வானிலை மற்றும் காலநிலை ஆராய்ச்சிக்கு ஏற்ப உயர் செயல்திறன் கணினி (HPC) அமைப்பை தொடங்கி வைத்தார்
"பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர் மற்றும் எச்பிசி அமைப்புடன், கம்ப்யூட்டிங் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் புதுமைகளை உருவாக்குவதில் இந்தியா தற்சார்பை நோக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது"
"மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்கள் இயற்பியல் முதல் புவி அறிவியல் மற்றும் அண்டவியல் வரை மேம்பட்ட ஆராய்ச்சிக்கு உதவும்"
"டிஜிட்டல் புரட்சியின் இந்த சகாப்தத்தில் இன்று, கணினி திறன் தேசிய திறனுக்கு ஏற்றதாக மாறி வருகிறது"
"ஆராய்ச்சி மூலம் தற்சார்பு, தற்சார்புக்கான அறிவியல் நமது தாரக மந்திரமாக மாறியுள்ளது" ;
"அறிவியலின் முக்கியத்துவம் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியில் மட்டுமல்ல, கடைசி நபரின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் உள்ளது"

சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் (NSM) கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், முன்னோடி அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளன. வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இன்று மிகப்பெரிய சாதனையை குறிக்கிறது என்றும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், நாட்டின் முன்னேற்றத்தை இது பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். "இன்றைய இந்தியா வாய்ப்புகளின் முடிவற்ற அடிவானத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய விஞ்ஞானிகளால் மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டதையும், தில்லி, புனே மற்றும் கொல்கத்தாவில் அவை நிறுவப்பட்டதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கணினி அமைப்பான 'அர்கா' மற்றும் 'அருணிகா' ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டது  குறித்தும் எடுத்துரைத்தார். ஒட்டுமொத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் பிரதமர் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை நாட்டின் இளைஞர்களுக்கு அர்ப்பணித்த பிரதமர், மூன்றாவது பதவிக் காலத்தின் போது இளைஞர்களுக்கு 100 நாட்கள் கூடுதலாக 25 நாட்கள் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். நாட்டில் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு இதுபோன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதில், இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், இயற்பியல், புவி அறிவியல் மற்றும் அண்டவியல் துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கு உதவுவதில், அதன் பயன்பாட்டை எடுத்துரைத்தார். இத்தகைய துறைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை கற்பனை செய்கின்றன என்று பிரதமர் கூறினார்.

 

"டிஜிட்டல் புரட்சி சகாப்தத்தில், கணினி திறன் தேசிய திறனுடன் ஒத்ததாக மாறி வருகிறது" என்று கூறிய பிரதமர், ஆராய்ச்சி, பொருளாதார வளர்ச்சி, நாட்டின் கூட்டுத் திறன், பேரிடர் மேலாண்மை, வாழ்க்கையை எளிதாக்குதல், வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் போன்றவற்றில் வாய்ப்புகளுக்கு, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணினி திறன்களை நேரடியாக சார்ந்திருப்பதை சுட்டிக்காட்டினார். தொழில்துறை 4.0-ல் இந்தியாவின் வளர்ச்சிக்கு இத்தகைய தொழில்கள் அடிப்படையாக அமைகின்றன என்று அவர் கூறினார். இந்தியாவின் பங்களிப்பு பிட் மற்றும் பைட்டுகளுடன் நின்றுவிடாமல், டெராபைட் மற்றும் பெட்டாபைட்டுகளாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எனவே, இந்தியா சரியான திசையில் முன்னேறி வருகிறது என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி சான்று என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்றைய இந்தியா, வெறுமனே உலகின் பிற நாடுகளின் திறன்களுடன் பொருந்துவதால் மட்டும் திருப்தி அடைந்துவிட முடியாது என்றும், அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டிய தனது பொறுப்பை இந்தியா உணர்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கங்களை எடுத்துரைத்த பிரதமர், "ஆராய்ச்சியின் மூலம் தற்சார்பு என்பதே இந்தியாவின் தாரக மந்திரம்" என்று குறிப்பிட்டார். இந்தியாவின் எதிர்கால சந்ததியினரிடையே அறிவியல் மனப்பான்மையை வலுப்படுத்த, பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டது, STEM பாடங்களில் கல்விக்கான உதவித்தொகை அதிகரிப்பு மற்றும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ .1 லட்சம் கோடி ஆராய்ச்சி நிதி ஆகியவை குறித்தும் அவர் குறிப்பிட்டார். தனது கண்டுபிடிப்புகள் மூலம் 21-ம் நூற்றாண்டு உலகிற்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

