வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
வாரணாசியில் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் பிரதமர் பங்கேற்கிறார்
ஸ்வர்வேத் மகாமந்திரை பிரதமர் திறந்து வைக்கிறார்
காசி தமிழ் சங்கமம் 2023-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்
வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் விரைவு ரயிலைப் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
தடையற்ற சுற்றுலா அனுபவத்தை எளிதாக்கும் வகையில், ஒருங்கிணைந்த சுற்றுலா அனுமதிச் சீட்டுத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
சூரத் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்
சூரத் டைமண்ட் போர்ஸ் எனப்படும் வைர சந்தையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 17-18 தேதிகளில் குஜராத்தின் சூரத் மற்றும் உத்தரபிரதேசத்தின் வாரணாசி ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 17 ஆம் தேதி காலை 10:45 மணியளவில், சூரத் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். காலை 11.15 மணிக்கு சூரத் வைர சந்தையைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், வாரணாசி செல்லும் அவர், மாலை, 3:30 மணிக்கு, நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்கிறார். மாலை 5.15 மணிக்கு நமோ படித்துறையில் காசி தமிழ் சங்கமம் 2023-ஐ தொடங்கி வைக்கிறார்.

டிசம்பர் 18 ஆம் தேதி காலை 10:45 மணியளவில், பிரதமர் ஸ்வர்வேத் மகாமந்திருக்குச் செல்கிறார். அதைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் நடைபெறும் விழாவில் அதன் திறப்பு விழா நடைபெறும். மதியம் 1 மணியளவில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் பிரதமர் பங்கேற்கிறார். அதன்பின், மதியம், 2:15 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், 19 ஆயிரத்து, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை, பிரதமர் துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சூரத்தில் பிரதமர்

சூரத் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த முனையக் கட்டிடம் 1200 உள்நாட்டு பயணிகளையும் 600 சர்வதேச பயணிகளையும் ஒரே நேரத்தில் கையாளும் திறன் கொண்டது. இது மேலும் 3000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட வகையிலும், வருடாந்திர பயணிகள் கையாளும் திறனை 55 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முனைய கட்டிடம், சூரத் நகரத்தின் நுழைவாயிலாக இருப்பதால், அதன் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் சாராம்சம் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பிரதிபலிக்கும் வகையில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த உணர்வை உருவாக்குகிறது. மேம்படுத்தப்பட்ட முனைய கட்டிடத்தின் முகப்பு சூரத் நகரத்தின் 'ராண்டர்' பிராந்தியத்தின் பழைய வீடுகளின் வளமான மற்றும் பாரம்பரிய மரவேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இது பயணிகளின் அனுபவத்தை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தில் இரட்டை இன்சுலேட்டட் கூரை அமைப்பு, எரிசக்தி சேமிப்பிற்கான அமைப்புகள், குறைந்த வெப்ப அலகு, மழை நீர் சேகரிப்பு அமைப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை நிலச் சீரமைப்பு மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நிலைத்தன்மை அம்சங்கள் உள்ளன.

சூரத் டைமண்ட் போர்ஸ் எனப்படும் சூரத் வைரச் சந்தையையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இது சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமாக இருக்கும். கடினமான மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகள் இரண்டையும் வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய மையமாக இது இருக்கும். இறக்குமதி - ஏற்றுமதிக்கான அதிநவீன 'சுங்க அனுமதி மாளிகை'யை இது கொண்டிருக்கும்; சில்லறை நகை வணிகத்திற்கான நகை வணிக வளாகம் மற்றும்  சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்புப் பெட்டகங்களின் வசதி இதில் உள்ளன.

