பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் நிறுவனர் திரு வினோத் கோஸ்லாவுடன் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது பிரதமரும் திரு கோஸ்லாவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இந்தியாவின் துடிப்புமிக்க ஸ்டார்ட் அப் சூழல் அமைப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களை விவாதித்தனர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“திரு வினோத் கோஸ்லாவுடனான இன்றைய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இந்தியாவின் துடிப்புமிக்க ஸ்டார்ட் அப் சூழல் அமைப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களை நாங்கள் விவாதித்தோம்.
@vkhosla”.
It was wonderful interacting with Mr. Vinod Khosla earlier today. We discussed aspects relating to AI and India’s vibrant StartUp ecosystem.@vkhosla pic.twitter.com/1ulHnLXmLE
— Narendra Modi (@narendramodi) February 18, 2026