விண்வெளி மற்றும் குறைகடத்தி (செமிகண்டக்டர்) தொழில்களில் கவனம் செலுத்தி, பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை வலியுறுத்திய பிரதமர், தைரியமான முடிவுகளை எடுக்காத அல்லது புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தாத துறையே இன்று இல்லை என்று கூறினார். "விண்வெளித் துறையில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக மாறியுள்ளது" என்று கூறிய பிரதமர், மற்ற நாடுகள் தங்கள் வெற்றிக்காக, பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்த அதே சாதனையை, இந்திய விஞ்ஞானிகள் குறைந்த வளங்களுடன் அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அண்மையில் அடைந்துள்ள சாதனையை திரு மோடி பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். இந்த சாதனை, விண்வெளி ஆய்வில் நாட்டின் விடாமுயற்சி மற்றும் புதுமைக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார். விண்வெளியில் இந்தியாவின் எதிர்கால இலக்குகள் குறித்து விரிவாக பேசிய திரு மோடி, "இந்தியாவின் ககன்யான் திட்டம் விண்வெளியை அடைவது மட்டுமல்ல; இது நமது அறிவியல் கனவுகளின் எல்லையற்ற உயரங்களை அடைவது பற்றியது என்றார். 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான முதல் கட்டத்திற்கு அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்ததை சுட்டிக்காட்டிய அவர், இது விண்வெளி ஆய்வில் இந்தியாவின் நிலையை உயர்த்தும் என்றும் தெரிவித்தார்.

 

இன்றைய உலகில் குறைகடத்திகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், "குறைகடத்திகள், வளர்ச்சியின் இன்றியமையாத அம்சமாக மாறியுள்ளன" என்றார். இந்தத் துறையை வலுப்படுத்த 'இந்தியா செமிகண்டக்டர் இயக்கம்' தொடங்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், குறுகிய காலத்தில் கிடைத்த சாதகமான முடிவுகளை எடுத்துரைத்தார். இந்தியா தனது குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருவதாகவும், இது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மூன்று புதிய "பரம் ருத்ரா" சூப்பர் கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதையும் பிரதமர் குறிப்பிட்டார். இவை இந்தியாவின் பன்முக அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக அமையும்.

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, சூப்பர் கம்ப்யூட்டரிலிருந்து குவாண்டம் கம்ப்யூட்டிங் வரையிலான இந்தியாவின் பயணம் தேசத்தின் மகத்தான தொலைநோக்கின் விளைவாகும் என்று கூறினார். சூப்பர் கம்ப்யூட்டர்கள் முன்பு ஒரு சில நாடுகளின் களமாக மட்டுமே இருந்தன, ஆனால், இப்போது இந்தியா 2015-ம் ஆண்டில் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம் தொடங்கப்பட்டதன் மூலம், உலகளாவிய சூப்பர் கம்ப்யூட்டர் தலைவர்களின் திறன்களை பொருத்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் நாடு முன்னிலை வகிக்கிறது, இந்த அதிநவீன தொழில்நுட்பத்தில் இந்தியாவின் நிலையை முன்னேற்றுவதில் தேசிய குவாண்டம் இயக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார். இந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பம் உலகை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை, உற்பத்தி, எம்எஸ்எம்இ மற்றும் புத்தொழில் நிறுவனங்களில் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களைக் கொண்டுவரும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் உலகளவில் இந்தியாவை வழிநடத்த வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அறிவியலின் உண்மையான நோக்கம், வெறும் கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு மட்டுமல்ல, சாமானிய மனிதனின் விருப்பங்களை நிறைவேற்றுவதும் ஆகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் யுபிஐ ஆகியவற்றை உதாரணங்களாக சுட்டிக்காட்டிய திரு மோடி, உயர் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா முன்னேறி வரும் அதே வேளையில், இந்தத் தொழில்நுட்பம் ஏழைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிப்பதை உறுதி செய்கிறது என்றார். நாட்டை வானிலைக்கு ஏற்றதாகவும், காலநிலைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட 'மிஷன் மௌசம்' குறித்தும் அவர் எடுத்துரைத்தார். உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் (HPC) அமைப்புகள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் வருகையுடன்,  உள்ளூர் அளவில் உயர் மற்றும் மிகவும் துல்லியமான கணிப்புகளுக்கு அனுமதிக்கும் வானிலை முன்னறிவிப்புகளுக்கான இந்தியாவின் திறன் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். தொலைதூர கிராமங்களில் சூப்பர் கம்ப்யூட்டர்கள் மூலம், வானிலை மற்றும் மண் பகுப்பாய்வு செய்வது, வெறும் அறிவியல் சாதனை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றம் என்றும் பிரதமர் விளக்கினார். "சூப்பர் கம்ப்யூட்டர்கள் உலகின் மிகச்சிறிய விவசாயிக்கு கூட, உலகின் சிறந்த அறிவை அணுகுவதை உறுதி செய்யும், இது அவர்களின் பயிர்களைப் பற்றிய தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களும் பயனடைவார்கள், ஏனெனில் இந்த தொழில்நுட்பங்கள் அபாயங்களைக் குறைப்பதோடு காப்பீட்டுத் திட்டங்களில் நுண்ணறிவுகளை வழங்கும்" என்று அவர் மேலும் கூறினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் தொடர்பான மாதிரிகளை உருவாக்கும் திறன், இந்தியாவுக்கு இருக்கும் என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இதன் மூலம் அனைத்து பங்குதாரர்களும் பயனடைவார்கள்.

சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் இந்தியாவின் திறன் தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் அம்சம் என்றும், அதன் பலன்கள் சாமானிய குடிமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் சென்று, எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் சகாப்தத்தில், சூப்பர் கம்ப்யூட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் கூறினார். 5ஜி தொழில்நுட்பம் மற்றும் மொபைல் போன் உற்பத்தியில் இந்தியாவின் வெற்றியுடன் இதை அவர் ஒப்பிட்டார், இது நாட்டில் டிஜிட்டல் புரட்சியைத் தூண்டியுள்ளதுடன் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொழில்நுட்பத்தை எளிதில் அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம், சாமானிய குடிமக்களை எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு தயார்படுத்தும் என்று குறிப்பிட்ட பிரதமர், சூப்பர் கம்ப்யூட்டர்கள் புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதுடன், உலக அளவில் இந்தியாவின் போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கான புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார். இந்த தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் உறுதியான பயன்களைக் கொண்டு வருவதாகவும், உலகின் பிற பகுதிகளுக்கு இணையாக அவர்களை ஈடுகட்ட உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 

இந்த சாதனைகளுக்காக மக்களுக்கும், நாட்டிற்கும் பாராட்டுத்  தெரிவித்த பிரதமர், அறிவியல் துறையில் புதிய களங்களை திறந்துவிடும் இந்த மேம்பட்ட வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தார்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இந்த நிகழ்ச்சியில் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டார்.

பின்னணி

சூப்பர் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றுவதற்கான அவரது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் (என்எஸ்எம்) கீழ், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சுமார் ரூ.130 கோடி மதிப்புள்ள மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் முன்னோடி அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளன. புனேவில் உள்ள ராட்சத மீட்டர் ரேடியோ தொலைநோக்கி (ஜிஎம்ஆர்டி) வேகமான ரேடியோ வெடிப்புகள் (எஃப்.ஆர்.பி) மற்றும் பிற வானியல் நிகழ்வுகளை ஆராய சூப்பர் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும். தில்லியில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான முடுக்கி மையம் (IUAC) பொருள் அறிவியல் மற்றும் அணு இயற்பியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தும். கொல்கத்தாவில் உள்ள எஸ்.என்.போஸ் மையம் இயற்பியல், அண்டவியல் மற்றும் பூமி அறிவியல் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ளும்.

வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் ரூ.850 கோடி முதலீட்டைக் குறிக்கிறது, இது வானிலை பயன்பாடுகளுக்கான இந்தியாவின் கணக்கீட்டு திறன்களில் குறிப்பிடத்தக்க வேகத்தைக் குறிக்கிறது.  புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்) மற்றும் நொய்டாவில் உள்ள நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்புகளுக்கான தேசிய மையம் (என்.சி.எம்.ஆர்.டபிள்யூ.எஃப்) ஆகிய இரண்டு முக்கிய தளங்களில் அமைந்துள்ள இந்த எச்.பி.சி அமைப்பு, அசாதாரண கணினி சக்தியைக் கொண்டுள்ளது. புதிய HPC அமைப்புகளுக்கு 'அர்கா' மற்றும் 'அருணிகா' என்று பெயரிடப்பட்டுள்ளது, இது சூரியனுடனான அவற்றின் தொடர்பை பிரதிபலிக்கிறது. இந்த உயர்-தெளிவுத்திறன் மாதிரிகள், வெப்பமண்டல சூறாவளிகள், அதிக மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை, வெப்ப அலைகள், வறட்சி மற்றும் பிற முக்கியமான வானிலை நிகழ்வுகள் தொடர்பான கணிப்புகளின் துல்லியம் மற்றும் முன்னணி நேரத்தை கணிசமாக மேம்படுத்தும்.

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Make in India, production-linked incentives push industrial warehousing to record high

Media Coverage

Make in India, production-linked incentives push industrial warehousing to record high
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the power of determination and hard work
March 06, 2026

The Prime Minister, Shri Narendra Modi, said that the people of India, through their firm resolve, make even the most difficult tasks possible. He noted that with tireless effort in the right direction, they achieve even the biggest goals.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“यद् दूरं यद् दुराराध्यं यच्च दूरे व्यवस्थितम्। तत् सर्वं तपसा साध्यं तपो हि दुरतिक्रमम्॥”

The Subhashitam conveys that no matter how far, difficult, or out of reach a goal may seem, it can be achieved through firm determination and continuous hard work. Determination and patience are the forces that turn the impossible into possible.

The Prime Minister wrote on X;

“भारत के लोग अपने दृढ़ निश्चय से किसी भी कार्य को संभव बना देते हैं। सही दिशा में अपनी अथक मेहनत से वे बड़े से बड़े लक्ष्य को भी हासिल कर दिखाते हैं।

यद् दूरं यद् दुराराध्यं यच्च दूरे व्यवस्थितम्।

तत् सर्वं तपसा साध्यं तपो हि दुरतिक्रमम्॥”