அரசுப் பணியில் புதிதாக சேர உள்ளவர்களோடு கலந்துரையாடல்
"தொடர்ந்து நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் இந்த அரசின் குறியீடாக அமைகிறது"
"மத்திய அரசு வேலைவாய்ப்புகளைப் பொறுத்தமட்டில் பணி நியமன நடவடிக்கைகள் குறிப்பிட்ட நேரத்தில் முறைப்படுத்தப்பட்டுள்ளது"
"பணிநியமன நடவடிக்கைகள் மற்றும் பதவி உயர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவது இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது"
"சேவை மனப்பான்மையோடு பணியாற்றுங்கள்" "குடிமக்கள் எப்போதுமே நேர்மையானவர்கள்'"
"தொழில்நுட்பதைப் பயன்படுத்தி சுயமாக கற்கும் வாய்ப்பு இன்றைய தலைமுறையினருக்கு கிடைத்துள்ளது"
"சுயவேலைவாய்ப்புகள் பெருகி வருவதன் மூலம் இந்தியா இன்று மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது"
"நன்றாக கற்றுணர்ந்து உங்களை தயார்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்"

வணக்கம்!

நண்பர்களே,

2023-ஆம் ஆண்டின் முதலாவது வேலைவாய்ப்பு முகாம், இது. வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமல்லாது கோடிக்கணக்கான குடும்பங்களிடையே இன்றைய நிகழ்வு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் லட்சக்கணக்கானோர் அரசு பணிக்கான நியமனங்களை பெற உள்ளனர்.

மத்திய அரசு மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் தொடர் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற முகாம்கள் நமது அரசின் புதிய அடையாளமாக மாறி உள்ளன. பணி நியமன நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள். மத்திய அரசு பணிக்கான பணி நியமன நடைமுறை, முன்பு இருந்ததைவிட தற்போது சீரமைக்கப்பட்டு, துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

பணி நியமன நடைமுறையில் நீங்கள் காணும் வெளிப்படைத்தன்மையும், வேகமும் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் பதவி உயர்வு பிரச்சனையை தீர்த்து வைப்பதில் நமது அரசு உறுதி பூண்டுள்ளது. இன்று பணி நியமன கடிதம் பெற்றிருப்போருக்கு இது ஓர் புதிய தொடக்கம். அரசு பணியில் நீங்கள் நியமிக்கப்படும்போது அது சேவையாக கருதப்படுமேயன்றி, பணியாக அல்ல. தனியார் துறையில் தான் பணியாக கொள்ளப்படும். நாட்டின் 140 கோடி மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நீங்கள் அதிர்ஷ்டமாக கருத வேண்டும்.

தொழில்நுட்பம் வாயிலான சுய கற்றலை என்பது இன்றைய தலைமுறைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன். வாழ்வில் எத்தகைய உயர்வை நீங்கள் அடைந்தாலும் கற்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. வேகமாக மாறிவரும் இந்தியாவில் வேலைவாய்ப்பும் சுய வேலைவாய்ப்புகளும் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்று, சுய வேலைவாய்ப்பு துறை பெருமளவு முன்னேறி வருகிறது. உள்கட்டமைப்பு, மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு வரும் காரணத்தால் கடந்த எட்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு முதலீடுகளால் அபரிமிதமான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாரத் நெட் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு கிராமத்திலும் அகண்ட அலைவரிசை இணைப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களை உலகின் இதர பகுதிகளுடன் இணைக்கும் போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

பணி நியமன நடைமுறையில் நீங்கள் காணும் வெளிப்படைத்தன்மையும், வேகமும் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் பதவி உயர்வு பிரச்சனையை தீர்த்து வைப்பதில் நமது அரசு உறுதி பூண்டுள்ளது. இன்று பணி நியமன கடிதம் பெற்றிருப்போருக்கு இது ஓர் புதிய தொடக்கம். அரசு பணியில் நீங்கள் நியமிக்கப்படும்போது அது சேவையாக கருதப்படுமேயன்றி, பணியாக அல்ல. தனியார் துறையில் தான் பணியாக கொள்ளப்படும். நாட்டின் 140 கோடி மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நீங்கள் அதிர்ஷ்டமாக கருத வேண்டும்.

தொழில்நுட்பம் வாயிலான சுய கற்றலை என்பது இன்றைய தலைமுறைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன். வாழ்வில் எத்தகைய உயர்வை நீங்கள் அடைந்தாலும் கற்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. வேகமாக மாறிவரும் இந்தியாவில் வேலைவாய்ப்பும் சுய வேலைவாய்ப்புகளும் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்று, சுய வேலைவாய்ப்பு துறை பெருமளவு முன்னேறி வருகிறது. உள்கட்டமைப்பு, மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு வரும் காரணத்தால் கடந்த எட்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு முதலீடுகளால் அபரிமிதமான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாரத் நெட் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு கிராமத்திலும் அகண்ட அலைவரிசை இணைப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களை உலகின் இதர பகுதிகளுடன் இணைக்கும் போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

நாட்டை முன்னெடுத்துச் செல்லும் திறன் உங்கள் அனைவரிடமும் உள்ளது. தொடர்ந்து முன்னேறுவதுடன் உங்களது கடமையை சிறப்பாகச் செய்திடுங்கள்.

உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

மிக்க நன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From welfare to opportunity: How DPI 2.0 and AI will unlock India’s productivity

Media Coverage

From welfare to opportunity: How DPI 2.0 and AI will unlock India’s productivity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 28, 2026
June 28, 2026

From Digital India to Defence, PM Modi’s Vision for a Viksit Bharat Powering India’s Progress