நடிகர் ராம்சரண், அவரது துணைவி திருமதி உபாசனா கொனிடேலா மற்றும் திரு அனில் காமினேனி ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
உலகின் முதல் வில்வித்தை பிரீமியர் லீக் போட்டியின் மூலம் வில்வித்தையை ஊக்குவிக்கும் அவர்களது கூட்டு முயற்சியை இந்த சந்திப்பின்போது பிரதமர் பாராட்டினார்.
இது போன்ற முன்முயற்சிகள், வில்வித்தையின் வளமான மாண்புகளை பாதுகாப்பதுடன், ஏராளமான இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“உங்களையும், உபாசனா மற்றும் அனில் காமினேனி ஆகியோரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வில்வித்தையைப் பிரபலப்படுத்துவதற்கான உங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியவை, ஏராளமான இளைஞர்களுக்குப் பயனளிக்கும்.
@AlwaysRamCharan
@upasanakonidela”
Glad to have met you, Upasana and Anil Kamineni Garu. Your collective efforts to popularise archery are commendable and will benefit countless youngsters.@AlwaysRamCharan@upasanakonidela https://t.co/Al8aYCv0dY
— Narendra Modi (@narendramodi) October 12, 2025
ఉపాసనగారిని,అనిల్ కామినేనిగారిని కలవడం ఆనందంగా ఉంది. విలువిద్యను ప్రాచుర్యంలోకి తీసుకురావడానికి మీరు చేస్తున్న సమష్టి ప్రయత్నాలు ప్రశంసనీయం. మీరు చేస్తున్న ఈ కృషి ఎంతోమంది యువతకు ప్రయోజనం చేకూరుస్తుంది.@AlwaysRamCharan @upasanakonidela https://t.co/Al8aYCvy3w
— Narendra Modi (@narendramodi) October 12, 2025


