினார்.

 

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு புதிய உத்வேகத்தை அளிப்பார்கள் என்ற தனது முழு நம்பிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். முன்னோக்கி செல்லும் பாதையில் நியமனக் கடிதங்களைப் பெறும் அனைத்து இளைஞர்களுக்கும் அவர் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு உரையை நிறைவு செய்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Railways to operate over 300 special trains for Jagannath Rath Yatra, 100 for Onam: Ashwini Vaishnaw

Media Coverage

Railways to operate over 300 special trains for Jagannath Rath Yatra, 100 for Onam: Ashwini Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 7, 2026
July 07, 2026

PM Modi Elevating India’s Global Standing Through Diplomacy and Development