பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் சமுத்திரங்களில் மீன்பிடித்தல் குறித்த விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டது
மீன்பிடி மற்றும் மீனவர் பாதுகாப்பை அதிகரிக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
சீர்மிகு துறைமுகங்கள், ட்ரோன் போக்குவரத்து மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட விநியோகச் சங்கிலிகள் மூலம் மீன்வளத்தை நவீனமயமாக்குவதை பிரதமர் வலியுறுத்தினார்
விவசாயத் துறையில் வேளாண் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக மீன்வளத் துறையில் மீன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பிரதமர் ஆலோசனை வழங்கினார்
அமிர்த நீர்நிலைகளில் மீன்பிடித்தல் மற்றும் வாழ்வாதார ஆதரவுக்காக அலங்கார மீன்வளத்தை மேம்படுத்துவது குறித்து பிரதமர் விவாதித்தார்
மருந்துகள் மற்றும் பிற துறைகளில் எரிபொருள் நோக்கங்களுக்காகவும், ஊட்டச்சத்து உள்ளீடுகளாகவும் கடற்பாசிகளை பன்முக ரீதியில் பயன்படுத்துவது குறித்து ஆராய பிரதமர் பரிந்துரைத்தார்
நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளில் மீன் விநியோகத்தை அதிகரிப்பதற்கான உத்தியை செயல்ப

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில், பிரத்தியேக பொருளாதார மண்டலம் (இஇஇசட்) மற்றும் சமுத்திரங்களில் மீன்பிடித்தல் குறித்து கவனம் செலுத்தும் வகையில், மீன்வளத் துறையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

 

மீன் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும், மீனவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கவும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

 

சீர்மிகு துறைமுகங்கள் மற்றும் சந்தைகள் மூலம் துறையை நவீனமயமாக்குதல், மீன்பிடி போக்குவரத்து மற்றும் அதன் சந்தைப்படுத்தலில் ட்ரோன்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை பிரதமர் வலியுறுத்தினார். விநியோகச் சங்கிலியில் மதிப்பைச் சேர்க்க, ஆரோக்கியமான செயல்பாட்டு முறையை நோக்கி நகர வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.

 

மேலும், சிவில் விமானப் போக்குவரத்துடன் கலந்தாலோசித்து, மாநகரங்கள் / நகரங்களில் உள்ள பெரிய சந்தைகளுக்கு புதிய மீன்களைக் கொண்டு செல்வதற்கு, தொழில்நுட்ப நெறிமுறைகளின்படி ட்ரோன்களின் பயன்பாட்டை ஆய்வு செய்ய பிரதமர் பரிந்துரைத்தார்.

 

விளைபொருட்களை பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் செய்வதில் மேம்பாடுகளின் அவசியத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தனியார் துறையின் முதலீடுகளை எளிதாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து, வேளாண் துறையில் வேளாண் தொழில்நுட்பத்தைப் போலவே, மீன்வளத் துறையிலும் மீன்வள  தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

 

அமிர்த நீர்நிலைகளில் மீன்வள உற்பத்தியை மேற்கொள்வது, இந்த நீர்நிலைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்று பிரதமர் கூறினார். வருமானம் ஈட்டுவதற்கான ஒரு வழியாக அலங்கார மீன்வளத்தை  ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

 

மீன்களின்  தேவை அதிகமாக இருந்தும் போதுமான அளவு விநியோகம் இல்லாத, நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு உத்தி வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

 

மருந்துகள் மற்றும் பிற துறைகளில் எரிபொருள் நோக்கங்களுக்காக, ஊட்டச்சத்து உள்ளீடுகளாக, கடற்பாசிகளைப் பயன்படுத்துவது ஆராயப்பட வேண்டும் என்று பிரதமர் பரிந்துரைத்தார். கடற்பாசி துறையில் தேவையான வெளியீடுகள் மற்றும் விளைவுகளை உருவாக்க, முழுமையான உரிமையை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

நவீன மீன்பிடி முறைகளில் மீனவர்களின் திறன் மேம்பாட்டை மேற்கொள்ளவும் பிரதமர் பரிந்துரைத்தார். இந்தத் துறையின் வளர்ச்சியைத் தடுக்கும் பொருட்களின் எதிர்மறையான பட்டியலைப் பராமரிக்கவும் அவர் பரிந்துரைத்தார், இதனால், மீனவர்களின் வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்குதல் ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை உருவாக்க முடியும்.

