“ஒருபக்கம், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் தடைசெய்துள்ளோம், மறுபக்கம் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சியை நாம் கட்டாயமாக்கியுள்ளோம்”
“21-ம் நூற்றாண்டின் இந்தியா, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகவும் தெளிவான திட்டத்தோடு முன்னோக்கிச் செல்கிறது”
“முந்தைய நிலையோடு ஒப்பிடுகையில், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் சதுப்பு நிலப்பகுதிகளின் எண்ணிக்கை சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது”
“உலகத்தின் பருவநிலைப் பாதுகாப்புக்கு ஆர்வம் காட்டுவோர் பற்றி உலகின் ஒவ்வொரு நாடும் சிந்திக்க வேண்டும்”
“இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த கலாச்சாரத்தில் இயற்கையும் இருக்கிறது, முன்னேற்றமும் இருக்கிறது”
“லைஃப் இயக்கத்தின் அடிப்படையான கோட்பாடு உலகத்தை மாற்றுவதற்கு உங்களின் இயல்பை மாற்றுவதாகும்”
“பருவநிலை மாற்றம் குறித்த உணர்வு இந்தியாவுடன் மட்டும் இருக்கவில்லை, இந்த முன்முயற்சிக்கு உலகம் முழுவதுமான ஆதரவு அதிகரித்து வருகிறது”
“லைஃப் இயக்கத்திற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் வரும் காலங்களில் சுற்றுச்சூழலுக்கு வலுவான கேடயமாக இருக்கும்”

வணக்கம்,

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உங்கள் அனைவருக்கும், நமது நாட்டினருக்கும்,  உலகின் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கைவிடும் இயக்கம் என்பது இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின கருப்பொருளாகும்,  உலகளாவிய முன்முயற்சிக்கு முன்னதாகவே, இந்தியா இந்த திசையில் கடந்த 4-5 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுவதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான பணியை 2018-ல் இரண்டு நிலைகளில் இந்தியா தொடங்கியது. ஒருபக்கம், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் தடை செய்துள்ளோம், மறுபக்கம் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சியை நாம் கட்டாயமாக்கியுள்ளோம். இதன் காரணமாக இந்தியாவில் உருவாகும் மொத்த வருடாந்திர பிளாஸ்டிக் கழிவுகளில் 75 சதவீதமாக உள்ள சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கட்டாயமாகியுள்ளது. இந்த வரம்புக்குள் சுமார் 10 ஆயிரம் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், வணிக நிறுவனங்களும் வந்துள்ளன.

நண்பர்களே,

21-ம்  நூற்றாண்டின் இந்தியா, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகவும் தெளிவான திட்டத்தோடு முன்னோக்கிச் செல்கிறது. தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தொலைநோக்கில் சமச்சீர் நிலையை இந்தியா உருவாக்கியுள்ளது.  இதன் அடிப்படையில், ஏழையிலும் ஏழையாக உள்ளவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. எதிர்காலத்தின் எரிசக்தி தேவையையும் மனதில் கொண்டு மாபெரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பசுமை மற்றும் தூய எரிசக்தி மீது முன்னெப்போதும் இல்லாத கவனத்தை இந்தியா செலுத்தியுள்ளது. மக்களின் பணத்தை சேமிப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், சூரியமின்சக்தி, எல்இடி விளக்குகள் போன்றவை  உதவியுள்ளன. உலகளாவிய நோய்த் தொற்று காலத்தில் இந்தியா தலைமைத்துவத்தை  பெற்ற போது பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை தொடங்கியது. ரசாயன உரங்களில் இருந்து நிலத்தையும், நீரையும் பாதுகாக்க இயற்கை வேளாண்மையை நோக்கி பெரும் நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்தது.

சகோதர, சகோதரிகளே,

கடந்த ஒன்பது ஆண்டுகளில் சதுப்பு நிலங்கள் மற்றும் ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவில்  முன்பு இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.  பசுமை எதிர்காலம், பசுமைப் பொருளாதாரம் என்ற  மேலும் இரண்டு இயக்கங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. இன்று அமிர்த பாரம்பரியத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் பங்களிப்புடன்  ராம்சர் பகுதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். எதிர்காலத்தில் ராம்சர் பகுதிகள் சுற்றுச்சூழல் மிக்க சுற்றுலாவின் மையமாக திகழும். ஆயிரக்கணக்கான மக்களுக்கு பசுமை வேலைவாய்ப்புகளை அளிக்கும் ஆதாரமாக திகழும். இரண்டாம் திட்டமான மிஸ்தி திட்டம் நாட்டின் மாங்குரோவ் சுற்றுச்சூழல் பகுதிகளை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் உதவும். மாங்குரோவ் பகுதிகள் நாட்டின் ஒன்பது மாநிலங்களில் மீட்கப்படும். இது கடல்மட்ட உயர்வு மற்றும் புயல் போன்ற பேரிடர் அபாயங்களிலிருந்து கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

