"இந்தியாவின் சந்திர பயணம் அறிவியல், தொழில்துறை ஆகிய இரண்டின் வெற்றியாகும்"
"பி -20 இன் கருப்பொருளான ரைஸில், 'ஐ' புதுமையைக் குறிக்கிறது. ஆனால் புதுமையுடன், அதில் மற்றொரு 'ஐ' - உள்ளடக்கிய தன்மையையும் பார்க்கிறேன்.
"நமது முதலீட்டின் பெரும்பகுதி தேவைப்படும் விசயம் 'பரஸ்பர நம்பிக்கை'.
"உலகளாவிய வளர்ச்சியின் எதிர்காலம் வணிகத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தது"
"திறமையான மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோக சங்கிலியை உருவாக்குவதில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உள்ளது"
"நிலைத்தன்மை என்பது ஒரு வாய்ப்பு மற்றும் ஒரு வணிக மாதிரி"
"வணிகத்திற்கான பசுமைக் கடன் கட்டமைப்பை இந்தியா தயாரித்துள்ளது, இது 'கிரக நேர்மறை' நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது"
"சுய மைய அணுகுமுறை அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால் வணிகங்கள் அதிகமான மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்"
"சர்வதேச நுகர்வோர் பராமரிப்பு தினத்திற்கான ஒரு அமைப்பைப் பற்றி நாம் நிச்சயமாக சிந்திக்க வேண
"இது அறிவியல், தொழில்துறை ஆகிய இரண்டின் வெற்றி", என்று அவர் கூறினார்.
இது மனிதநேயம் பற்றியது, 'ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம்' பற்றியது என்று அவர் மேலும் கூறினார்.
எனவே, "உலகளாவிய வளர்ச்சியின் எதிர்காலம் வணிகத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தது" என்று பிரதமர் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற பி 20 உச்சிமாநாடு இந்தியா 2023 இல் உரையாற்றினார். பி 20 உச்சிமாநாடு இந்தியா உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் வல்லுநர்களை பி 20 இந்தியா அறிக்கை குறித்து விவாதிக்கவும் அழைத்து வருகிறது. பி 20 இந்தியா அறிக்கையில் ஜி 20 க்கு சமர்ப்பிப்பதற்கான 54 பரிந்துரைகள் மற்றும் 172 கொள்கை நடவடிக்கைகள் அடங்கும்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்  வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் ஏற்பட்ட கொண்டாட்ட தருணத்தை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பண்டிகை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளது என்றும், சமூகமும் வணிகங்களும் கொண்டாட்ட மனநிலையில் உள்ளன என்றும் அவர் கூறினார். வெற்றிகரமான சந்திர பயணத்தில் இஸ்ரோவின் பங்கைக் குறிப்பிட்ட பிரதமர், சந்திரயானின் பல கூறுகள் தனியார் துறை மற்றும் எம்.எஸ்.எம்.இ.க்களால் வழங்கப்பட்டதால், இந்த திட்டத்தில் தொழில்துறையின் பங்கையும் ஒப்புக்கொண்டார். "இது அறிவியல், தொழில்துறை ஆகிய இரண்டின் வெற்றி", என்று அவர் கூறினார். 

 

சந்திரயான் வெற்றியை இந்தியாவுடன், ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடுகிறது என்றும், இந்தக் கொண்டாட்டம் ஒரு பொறுப்பான விண்வெளி திட்டத்தை இயக்குவதற்கானது என்றும் அவர் தொடர்ந்தார். இன்றைய பி20 இன் கருப்பொருளான பொறுப்பு, முடுக்கம், புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றைப் பற்றியது இந்த கொண்டாட்டங்கள் என்று பிரதமர் கூறினார். இது மனிதநேயம் பற்றியது, 'ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம்' பற்றியது என்று அவர் மேலும் கூறினார்.

