கர்தவ்ய (கடமை) பாதையில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழா இந்தியாவின் ஒற்றுமை, வலிமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியது. ராஷ்ட்ரிய சமர் ஸ்மாரக்கில் (தேசிய போர் நினைவிடம்) பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர். ஆயுதப் படைகளின் அணிவகுப்புக் குழுக்கள் ஒழுக்கத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தின, அதே சமயம் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டின. இந்திய விமானப்படையின் மூச்சடைக்கக்கூடிய பறக்கும் பயணம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. விழாவிற்கு திரண்டிருந்த மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.




