வாரணாசியில் பிரதமர்

டிசம்பர் 17-ம் தேதி வாரணாசியில் உள்ள கட்டிங் மெமோரியல் பள்ளி மைதானத்தில் நடைபெறும் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் பிரதமர் பங்கேற்கிறார். அங்கு, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமர் ஸ்வநிதி, பிரதமர் உஜ்வாலா போன்ற பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தனது தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, காசி தமிழ் சங்கமம் 2023-ஐ நமோ படித்துறையில் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி - வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலை பிரதமர்  கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

டிசம்பர் 18-ம் தேதி வாரணாசியின் உமாராஹாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்வர்வேத் மகாமந்திரை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மகாமந்திர் பக்தர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.

அதன் பிறகு, பிரதமர் தமது தொகுதியின் கிராமப்புற பகுதியான சேவாபுரியில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையில் பிரதமர் பங்கேற்கிறார். காசி சன்சாத் கேல் பிரதியோகிதா 2023 பங்கேற்பாளர்களின் சில நேரடி விளையாட்டு நிகழ்வுகளையும் அவர் பார்வையிடுவார். அதன் பிறகு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு திட்ட பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், வாரணாசியின் சூழலை மாற்றுவதற்கும், வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை வசதியை மேம்படுத்துவதற்கும் பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார். இந்த வகையில் மற்றொரு நடவடிக்கையாக, சுமார்  19,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சுமார் ரூ.10,900 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ள புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு வழித்தட திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பல்லியா-காசிப்பூர் நகர ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்றும் திட்டம் உள்ளிட்ட பிற ரயில்வே திட்டங்கள் தொடங்கப்படும். இந்தாரா-டோஹ்ரிகாட் ரயில் பாதை கேஜ் மாற்றும் திட்டம் போன்றவையும் இதில் அடங்கும்.

வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தோஹ்ரிகாட்-மவு மெமு ரயில் மற்றும் புதிதாகத் திறக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு ரயில்களை பிரதமர்  கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது இன்ஜினையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

ரூ.370 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு ஆர்.ஓ.பி.க்களுடன் கூடிய பசுமை வயல் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை பிரதமர் திறந்து வைக்கிறார். இது வாரணாசி நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் பார்வையாளர்களின் வசதியை அதிகரிக்கும். மேலும் 20 சாலைகளை பலப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். கைதி கிராமத்தில் சங்கம் படித்துறை சாலை மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் குடியிருப்பு கட்டிடங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

மேலும், காவல்துறையினரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, போலீஸ் லைன் மற்றும் பிஏசி புல்லன்பூரில் இரண்டு 200 மற்றும் 150 படுக்கைகள் கொண்ட பல அடுக்கு கட்டடங்கள், 9 இடங்களில் கட்டப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் மற்றும் அலைப்பூரில் கட்டப்பட்ட 132 கிலோவாட் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவான சுற்றுலாத் தகவல்களுக்கான இணையதளம் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுலா பயண அட்டைத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஒருங்கிணைந்த பயண அனுமதி அட்டைத் திட்டத்தின் மூலம், காசி விஸ்வநாதர் ஆலயம், கங்கை படகு சேவை மற்றும் சாரநாத்தின் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிக்கு ஒரே தளத்தில் முன்பதிவு செய்ய முடியும். இது ஒருங்கிணைந்த கியூஆர் குறியீடு சேவைகளை வழங்கும்.

6500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சித்ரகூட் மாவட்டத்தில் சுமார் ரூ.4000 கோடி செலவில் 800 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி பூங்காவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பெட்ரோலிய விநியோக சங்கிலியை மேம்படுத்துவதற்காக, மிர்சாபூரில் ரூ. 1050 கோடிக்கு மேல் செலவில் கட்டப்படவுள்ள புதிய பெட்ரோலிய எண்ணெய் முனையத்தின் கட்டுமானத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

வாரணாசி-பதோஹி தேசிய நெடுஞ்சாலை 731 பி (தொகுப்பு-2) ரூ. 900 கோடிக்கு மேல் செலவில் அகலப்படுத்துதல் ஆகியவை பிரதமரால் அடிக்கல் நாட்டப்படும் பிற திட்டங்களில் அடங்கும். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ. 280 கோடி செலவில் 69 ஊரக குடிநீர் திட்டங்கள், பி.எச்.யு அதிர்ச்சி மையத்தில் 150 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டுமானம், 8 கங்கா படித்துறைகளின் மறுசீரமைப்புப் பணிகள், மாற்றுத் திறனாளிகள் உறைவிட மேல்நிலைப் பள்ளி கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s 5G traffic surges 70% Y-o-Y: Nokia report

