77வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி நாட்டின் சாதாரண குடிமகனின் திறனை உலகிற்குக் காட்ட எவ்வாறு உதவியது என்பதை விளக்கினார். இந்தியாவின் திறன் மற்றும் இந்தியாவின் சாத்தியக்கூறுகள் நம்பிக்கையின் புதிய உயரங்களைத் தாண்டப் போகின்றன என்பது உறுதி என்றும், நம்பிக்கையின் இந்த புதிய உயரங்களை புதிய திறனுடன் எட்ட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். "இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி இந்தியாவின் சாதாரண குடிமகனின் திறனை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஜி-20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இன்று இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டாக, இதுபோன்ற பல ஜி -20 நிகழ்வுகள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட விதம், நாட்டின் சாமானிய மக்களின் திறனை உலகிற்கு உணர்த்தியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை இந்த தேசம் உலகிற்கு வழங்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். "இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகம் ஆச்சரியத்துடன் பார்க்கிறது, இதன் காரணமாக இந்தியா மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவை அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.

ஜி-20 மாநாட்டிற்காக பாலி சென்றதை நினைவு கூர்ந்த பிரதமர், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியைப் பற்றி அறிய உலகத் தலைவர்கள் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். "டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி அறிய அனைவரும் ஆர்வமாக இருந்தனர், பின்னர் நான் அவர்களிடம்,  இந்தியா செய்த அதிசயங்கள் டெல்லி, மும்பை அல்லது சென்னைக்கு மட்டுமல்ல; எனது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை 3 நகரங்களின் இளைஞர்கள் கூட இந்தியா செய்யும் அதிசயங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று சொன்னேன்’’ என்றார்.

"இந்திய இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள்"

இந்தியாவின் இளைஞர்கள் இன்று நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். "சிறிய இடங்களைச் சேர்ந்த நமது இளைஞர்களிடம், நாட்டின் இந்த புதிய ஆற்றல் தெரிகிறது என்று நான் இன்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன், நமது இந்த சிறிய நகரங்கள், மக்கள் தொகையில் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவை கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் அபிலாஷை, முயற்சி, தாக்கம் ஆகியவற்றில் யாருக்கும் சளைத்தவை அல்ல, அவற்றுக்கு அந்த திறன் உள்ளது." என்ற பிரதமர், இளைஞர்களால் கொண்டு வரப்படும் புதிய பயன்பாடுகள், புதிய தீர்வுகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் குறித்து  பேசினார்.

விளையாட்டு உலகைப் பார்க்குமாறு குடிமக்களை பிரதமர் வலியுறுத்தினார். "சேரிகளில் இருந்து வெளியே வந்த குழந்தைகள் இன்று விளையாட்டு உலகில் வலிமையைக் காட்டுகிறார்கள். சிறிய கிராமங்கள், சிறு நகரங்கள், எங்கள் மகன்கள் மற்றும் மகள்களின் இளைஞர்கள் இன்று அதிசயங்களைக் காட்டுகிறார்கள் என்றார்.

நாட்டில் 100 பள்ளிகளில் உள்ள குழந்தைகள் செயற்கைக்கோள்களை உருவாக்கி அவற்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். "இன்று ஆயிரக்கணக்கான டிங்கரிங் ஆய்வகங்கள் புதிய விஞ்ஞானிகளை உருவாக்குகின்றன. இன்று, ஆயிரக்கணக்கான டிங்கரிங் ஆய்வகங்கள் கோடிக்கணக்கான குழந்தைகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாதையை எடுக்க ஊக்குவிக்கின்றன’’ அவர் தெரிவித்தார்.

வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை என்று இளைஞர்களுக்கு பிரதமர் உறுதியளித்தார். "நீங்கள் விரும்பும் பல வாய்ப்புகள் உள்ளன, இந்த நாடு வானத்தை விட உங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் திறன் கொண்டது." என்றார் அவர்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது எவ்வாறு அவசியம் என்பதையும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஜி 20 இல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி பிரச்சினையை முன்னெடுத்துள்ளதாகவும், ஜி 20 நாடுகள் அதை ஏற்றுக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

 

"எங்கள் தத்துவத்தில் உலகம் இந்தியாவுடன் இணைகிறது, உலகளாவிய காலநிலை நெருக்கடிக்கு நாங்கள் வழி காட்டியுள்ளோம்" என்று பிரதமர் கூறினார்.

நமது தத்துவத்தை உலகின் முன் வைப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்றும், அந்த தத்துவத்துடன் உலகம் நம்முடன் இணைகிறது என்றும் பிரதமர் கூறினார். ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு என்று சொன்னோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நமது அறிக்கை மிகவும் பெரியது, இன்று உலகம் அதை ஏற்றுக்கொள்கிறது. கோவிட் -19 க்குப் பிறகு, நமது  அணுகுமுறை ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்று உலகத்திற்குச் சொன்னோம் என்று அவர் தெரிவித்தார்.

நோயின் போது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் சமமாக கவனிக்கப்பட்டால் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று இந்தியா கூறியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். "ஜி-20 உச்சிமாநாட்டிற்காக ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று நாம் உலகின் முன் கூறியுள்ளோம், இந்த எண்ணத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். உலகம் எதிர்கொள்ளும் காலநிலை நெருக்கடிக்கான வழியை நாம் காட்டியுள்ளோம், மேலும் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்ற இயக்கத்தை நாம் தொடங்கியுள்ளோம்’’ என குற்றிப்பிட்டார்.

 

நாம் ஒன்றாக இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டணியை உலகின் முன் அமைத்தோம். இன்று உலகின் பல நாடுகள் சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. உயிர் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பெரும் பூனை கூட்டணியின் ஏற்பாட்டை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். புவி வெப்பமயமாதல் மற்றும் இயற்கை சீற்றங்களால் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதங்களை நிவர்த்தி செய்ய தொலைநோக்கு ஏற்பாடுகள் தேவை. எனவே, பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, சி.டி.ஆர்.ஐ உலகிற்கு ஒரு தீர்வை வழங்கியுள்ளது. இன்று, உலகம் கடல்களை மோதலின் மையமாக மாற்றுகிறது, அதன் அடிப்படையில் நாம் உலகிற்கு கடல்களின் தளத்தை வழங்கியுள்ளோம், இது உலகளாவிய கடல் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க உதவும் என்று பிரதமர் மேலும் கூறினார்.

பாரம்பரிய மருத்துவ முறைக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையத்தை இந்தியாவில் அமைக்க இந்தியா பாடுபட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். யோகா, ஆயுஷ் மூலம் உலக நலனுக்காகவும், உலக சுகாதாரத்திற்காகவும் பாடுபட்டுள்ளோம். இன்று, இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது. இந்த வலுவான அடித்தளத்தை முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் கடமையாகும். இது நமது பொறுப்பு" என்றார் அவர்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s electric PV retail sales jump 44% in February; Tata Motors leads: FADA

Media Coverage

India’s electric PV retail sales jump 44% in February; Tata Motors leads: FADA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 7, 2026
March 07, 2026

Reform, Perform and Transform: PM Modi’s Mantra for India’s Growth