ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏற்பட்ட மோசமான விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000மும் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 அளிக்கப்படும்: பிரதமர் @narendramodi”
Pained by the loss of lives due to a mishap in Jaipur, Rajasthan. My thoughts are with those who have lost their near and dear ones. I pray that the injured recover soon.
— PMO India (@PMOIndia) November 3, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would…