Media Coverage

India’s 5G traffic surges 70% Y-o-Y: Nokia report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM chairs CCS Meeting to review measures being taken in the context of ongoing West Asia Conflict
April 01, 2026
Interventions across agriculture, fertilizers, shipping, aviation, logistics and MSMEs to mitigate emerging challenges discussed
Supply diversification for LPG and LNG, fuel duty reduction and power sector measures reviewed to ensure stability of essential supplies
Steps being taken to ensure stable prices of essential commodities and strict action against hoarding and black-marketing
Control Rooms set up for constant monitoring and interaction with States/UTs on prices and enforcement of Essential Commodities Act
Various efforts being taken to ensure fertilizer supply such as maintaining Urea Production and coordination with overseas suppliers for DAP/NPKS supplies
PM assesses availability of critical needs for the common man
PM discusses availability of fertilisers in the country and steps being taken to ensure its availability in the Kharif and Rabi seasons
PM directs that all efforts must be made to safeguard the citizens from the impact of this conflict
PM underlines the need for timely & smooth flow of authentic information to the public to prevent misinformation and rumour mongering
Enough coal stock exists which shall serve power needs adequately in coming months

Prime Minister Shri Narendra Modi a special of the Cabinet Committee on Security (CCS) to review measures taken by various Ministries/Departments and also discussed further initiatives to be taken in the context of the ongoing West Asia conflict, at 7 Lok Kalyan Marg today. This was the second special CCS meeting on this issue.

Cabinet Secretary briefed about the action taken to ensure supply of petroleum products, particularly LNG/LPG, and sufficient power availability. Sources are being diversified for procurement of LPG with new inflows from different countries. Similarly, Liquefied Natural Gas (LNG) is being sourced from different countries. He further briefed that LPG prices for domestic consumers have remained the same and Anti-diversion enforcement to curb hoarding and black marketing of LPG is being conducted regularly.

Initiatives have also been taken to expand Piped Natural Gas connections. Measures like exempting the gas-based power plants with a capacity of 7-8 GW from gas pooling mechanism and increasing of rake for positioning more coal at thermal power stations etc. have also been taken to ensure availability of power during the peak summer months.

Further, interventions proposed to be taken for emerging challenges in various other sectors such as agriculture, civil aviation, shipping and logistics were also discussed.

Various efforts like maintaining urea production to meet requirements, coordinating with overseas supplies for DAP/NPKS suppliers are being taken to ensure fertilizer supply. State governments are being requested to curb black marketing, hoarding, and diversion of fertilizers through daily monitoring, raids, and strict action.

The retail prices of food commodities have been stable over the past one month. Control Rooms have been set up for constant monitoring and interaction with States/UTs on prices and enforcement of Essential Commodities Act. The prices of agricultural products , vegetables and fruits are also being monitored.

Efforts to globally diversify our sources for energy, fertilizers and other supply chains, and international initiatives for securing safe passage of vessels through the strait of Hormuz and ongoing diplomatic efforts are being taken.

Enhanced coordination, real-time communication, and proactive measures across central, state, and district levels to drive effective information dissemination and public awareness amid the evolving crisis is being undertaken.

Prime Minister assessed the availability of critical needs for the common man. He discussed availability of fertilisers in the country and steps being taken to ensure its availability in the Kharif and Rabi seasons. He said that all efforts must be made to safeguard the citizens from the impact of this conflict. Prime Minister also emphasised smooth flow of authentic information to the public to prevent misinformation and rumour mongering.

Prime Minister directed all concerned departments to take all possible measures to ameliorate the problems of citizens and sectors affected by the ongoing global situation.