மேதகு அதிபர் முய்ஸு அவர்களே,

இரு நாட்டு பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்!

முதலாவதாக, அதிபர் முய்ஸு மற்றும் அவரது தூதுக்குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்தியாவும், மாலத்தீவும் பல நூற்றாண்டுகளாக நீடித்த உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

இந்தியா, மாலத்தீவின் நெருங்கிய அண்டை நாடு மற்றும் உறுதியான நட்பு நாடு.

எங்களது "அண்டை நாடுகளுக்கு முதலிடம்" என்ற கொள்கை மற்றும் "சாகர்" தொலைநோக்குப் பார்வை ஆகிய இரண்டிலும், மாலத்தீவு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.

மாலத்தீவுகளுக்கு முதலில் உதவும் நாடாக இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மாலத்தீவு மக்களுக்கு, அத்தியாவசியப் பொருட்கள், இயற்கைப் பேரழிவுகளின் போது குடிநீர் வழங்குதல், கோவிட் தொற்றுநோய்களின் போது தடுப்பூசிகளை வழங்குதல் என, அண்டை நாடாக இந்தியா தொடர்ந்து தனது பொறுப்புகளை நிலைநாட்டியுள்ளது.

 

இன்று, நமது பரஸ்பர ஒத்துழைப்புக்கு, பாதுகாப்பு வழிகாட்டுதலை வழங்க, "விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மை" என்ற தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

நண்பர்கள்

வளர்ச்சிக்கான கூட்டாண்மை, நமது உறவின் முக்கியத் தூணாக உள்ளது. இந்த சூழலில், மாலத்தீவு மக்களின் முன்னுரிமைகளுக்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம்.

இந்த ஆண்டு மாலத்தீவுக்கான 100 மில்லியன் அமெரிக்க டாலர் கருவூல பில்களைக் கையாண்டுள்ளது. இன்று, மாலத்தீவின் தேவைக்கேற்ப, 400 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 3000 கோடி ரூபாய் (30 பில்லியன் ரூபாய்) மதிப்பிலான நாணய மாற்று ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மாலத்தீவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான விரிவான ஒத்துழைப்பு குறித்து நாங்கள் இன்று விவாதித்தோம், ஹனிமது சர்வதேச விமான நிலையத்தில் ஒரு ஓடுபாதையை நாங்கள் திறந்து வைத்தோம். இப்போது, 'கிரேட்டர் மாலே' இணைப்புத் திட்டமும் விரைவுபடுத்தப்படும். திலபுஷியில் ஒரு புதிய வணிக துறைமுகத்தை உருவாக்குவதிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

இன்று, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 700-க்கும் மேற்பட்ட சமூக வீட்டுவசதி அலகுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 28 தீவுகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன, மேலும் 6 தீவுகளில் விரைவில் முடிக்கப்படும். இந்தத் திட்டங்கள் 30,000 பேருக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும்.

"ஹா தாலு"-வில் வேளாண் பொருளாதார மண்டலம் மற்றும் "ஹா அலிஃபு"-ல் மீன் பதப்படுத்தும் வசதி அமைப்பதற்கும் உதவி வழங்கப்படும்.

 

கடல்சார் மற்றும் கடல்சார் பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் நாம் இணைந்து பணியாற்றுவோம்.

நண்பர்கள்

நமது பொருளாதார உறவுகளை வலுப்படுத்த, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்களை தொடங்க முடிவு செய்துள்ளோம். உள்ளூர் நாணயங்களில் வர்த்தக தீர்வுகளிலும் நாங்கள் பணியாற்றுவோம்.

டிஜிட்டல் இணைப்பிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். முன்னதாக இன்று மாலத்தீவில் ரூபே அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்காலத்தில், யுபிஐ மூலம் இந்தியாவையும் மாலத்தீவையும் இணைக்க நாங்கள் பணியாற்றுவோம்.

அட்டுவில் புதிய இந்திய தூதரகமும், பெங்களூருவில் புதிய மாலத்தீவு துணைத் தூதரகமும் திறப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம்.

இந்த முன்முயற்சிகள் அனைத்தும் நமது மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தும்.

நண்பர்கள்

ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவான விவாதங்களில் ஈடுபட்டுள்ளோம்.

ஏகதா துறைமுக திட்டம் வேகமாக முன்னேறி வருகிறது.

மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி மற்றும் திறனை வளர்ப்பதில், எங்களது ஒத்துழைப்பைத் தொடருவோம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலைத்தன்மை மற்றும் வளத்திற்காக நாம் இணைந்து பாடுபடுவோம். நீரியல் வரைவியல் மற்றும் பேரிடர் எதிர்வினையில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்துவோம்.

 

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் நிறுவன உறுப்பினராக மாலத்தீவு இணைவதையும் நாங்கள் வரவேற்கிறோம்.

பருவநிலை மாற்றம், இரு நாடுகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது. இந்த விஷயத்தில், சூரியசக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் தனது நிபுணத்துவத்தை மாலத்தீவுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

மேதகு அதிபர் அவர்களே,

உங்களையும், உங்கள் தூதுக்குழுவினரையும் இந்தியாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.

உங்களது வருகை நமது உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவு மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.

 

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு - இது பிரதமரின் கருத்துக்களின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் கருத்துக்கள் இந்தியில் வழங்கப்பட்டன.

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending

Media Coverage

Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026