Metro in Delhi has positively impacted the lives of citizens: PM Modi
There is a direct link between connectivity and development; Metro will mean more employment opportunities for the people: PM
Union Government has brought out a policy relating to Metros, to bring uniformity and standardization in metro rail networks across the country: PM
Our aim is also to boost “Make in India” by making metro rail coaches in India itself: PM Modi
Metro systems are an example of cooperative federalism, the Centre and the respective State Govts are working together: PM Modi
New India requires new and smart infrastructure, Union Government is working on roads, railways, highways, airways, waterways and i-ways: PM Modi

பகதூர்கர்-முண்ட்கா இடையேயான மெட்ரோ ரயில் பாதையை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.

தில்லி மெட்ரோவில் இந்த புதிய வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்ததற்காக அரியானா மற்றும் தில்லி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். தில்லி மெட்ரோ-வுடன் பகதூர்கர் இணைக்கப்பட்டதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

அரியானா மாலத்தில் குருகிராம் மற்றும் ஃபரிதாபாத்-தைத் தொடர்ந்து, மூன்றாவது இடமாக இது இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தால், மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார். சிறந்த பொருளாதார வளர்ச்சியை பகதூர்கர் பெற்றுவருவதாக குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு கல்வி மையங்கள் அங்கு இருப்பதாக கூறினார். அங்கிருந்து மாணவர்கள், தில்லிக்கும் கூட வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இதனை மெட்ரோ ரயில் திட்டம், மிகவும் எளிதானதாக மாற்றும் என்று நரேந்திர மோடி கூறினார்.

இணைப்புக்கும், வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார். மெட்ரோ ரயில் மூலம், இந்தப் பகுதி மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களின் தரத்தை உறுதிப்படுத்தவும், ஒத்த தன்மையை கொண்டுவரவும் மெட்ரோ ரயில்கள் தொடர்பான கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நமது நகரங்களில் எளிதான, வசதியான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நகர்ப்புற போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதே இலக்கு என்று அவர் கூறினார். மெட்ரோ ரயில்களுக்கான பெட்டிகளை இந்தியாவிலேயே தயாரித்து, “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தை ஊக்குவிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மெட்ரோ ரயில் அமைப்புகளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் கூட, ஒருங்கிணைந்த கூட்டாட்சியுடன் தொடர்புடையது என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் எங்கெல்லாம் மெட்ரோ ரயில் திட்டம் கட்டமைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் மத்திய அரசும், குறிப்பிட்ட மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதாக திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

புதிய இந்தியாவுக்கு புதிய மற்றும் பொலிவுறு கட்டமைப்புகள் தேவை என்று குறிப்பிட்ட பிரதமர், சாலைகள், ரயில்வே பாதைகள், நெடுஞ்சாலைகள், விமானப்பாதைகள், நீர்வழிப் பாதைகள் மற்றும் தகவல்களை பரப்புவதற்கான வழிகள் (i-ways) ஆகியவற்றை மத்திய அரசு அமைத்து வருவதாக தெரிவித்தார். இணைப்புக்கான நடவடிக்கைகளுடன், வளர்ச்சித் திட்டங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கவும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Led by iPhones, ‘Made in India’ smartphone exports grow 28% y-o-y in CY25: Counterpoint

Media Coverage

Led by iPhones, ‘Made in India’ smartphone exports grow 28% y-o-y in CY25: Counterpoint
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 24, 2026
April 24, 2026

Made in India, Built for 2047: PM Modi’s Reforms Turning Rural Hope into National Strength