நண்பர்களே,

உலகின் பருவநிலையைப் பாதுகாப்பதற்கு அனைத்து நாடுகளும், சிந்திக்க வேண்டும். வளரும் நாடுகள்  வளர்ச்சியை மேற்கொண்ட பின்னர், சுற்றுச்சூழல் குறித்து கவலைத் தெரிவிக்கும் போக்கு உலகின் பெரிய மற்றும் நவீன நாடுகளுக்கிடையே இருந்து வருகிறது. அத்தகையை நாடுகள், வளர்ச்சியின் இலக்குகளை அடைந்தாலும், சுற்றுச்சூழலுக்காக உலக நாடுகள் விலைக்கொடுக்க நேர்ந்துள்ளது. வளர்ந்த நாடுகளின்  தவறான கொள்கைகளால், வளரும் மற்றும் வளர்ச்சிப்பெறாத நாடுகள், பாதிக்கப்பட்டுகின்றன. சில வளர்ந்த நாடுகள், பல ஆண்டுகளாக இந்த அணுகுமுறையை நிறுத்தவில்லை. அத்தகைய  நாடுகளின் முன்பாக  பருவநிலை நீதி குறித்து இந்தியா கேள்வியை எழுப்பியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் ஆயிரக்கணக்கான வருட பாரம்பரியத்தில் இயற்கையும், வளர்ச்சியும் இடம்பெற்றுள்ளன. அவை சூழலியல் மற்றும் பொருளாதாரத்திற்கு கவனம் செலுத்த ஊக்கமளித்துள்ளன. இதுவரை இல்லாத வகையில் இந்தியா, உள்கட்டமைப்பில் முதலீடு செய்கிறது, சுற்றுச்சூழலில் சமமான கவனம் செலுத்துகிறது. ஒரு பக்கம் 4ஜி, 5ஜி என  விரிவாக்கம் செய்யப்படும்போதே, மறுபக்கம் நாட்டின் வனப்பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

ஏழை மக்களுக்காக 4 கோடி வீடுகளை இந்தியா கட்டித்தரும் அதே சமயம் வனவிலங்கு  சரணாலயங்கள் மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கை சாதனை அளவில் அதிகரித்துள்ளன.  நீர்வள இயக்கத்தின் மூலம் நீர் பாதுகாப்புக்காக 50ஆயிரம் அமிர்த நீர் நிலைகள் அமைக்கப்படுகின்றன. 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக  உள்ள இந்தியா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதல் 5 நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பேரிடர் மீட்பு உட்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு, சர்வதேச புலிகள் பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகளின் அடித்தளமாக இந்தியா உள்ளது.

நண்பர்களே,

சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறையான ‘லைப்’ இயக்கம் தற்போது பொதுமக்கள் பங்கெடுக்கும் இயக்கமாக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பருவநிலை மாறுபாட்டை எதிர்கொண்டு முறியடிக்க ஏதுவான வாழ்வியல் மாற்றத்திற்கான புதிய அணுகுமுறைகளை இந்தியா பரவலாக்கி வருகிறது. இந்த இயக்கம் கடந்த ஆண்டு குஜராத்தின் கெவாடியா – ஏக்தா நகரில் அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ‘லைஃப்’ இயக்கம் 2 கோடி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 30 நாட்களில் இந்த இயக்கத்தில் 2 கோடி மக்கள் தங்களது பங்களிப்பை  தந்துள்ளனர். இந்த இயக்கத்தின் சார்பில், “எனது நகரத்திற்கு வாழ்க்கை அளிப்பது” என்ற தலைப்பில் பேரணிகளும், விநாடி வினா போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கையாக தங்களது அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி என்ற மந்திரத்தை லட்சக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இயற்கைக்கு மாற்றமளித்து அதன் மூலம் உலகில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே ‘லைஃப்’ இயக்கத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும். அதே நேரத்தில் எதிர் வரும் புதிய தலைமுறையின் ஒட்டு மொத்த மனித குலத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதையே ‘லைஃப்’ இயக்கம் குறிக்கோளாக கொண்டுள்ளது.

நண்பர்களே,

லைஃப் இயக்கம் வாயிலாக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் சுற்றுச்சூழலை பல மடங்கு பாதுகாக்கும் கேடயமாக திகழ்கிறது. லைஃப் இயக்கத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட தலை சிறந்த கருத்துக்கள் கொண்ட தொகுப்பை வெளியிட்டிருக்கும் இன்றைய  செயல்பாடு பசுமை வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு பக்கபலமாக அமையும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India leads globally in renewable energy; records highest-ever 31.25 GW non-fossil addition in FY 25-26: Pralhad Joshi.

Media Coverage

India leads globally in renewable energy; records highest-ever 31.25 GW non-fossil addition in FY 25-26: Pralhad Joshi.
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister lauds Suprabhatam programme on Doordarshan for promoting Indian traditions and values
December 08, 2025

The Prime Minister has appreciated the Suprabhatam programme broadcast on Doordarshan, noting that it brings a refreshing start to the morning. He said the programme covers diverse themes ranging from yoga to various facets of the Indian way of life.

The Prime Minister highlighted that the show, rooted in Indian traditions and values, presents a unique blend of knowledge, inspiration and positivity.

The Prime Minister also drew attention to a special segment in the Suprabhatam programme- the Sanskrit Subhashitam. He said this segment helps spread a renewed awareness about India’s culture and heritage.

The Prime Minister shared today’s Subhashitam with viewers.

In a separate posts on X, the Prime Minister said;

“दूरदर्शन पर प्रसारित होने वाला सुप्रभातम् कार्यक्रम सुबह-सुबह ताजगी भरा एहसास देता है। इसमें योग से लेकर भारतीय जीवन शैली तक अलग-अलग पहलुओं पर चर्चा होती है। भारतीय परंपराओं और मूल्यों पर आधारित यह कार्यक्रम ज्ञान, प्रेरणा और सकारात्मकता का अद्भुत संगम है।

https://www.youtube.com/watch?v=vNPCnjgSBqU”

“सुप्रभातम् कार्यक्रम में एक विशेष हिस्से की ओर आपका ध्यान आकर्षित करना चाहूंगा। यह है संस्कृत सुभाषित। इसके माध्यम से भारतीय संस्कृति और विरासत को लेकर एक नई चेतना का संचार होता है। यह है आज का सुभाषित…”