'ஆர்.ஏ.ஐ.எஸ்.இ.' என்ற பி 20 கருப்பொருளைப் பற்றி பேசிய பிரதமர், 'ஐ' புதுமையைக் குறிக்கிறது என்றாலும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றொரு 'ஐ' சிறப்புக்குரியது  என்றார். ஜி 20 இல் ஆபிரிக்க ஒன்றியத்தை நிரந்தர இடங்களுக்கு அழைக்கும் போது இதே பார்வை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பி 20 இல் கூட, ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சி ஒரு மையப் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். "இந்த மன்றத்தின் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை இந்தக் குழுவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா நம்புகிறது", என்று பிரதமர் கூறினார். இங்கு எடுக்கப்படும் முடிவுகளின் வெற்றிகள் உலகளாவிய பொருளாதார சவால்களைக் கையாள்வதிலும் நிலையான வளர்ச்சியை உருவாக்குவதிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். 

ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்பட்ட பேரழிவிலிருந்து அதாவது கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளைப் பற்றி பேசிய திரு மோடி, நமது முதலீட்டின் பெரும்பகுதி தேவைப்படும் விசயம் 'பரஸ்பர நம்பிக்கை' என்பதை தொற்றுநோய் நமக்குக் கற்பித்தது என்றார். தொற்றுநோய் பரஸ்பர நம்பிக்கையின் கட்டமைப்பை உடைத்தெறிந்தபோது, பரஸ்பர நம்பிக்கையின் பதாகையை உயர்த்தி இந்தியா நம்பிக்கையுடனும் பணிவுடனும் நின்றது என்று பிரதமர் கூறினார். இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் கிடைக்கச் செய்து, உலகின் மருந்தகம் என்ற அந்தஸ்தை உயர்த்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். அதேபோல், கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் அதன் நடவடிக்கை மற்றும் அதன் பதிலில் காட்டுகின்றன என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற்ற ஜி-20 கூட்டங்களில் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் வெளிப்படுகின்றன.

உலகளாவிய வணிக சமூகத்திற்கு இந்தியாவுடனான கூட்டாண்மையின் கவர்ச்சியை வலியுறுத்திய பிரதமர், இந்தியாவின் இளம் திறமையாளர் தொகுப்பு மற்றும் அதன் டிஜிட்டல் புரட்சியை குறிப்பிட்டார். "இந்தியாவுடனான உங்கள் நட்பு எவ்வளவு ஆழமடைகிறதோ, அந்த அளவுக்கு இரு தரப்புக்கும் அதிக செழிப்பு கிடைக்கும்" என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

 

"வணிகம் திறனை வளமாகவும், தடைகளை வாய்ப்புகளாகவும், முயற்சிகளை சாதனைகளாகவும் மாற்ற முடியும். சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, உலகளாவியதாக இருந்தாலும் சரி, உள்ளூர் விசயமாக இருந்தாலும் சரி, வணிகம் அனைவருக்கும் முன்னேற்றத்தை உறுதி செய்யும். எனவே, "உலகளாவிய வளர்ச்சியின் எதிர்காலம் வணிகத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தது" என்று பிரதமர் கூறினார்.

கோவிட் 19 தொற்றுநோயின் தொடக்கத்துடன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கிய பிரதமர்,  உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இடையூறுகளின் மீளமுடியாத மாற்றத்தைக் குறிப்பிட்டார். உலகிற்கு மிகவும் தேவைப்படும்போது இல்லாத உலகளாவிய விநியோக சங்கிலியின் செயல்திறனை கேள்விக்குள்ளாக்கிய பிரதமர், இன்று உலகம் கையாளும் இடையூறுகளுக்கு இந்தியா தான் தீர்வு என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். இன்று உலகில் நம்பகமான விநியோக சங்கிலியை உருவாக்குவதில் இந்தியாவின் நிலையை எடுத்துரைத்த பிரதமர், உலகளாவிய வணிகங்களின் பங்களிப்புகளையும் வலியுறுத்தினார். 

