பிரதமர் நரேந்திர மோடி போலந்து தலைநகர் வார்சா சென்றடைந்தார். 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுவே முதல்முறை. அவர் ஜனாதிபதி மேதகு திரு. அட்ரஸிஜ் செபாஸ்டியன் டுடே மற்றும் பிரதமர் மேதகு திரு. டொனால்ட் டஸ்க் ஆகியோரை சந்திப்பார். போலந்தில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் உரையாடுவார்.




