புது தில்லியில் நெட்வர்க் – 18 நிறுவனம் நடத்திய உதித்தெழும் இந்தியா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

தேசியப் போர் நினைவுச் சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த சில மணி நேரங்களிலே ‘உதித்தெழும் இந்தியா’ எனும் தலைப்பில் பேச தனக்கு வாய்ப்பு கிடத்தத்தற்கு தான் பெரும் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் கூறினார். அரசியலைத் தாண்டி: நாட்டின் முன்னுரிமைகளை வரையறுத்தல் எனும் கருப்பொருள் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தால் எப்படிப்பட்ட நன்மைகளை அடைய முடியும் என்பதை எடுத்துக்காட்ட, கடந்த காலம் மற்றும் தற்போதைய நிலையில் உள்ள வித்தியாசங்களை எடுத்துக் கூறி இந்தத் தலைப்பை தான் அணுக போவதாக பிரதமர் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டிற்கு முன், பணவீக்கம் மற்றும் வருமான வரி விகிதங்கள் அதிகமாக இருந்தன, ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததை பிரதமர் எடுத்துரைத்தார். தற்போது, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7 முதல் 8 சதவீதம் வரை உள்ளது, ஆனால் பணவீக்கமும், பணப்பற்றாக்குறையும் குறைவாக உள்ளது. வருமான வரியை பொறுத்தவரை மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.

சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை குறித்து பேசியபோது, ஒருகாலத்தில் 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக கருதப்பட்டது. ஆனால் 2013-ல், உலகப் பொருளாதாரத்தில் “பலவீனமான ஐந்து” நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவிட்டது. இன்று, இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக மாறியுள்ளது. எளிதாகத் தொழில் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில், 2011 ஆம் ஆண்டில் 132 ஆம் இடத்தில் இருந்த இந்தியா 2014 ஆம் ஆண்டு 142 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. ஆனால் இன்று நாம் 77 ஆம் இடத்தில் உள்ளோம் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.

தொழில் செய்தல் பட்டியலில் நாம் பின் தள்ளப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் ஊழல் என்று பிரதமர் கூறினார். இது குறித்துப் பேசிய பிரதமர், நிலக்கரி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், காற்றலை போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அந்த நேரத்தில் தலைப்பு செய்திகளாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

34 கோடி வங்கி கணக்குகள் திறப்பதற்கு காரணமான மக்கள் நிதித் திட்டத்தை மத்திய அரசு எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். இந்த வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடனும், கைபேசி எண்ணுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இன்று, இதனால் 425 நலத் திட்டங்களின் உதவிகள் நேரடியாக வங்கிக் கணக்குகளில் பரிமாற்றப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதுவரை சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக போடப்பட்டுள்ளது. இதனால் எட்டு கோடி போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர், 1.1 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் எந்தவிதமான தவறும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை ஏனெனில், இதில் பணம் நேரடியாக மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது என்று பிரதமர் கூறினார். ஆதார் அட்டை உள்ள பயனாளிகள், 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சமூகப் பொருளாதார ஆய்வின் அடிப்படையின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பிரதமர் விவசாய வெகுமதி நிதித் திட்டத்திலும் பணம் நேரடியாக 12 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், எந்த விதத் தவறும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று பிரதமர் கூறினார்.

பல ஆண்டுகளாக தாமதிக்கப்பட்டதினால், உத்தர பிரதேசத்தில் பந்சாகர் அணை, ஜார்கண்டில் மண்டல் அணை போன்ற திட்டங்களின் செலவு அதிகரித்தது என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த தாமதங்களுக்கான விலையை நேர்மையாக வரி செலுத்தும் மக்களே கொடுத்துவந்தனர் என்றும் கூறினார். இதனால், 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான திட்டங்களை பிரகதி மூலம் தானே நேரடியாக கண்காணிப்பதை பிரதமர் எடுத்துரைத்தார். இதில் பல திட்டங்கள் வட-கிழக்கு பகுதிகளில் உள்ளது. கிழக்கு இந்தியா மீது அதிக கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.

வேலைவாய்ப்புகள் குறித்து பேசிய பிரதமர், தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது; அந்நிய நேரடி முதலீடுகள் வரலாற்று உயரத்தை எட்டியுள்ளன; சர்வதேச அறிக்கைகளின் படி, ஏழ்மை வேகமாகக் குறைந்து வருகிறது; உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் முன்பைவிட அதிவேகமாக உள்ளன. சுற்றுலாவும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும், வேலைவாய்ப்பு அதிகரிக்காமல் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் கூறினார்.

தொழில்முறையாளர்களின் எண்ணிக்கையும், விற்பனை செய்யப்படும் வர்த்தக வாகன எண்ணிக்கைகளும் அதிகாமாகிவருவது குறித்தும் பிரதமர் பேசினார். பிரதமர் முத்ரா திட்டத்தின் கீழ் 15 கோடிக்கும் அதிகமான தொழில்முனைவோர்களுக்கு ஏழு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதை பிரதமர் குறிப்பிட்டார்.

நல்ல சூழலை உருவாக்குவதன் மூலம் புதிய இந்தியாவை உருவாக்க ஊடகத்தின் பங்கும் மிக முக்கியம் என்று பிரதமர் கூறினார்.

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India-Japan action plan targets exchange of 5 lakh people in five years, including 50,000 skilled Indians: Gov

Media Coverage

India-Japan action plan targets exchange of 5 lakh people in five years, including 50,000 skilled Indians: Gov
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 31, 2026
July 31, 2026

Building Trust & Capability Under PM Modi : Fair Exams, Homegrown Space Tech & India’s First Telecom Manufacturing Zone