 

ஜி 20 நாடுகளின் வணிகங்களில் பி 20 ஒரு வலுவான தளமாக உருவெடுத்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, நிலைத்தன்மையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிலைத்தன்மை என்பது ஒரு வாய்ப்பாகவும், வணிக மாதிரியாகவும் இருப்பதால் உலகளாவிய வணிகத்தை முன்னோக்கி நகர்த்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். சிக்கனம் மற்றும் வாழ்க்கை முறை ஆகிய இரண்டின் கோணத்திலும் வெற்றி என்பது மாதிரியாக இருக்கும், சிறுதானியத்தை ஒரு சூப்பர்ஃபுட், சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் சிறு விவசாயிகளுக்கு நல்லது என்று ஒரு எடுத்துக்காட்டு கொடுத்து இதை விரிவுபடுத்தினார். சுழற்சி பொருளாதாரம் மற்றும் பசுமை எரிசக்தி குறித்தும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச சூரிய சக்தி கூட்டணி போன்ற நடவடிக்கைகளில் உலகை அழைத்துச் செல்லும் இந்தியாவின் அணுகுமுறை தெரிகிறது. 

கொரோனாவுக்கு பிந்தைய உலகில், ஒவ்வொரு நபரும் தங்கள் உடல்நலம் குறித்து கூடுதல் விழிப்புணர்வை பெற்றுள்ளனர் என்றும், அதன் தாக்கம் அன்றாட நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அத்தகைய எந்தவொரு நடவடிக்கையின் எதிர்கால தாக்கத்தையும் மக்கள் எதிர்நோக்கி உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில், வணிகங்களும் சமூகமும் கிரகத்தைப் பற்றி இதேபோன்ற அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், கிரகத்தில் அவர்களின் முடிவுகளின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். "பூமியின் நல்வாழ்வும் நமது பொறுப்பாகும்", என்று பிரதமர் மேலும் கூறினார். மிஷன் லைப் பற்றி பேசிய பிரதமர், இந்த முயற்சியின் நோக்கம் ஒரு குழு அல்லது வாழத்தகுதியான கிரகம் என்ற  மக்களின் கூட்டமைப்பை உருவாக்குவதாகும் என்றார். வாழ்க்கை முறை மற்றும் வணிகங்கள் இரண்டும் கிரகத்திற்கு சாதகமானதாக இருக்கும்போது, பாதி பிரச்சினைகள் குறையும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையையும் வணிகத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வணிகத்திற்கான பசுமைக் கடன் கட்டமைப்பை இந்தியா தயாரிப்பது குறித்தும், இது கிரகத்தின் நேர்மறையான நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்தார். உலகளாவிய வர்த்தகத்தின் அனைத்து ஜாம்பவான்களும் கைகோர்த்து அதை ஒரு உலகளாவிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர்  வலியுறுத்தினார்.

 

வணிகத்திற்கான பாரம்பரிய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். பிராண்ட் மற்றும் விற்பனையைத் தாண்டிச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். "ஒரு வணிகமாக, நீண்ட காலத்திற்கு நமக்கு பயனளிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அமல்படுத்திய கொள்கைகளால், வெறும் 5 ஆண்டுகளில் 13.5 கோடி  மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இவர்கள்தான் புதிய நுகர்வோர்கள். இந்தப் புதிய நடுத்தர வர்க்கமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வேகம் கொடுக்கிறது. அதாவது, ஏழைகளுக்காக அரசாங்கம் செய்த பணிகளால் அதிகம்  பயனடைவது நமது நடுத்தர வர்க்கம் மற்றும் நமது எம்.எஸ்.எம்.இ. சுய மைய அணுகுமுறை அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், அதிகமான மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்துவதில் வணிகங்கள் கவனம் செலுத்த வேண்டும் ‘’,என்று பிரதமர் வலியுறுத்தினார். முக்கியமான பொருட்கள் மற்றும் அரிய மண் உலோகங்களில் கிடைக்கும் சீரற்ற தன்மை மற்றும் உலகளாவிய தேவையின்  இதேபோன்ற சவாலைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "அவற்றை வைத்திருப்பவர்கள் அவற்றை உலகளாவிய பொறுப்பாகப் பார்க்கவில்லை என்றால், அது காலனித்துவத்தின் ஒரு புதிய மாதிரியை ஊக்குவிக்கும்" என்று எச்சரித்தார். 

உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களில் சமநிலை இருக்கும்போது லாபகரமான சந்தையை நிலைநிறுத்த முடியும் என்றும், இது நாடுகளுக்கும் பொருந்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மற்ற நாடுகளை ஒரு சந்தையாக மட்டுமே நடத்துவது பலனளிக்காது, அது உற்பத்தி நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த முன்னெடுப்பில் அனைவரையும் சமமான பங்காளிகளாக மாற்றுவதே முன்னோக்கிய வழி என்று அவர் கூறினார். இந்த நுகர்வோர் தனிநபர்களாகவோ அல்லது நாடுகளாகவோ இருக்கக்கூடிய வணிகங்களை நுகர்வோரை மையமாகக் கொண்டதாக மாற்றுவது குறித்து சிந்திக்குமாறு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வணிகத் தலைவர்களை அவர் வலியுறுத்தினார். அவர்களின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய அவர், இதற்காக வருடாந்திர பிரச்சாரத்தை கொண்டு வர பரிந்துரைத்தார். "ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய வணிகங்கள் ஒன்றிணைந்து நுகர்வோர் மற்றும் அவர்களின் சந்தைகளின் நன்மைக்காக தங்களை உறுதியளிக்க முடியுமா", என்று பிரதமர் கேட்டார்.

நுகர்வோரின் நலனைப் பற்றிப் பேச ஒரு நாளை நிர்ணயிக்குமாறு உலகளாவிய வணிகத்தை திரு மோடி கேட்டுக் கொண்டார். "நாம் நுகர்வோர் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது, பல நுகர்வோர் உரிமைப் பிரச்சினைகளை தானாகவே கவனித்துக் கொள்ளும் என்பதால், நுகர்வோர் கவனிப்பிலும் நாம் கவனமாக இருக்க வேண்டாமா? சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு தினத்திற்கான ஒரு அமைப்பைப் பற்றி நாம் நிச்சயமாக சிந்திக்க வேண்டும். இது வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்த உதவும்" என்று பிரதமர் மோடி கூறினார். நுகர்வோர் என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளத்திற்குள் சில்லறை நுகர்வோருடன் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் உலகளாவிய வர்த்தகம், உலகளாவிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வோராக இருக்கும் நாடுகளும் ஆகும் என்று அவர் விளக்கினார்.

 

உலகின் வர்த்தகத் தலைவர்கள் இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், முக்கியமான கேள்விகளை எழுப்பினார், மேலும் இந்த கேள்விகளுக்கான பதில்களால் வணிகம் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று கூறினார். திரு. மோடி, அவற்றுக்கு பதிலளிக்க பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என்றார். பருவநிலை மாற்றம், எரிசக்தி துறை நெருக்கடி, உணவு விநியோக சங்கிலி ஏற்றத்தாழ்வு, நீர் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், இதை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை அதிகரிக்க வலியுறுத்தினார். 10-15 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துப் பார்க்க முடியாத பிரச்சினைகளையும் அவர் தொட்டு, கிரிப்டோகரன்சி தொடர்பான சவால்களின் உதாரணத்தையும் கூறினார். இந்த விஷயத்தில் மிகவும் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், அனைத்து பங்குதாரர்களின் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய ஒரு உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பரிந்துரைத்தார். செயற்கை நுண்ணறிவு தொடர்பாகவும் இதேபோன்ற அணுகுமுறை தேவை என்றும் அவர் பேசினார். செயற்கை நுண்ணறிவைச் சுற்றியுள்ள சலசலப்பு மற்றும் உற்சாகத்தை எடுத்துரைத்த பிரதமர், திறன் மற்றும் மறுதிறன் தொடர்பான சில நெறிமுறை பரிசீலனைகள் மற்றும் வழிமுறை சார்பு மற்றும் சமூகத்தில் அதன் தாக்கம் குறித்த கவலைகள் குறித்து கவனத்தை ஈர்த்தார். இதுபோன்ற பிரச்னைகளுக்கு, ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும். நெறிமுறை செயற்கை நுண்ணறிவு விரிவடைவதை உறுதி செய்ய உலகளாவிய வணிக சமூகங்களும் அரசாங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்திய பிரதமர், பல்வேறு துறைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகளை உணர வலியுறுத்தினார்.