 

கூட்டத்தின் போது, ​​முக்கியமான முயற்சிகளில் ஏற்பட்ட முன்னேற்றம், கடந்த ஆய்வின் போது கொடுக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு இணங்குதல் மற்றும் இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் ஆழ்கடல்களில் இருந்து மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட செயல்படுத்தும் கட்டமைப்பு குறித்தும் விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.

 

2015 முதல், இந்திய அரசின் நீலப் புரட்சித் திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம், பிரதமரின் மத்ஸ்ய சம்ரிதி சா திட்டம் மற்றும் கிசான் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 38,572 கோடியாக முதலீடு  அதிகரித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா ஆண்டுக்கு 195 லட்சம் டன் மீன் உற்பத்தியை பதிவு செய்துள்ளது, இதனால் துறை வளர்ச்சி விகிதம் 9% க்கும் அதிகமாகும்.

 

இந்தக் கூட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பிரதமரின் முதன்மைச் செயலாளர்கள் டாக்டர் பி.கே. மிஸ்ரா,திரு சக்திகாந்த தாஸ், பிரதமரின் ஆலோசகர் திரு. அமித் கரே, மீன்வளத் துறை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Most NE districts now ‘front runners’ in development goals: Niti report

Media Coverage

Most NE districts now ‘front runners’ in development goals: Niti report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது
July 09, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது

 கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.

நாடுகளால் வழங்கப்பட்ட விருதுகள்:

1. 2016, ஏப்ரலில் சௌதி அரேபியாவுக்கான அவரது பயணத்தின் போது, சௌதி அரேபியாவின் மிக உயரிய சிவில் விருது - மன்னர் அப்துல்லாசிஸ் சாஷ். பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.  கௌரவமிக்க இந்த விருது மன்னர்  சல்மான்வின் அப்துலாசிஸ் அவர்களால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

2. அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானின் மிக உயரிய சிவில் விருதான ஸ்டேட் ஆர்டர் ஆஃப் காஸி அமீர் அமானுல்லா கான் விருது பிரதமர்  மோடிக்கு வழங்கப்பட்டது.

3. 2018- ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டபோது தி கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

4. 2019-ல், ஆர்டர் ஆஃப் சையது விருது  பிரதமருக்கு வழங்கப்பட்டது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவில் விருதாகும்.

5. 2019-ல் ரஷ்யாவின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரு விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

6. வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் மிக உயரிய கௌரவமான ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குயிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இஸ்ஸூதின் விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

7. 2019-ல் கௌரவமிக்க மன்னர் ஹமாத் ஆர்டர் ஆஃப் தி ரினைசான்ஸ் விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பஹ்ரைன் வழங்கியது.

8. ஒப்பற்ற சேவைகள் மற்றும் சாதனைகள் செய்தவர்களுக்கு அமெரிக்க ராணுவத்தின் விருதான லெஜியன் ஆஃப் மெரிட் அமெரிக்க அரசால் 2020-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

9. பூடானின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் ஜியால்போ விருது 2021 டிசம்பரில் பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மிக உயரிய சிவில் விருதுகளுக்கு அப்பால் உலகம் முழுவதும் உள்ள கௌரவமிக்க அமைப்புகளால் பல விருதுகளும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன.

1. சியோல் அமைதிப் பரிசு: மனித குலத்தின் நல்லிணக்கம், நாடுகளுக்கிடையே சமரசம் செய்தல், உலக சமாதானம் ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்ததன் மூலம் சிறப்பு பெறும் தனி நபர்களுக்கு சியோல் அமைதிப் பரிசு, கலாச்சார அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. கௌரவமிக்க இந்த விருது 2018-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

2. புவிக்கோளின் சாம்பியனுக்கான ஐநா விருது: இது ஐநா சபையின் மிக உயரிய சுற்றுச்சூழலுக்கான விருதாகும் உலகளாவிய அரங்கில் பிரதமர் மோடியின் துணிச்சலான சுற்றுச்சூழல் தலைமைத்துவத்தை அங்கீகரித்து . 2018-ல் ஐநா இதனை வழங்கியது.

3. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.

4. உலகளாவிய கோல்கீப்பர் விருது”: தூய்மை இந்தியா திட்டத்திற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால்  இந்த விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா பிரச்சாரத்தை “மக்கள் இயக்கமாக” மாற்றிய மற்றும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தூய்மைக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்த இந்தியர்களுக்கு இந்த விருதினைப் பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

5. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.