"பேராசை உண்மையை உணரவிடாமல் தடுக்கிறது"
"ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற கடுமையான கொள்கையை இந்தியா கொண்டுள்ளது"
"ஊழலை ஒழிப்பது மக்களுக்கான அரசின் புனிதமானக் கடமையாகும்"
"சரியான நேரத்தில் சொத்துத் தடமறிதல் மற்றும் குற்றத்தின் வருவாயை அடையாளம் காண்பது சம அளவில் முக்கியமானது"
"மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வலுவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் ஜி 20 நாடுகள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் "
"நமது நிர்வாக மற்றும் சட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நமது மதிப்பு அமைப்புகளில் நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்"

மதிப்பிற்குரிய பெண்களே, பெருமக்களே, வணக்கம்!

 

முதல் முறையாக ஜி 20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு உங்கள் அனைவரையும் நான் மிகவும் அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் கொல்கத்தாவில் சந்திக்கிறீர்கள் - நோபல் பரிசு பெற்ற குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் நகரம் இது. பேராசைக்கு எதிராக அவர் தனது எழுத்துக்களில் எச்சரித்திருந்தார், ஏனென்றால் அது உண்மையை உணர விடாமல் தடுக்கிறது. பண்டைய இந்திய உபநிடதங்கள் 'பேராசை வேண்டாம்' என்று பொருள்படும் 'மா கிரிதா'வையும் விரும்பின.

 நண்பர்களே,

ஊழலின் தாக்கம் ஏழை, எளிய மக்களால் அதிகம் உணரப்படுகிறது. இது வள பயன்பாட்டைப் பாதிக்கிறது. இது சந்தைகளைச் சிதைக்கிறது. இது சேவை வழங்கலைப் பாதிக்கிறது. மேலும், இறுதியில், இது மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கிறது. அர்த்த சாஸ்திரத்தில், கௌடில்யர் மாநிலத்தின் வளங்களை அதிகரித்து அதன் மக்களின் நலனை அதிகரிப்பதே அரசாங்கத்தின் கடமை என்று வலியுறுத்துகிறார். இந்த இலக்கை அடைய ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும். அதனால்தான், ஊழலை எதிர்த்துப் போராடுவது நமது மக்களுக்கு நமது புனிதமான கடமையாகும்.

நண்பர்களே,

ஊழலுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற கடுமையான கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. வெளிப்படையான மற்றும் பொறுப்பான சூழலை உருவாக்க தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமையை நாங்கள் பயன்படுத்துகிறோம். மக்கள் நலத் திட்டங்களிலும், அரசுத் திட்டங்களிலும் உள்ள கசிவுகள், இடைவெளிகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். இத்தகைய பரிமாற்றங்களின் மதிப்பு 360 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது, இது எங்களுக்கு 33 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துகிறது. வணிகங்களுக்கான பல்வேறு நடைமுறைகளையும் நாங்கள் எளிமைப்படுத்தியுள்ளோம்.  அரசு சேவைகளை ஆட்டோமேஷன் மற்றும்

டிஜிட்டல் மயமாக்குவதற்கு வாடகை தேடும் வாய்ப்புகளை நீக்கியுள்ளது. எங்கள் அரசாங்க இ-மார்க்கெட்பிளேஸ் அல்லது ஜெம் (ஜிஇஎம்) தளம், அரசாங்க கொள்முதலில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. பொருளாதாரக் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகிறோம். 2018-ம் ஆண்டு பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்தோம். அதன் பின்னர், பொருளாதாரக் குற்றவாளிகள் மற்றும் தப்பியோடியவர்களிடமிருந்து ஒரு புள்ளி எட்டு பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை மீட்டுள்ளோம். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், 2014 முதல் 12 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை எங்கள் அரசாங்கம் முடக்கியுள்ளது.

மேதகு தலைவர்களே,

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் பிரச்சனை அனைத்து ஜி 20 நாடுகளுக்கும் உலகளாவிய தெற்கிற்கும் ஒரு சவாலாகும். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற எனது முதல் ஜி-20 மாநாட்டில் உரையாற்றிய போதுஇதே விவகாரம் குறித்துப் பேசினேன். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டில், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கும், சொத்து மீட்புக்கும் 9 அம்ச செயல்திட்டத்தை முன்வைத்தேன். மேலும், உங்கள் குழுவால் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தகவல் பகிர்வு மூலம் சட்ட அமலாக்க ஒத்துழைப்பு என்ற மூன்று முன்னுரிமைப் பகுதிகளில் நடவடிக்கை சார்ந்த உயர் மட்டக் கொள்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்;. சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையே முறைசாரா ஒத்துழைப்பு குறித்து ஒரு புரிந்துணர்வு எட்டப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது குற்றவாளிகள் எல்லைகளைக் கடக்கும்போது சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும். சரியான நேரத்தில் சொத்துத் தடமறிதல் மற்றும் குற்றத்தின் வருவாயை அடையாளம் காண்பது சமமாக முக்கியம். நாடுகள் தங்கள் உள்நாட்டு சொத்து மீட்பு வழிமுறைகளை மேம்படுத்தவும் நாம் ஊக்குவிக்க வேண்டும். வெளிநாட்டு சொத்துக்களை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, ஜி 20 நாடுகள் தண்டனையற்ற அடிப்படையிலான பறிமுதல்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும். இதன் மூலம் உரிய நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகள் விரைவாக நாடு திரும்புவதையும், நாடு கடத்தப்படுவதையும் உறுதி செய்ய முடியும். மேலும், ஊழலுக்கு எதிரான நமது கூட்டுப் போராட்டம் குறித்து இது ஒரு வலுவான சமிக்ஞையை அனுப்பும்.

மேதகு தலைவர்களே, 

ஜி 20 என்ற முறையில், நமது கூட்டு முயற்சிகள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கணிசமாக ஆதரிக்க முடியும். மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஊழலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் வலுவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஊழலுக்கு எதிரான நமது போராட்டத்தில் தணிக்கை நிறுவனங்களின் பங்கிற்கும் நாம் உரிய மரியாதை அளிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நிர்வாக மற்றும் சட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதோடு, நமது மதிப்பு அமைப்புகளில் நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே, நியாயமான மற்றும் நிலையான சமூகத்திற்கான அடித்தளத்தை அமைக்க முடியும். உங்கள் அனைவருக்கும் பயனுள்ள மற்றும் வெற்றிகரமான சந்திப்பு அமைய வாழ்த்துகிறேன்.

வணக்கம்!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Domestic air passenger traffic to rise by 3-6 pc in this fiscal: ICRA

Media Coverage

Domestic air passenger traffic to rise by 3-6 pc in this fiscal: ICRA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 24, 2026
July 24, 2026

Aatmanirbhar in Action — Space, Missiles, EVs & Livelihoods Under PM Modi’s Watch