 வணிகங்கள் வெற்றிகரமாக எல்லைகள் மற்றும் எல்லைகளைத் தாண்டிச் சென்றுள்ளன, ஆனால் இப்போது வணிகங்களை அடித்தட்டிற்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது என்று கூறிய பிரதமர், விநியோகச் சங்கிலி மீள்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இதை மேற்கொள்ள முடியும் என்று  கூறினார். பி 20 உச்சிமாநாடு ஒரு கூட்டு மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது என்று திரு. மோடி நம்பிக்கை தெரிவித்தார். "இணைக்கப்பட்ட உலகம் என்பது தொழில்நுட்பத்தின் மூலம் இணைப்பைப் பற்றியது அல்ல என்பதை நினைவில் கொள்வோம். இது பகிரப்பட்ட சமூக தளங்களைப் பற்றியது மட்டுமல்ல, பகிரப்பட்ட நோக்கம், பகிரப்பட்ட கிரகம், பகிரப்பட்ட செழிப்பு மற்றும் பகிரப்பட்ட எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றியது" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

பின்னணி

பிசினஸ் 20 (பி 20) என்பது உலகளாவிய வணிக சமூகத்துடனான அதிகாரப்பூர்வ ஜி 20 உரையாடல் மன்றமாகும். 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பி 20, ஜி 20 இன் மிக முக்கியமான ஈடுபாடு குழுக்களில் ஒன்றாகும், இதில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பங்கேற்பாளர்களாக உள்ளன. பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைத் தூண்டுவதற்கு உறுதியான செயல்பாட்டு கொள்கை பரிந்துரைகளை வழங்க பி 20 செயல்படுகிறது.

 

ஆகஸ்ட் 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெற்றது. இதன் கருப்பொருள் ஆர்.ஏ.ஐ.எஸ்.இ - பொறுப்பான, விரைவுபடுத்தப்பட்ட, புதுமையான, நிலையான மற்றும் சமமான வணிகங்கள். இதில், 55 நாடுகளைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Parliament on verge of history, says PM Modi, as it readies to take up women's bills

Media Coverage

Parliament on verge of history, says PM Modi, as it readies to take up women's bills
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM to visit Karnataka on 15th April
April 14, 2026
PM to inaugurate Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri in Mandya
Sri Guru Bhairavaikya Mandira is a memorial dedicated to Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji, the 71st Pontiff of Sri Adichunchanagiri Mahasamsthana Math
PM to also jointly release the book titled “Saundarya Lahari and Shiva Mahimna Stotram” along with former Prime Minister Shri H. D. Deve Gowda ji

Prime Minister, Shri Narendra Modi will visit Karnataka on 15th April 2026. At around 11 AM, Prime Minister will inaugurate the Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri in Mandya district. He will also address the gathering on the occasion.

During the visit, Prime Minister will also jointly release the book titled “Saundarya Lahari and Shiva Mahimna Stotram” along with former Prime Minister Shri H. D. Deve Gowda ji.

Sri Guru Bhairavaikya Mandira is a memorial dedicated to the revered seer, Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji, the 71st Pontiff of Sri Adichunchanagiri Mahasamsthana Math. Constructed in the traditional Dravidian architectural style, the Mandira stands as a tribute to the life and legacy of the late seer. The Mandira is envisioned not only as a place of reverence but also as a source of inspiration for future generations.

Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji was widely respected for his lifelong commitment to social service, having established numerous educational institutions and healthcare facilities. He firmly believed that service to society is the highest form of worship, and his teachings transcended barriers of caste, creed, and region, inspiring millions.