PM congratulates President Costa on assuming charge as the President of the European Council
The two leaders agree to work together to further strengthen the India-EU Strategic Partnership
Underline the need for early conclusion of a mutually beneficial India- EU FTA

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மேதகு திரு அன்டோனியோ கோஸ்டா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அதிபர் திரு கோஸ்டாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ராஜீய கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட இரு தலைவர்களும், வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, பசுமை எரிசக்தி, டிஜிட்டல் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டனர்.

பரஸ்பரம் பயனளிக்கும் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிறைவு செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

இருதரப்பிற்கும் உகந்த நேரத்தில், இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை தலைவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தனர்.

பரஸ்பர நன்மை பயக்கும்  பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்த கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian Railways to roll out the first rake of 20 LHB coaches for Bangladesh Railway on August 12

Media Coverage

Indian Railways to roll out the first rake of 20 LHB coaches for Bangladesh Railway on August 12
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlighting determination, perseverance, and continuous effort in overcoming life's challenges
August 13, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting the power of determination, perseverance, and courage in overcoming life's challenges and turning adverse circumstances into favorable ones.

The Prime Minister wrote on X;

"दैवं पुरुषकारेण यः समर्थः प्रबाधितुम्।

न दैवेन विपन्नार्थः पुरुषः सोऽवसीदति॥"

A person who possesses the determination, perseverance and courage to turn adverse circumstances into favorable ones is never defeated by the challenges of life. Instead, through continuous effort and unwavering resolve, he moves forward and ultimately achieves success.