"உங்கள் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தைரியம், பக்தி மற்றும் ஆர்வத்திற்காக உங்களைப் பார்க்கவும் மரியாதை செலுத்தவும் நான் ஆர்வமாக இருந்தேன்"
"இந்தியா சந்திரனிலும் இருக்கிறது! நமது தேசியப் பெருமையை நிலவில் பதித்துள்ளோம்.”
"இந்தப் புதிய இந்தியா 21-ம் நூற்றாண்டில் உலகின் பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும்"
"நிலவில் தரையிறங்கிய தருணம் இந்த நூற்றாண்டின் மிகவும் ஊக்கமளிக்கும் தருணங்களில் ஒன்றாகும்"
இந்தியாவின் அறிவியல் உணர்வு, நமது தொழில்நுட்பம் மற்றும் நமது அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றின் வலிமையை இன்று, முழு உலகமும் காண்பதுடன் அதை ஏற்று அங்கீகரிகிறது
"நமது 'மூன் லேண்டர்' நிலவுக்கான ஆபரணம் போல நிலவில் உறுதியாக கால் பதித்துள்ளது"
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி 'சிவ சக்தி' என்று அழைக்கப்படும்.
சந்திராயன் 2 தனது தடங்களை விட்டுச் சென்ற இடம் இனி 'திரங்கா' (மூவர்ணக் கொடி) என்று அழைக்கப்படும்.
"சந்திரயான்-3-ன் சந்திரப் பயணத்தின் வெற்றியில், நமது பெண் விஞ்ஞானிகளும், நாட்டின
அங்கு சந்திரயான் -3 திட்டத்தின் புதிய தகவல்கள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.
இந்த மகத்தான வெற்றிக்காக விஞ்ஞானிகளைப் பிரதமர் பாராட்டினார்.
மேலும் இஸ்ரோ இன்று இந்தியாவில் உற்பத்தி செய்து அதை (மேக் இன் இந்தியா) நிலவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு குழந்தையும் தமது எதிர்காலத்தை விஞ்ஞானிகளிடம் பார்க்கிறது என்று அவர் கூறினார்.
காலப்போக்கில் அதிகரித்து வரும் விண்வெளிப் பயன்பாடுகள், நமது இளைஞர்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மேலும் கூறினார்.

வணக்கம் நண்பர்களே,

இன்று, உங்கள் அனைவர் மத்தியிலும் ஒரு புதிய வகையான மகிழ்ச்சியை உணர்கிறேன். மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் அத்தகைய மகிழ்ச்சியை உணரலாம். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தேன், பின்னர் கிரிசில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. எனவே நான் அங்கு இருக்க வேண்டியிருந்தது. ஆனால் என் மனம் முழுவதும் உங்கள் மீது இருந்தது. நீங்கள் அதிகாலையில் இங்கே இருக்க வேண்டும், ஆனால் நான் வந்து உங்களுக்கு மரியாதை அளிக்க விரும்பினேன். இது உங்களுக்கு அசௌகரியமாக இருந்திருக்கலாம், ஆனால் நான் இந்தியாவில் தரையிறங்கியவுடன் உங்களைப் பார்க்க விரும்பினேன். நான் உங்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்த விரும்பினேன், உங்கள் கடின உழைப்பை வணங்கினேன், உங்கள் பொறுமைக்கு வணக்கம் செலுத்தினேன், உங்கள் ஆர்வத்தை வணங்கினேன், உங்கள் உயிர்ப்புக்கு வணக்கம் செலுத்தினேன், உங்கள் ஆன்மாவுக்கு வணக்கம் செலுத்தினேன். நீங்கள் நாட்டை எந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறீர்களோ அது சாதாரண வெற்றி அல்ல. எல்லையற்ற விண்வெளியில் இந்தியாவின் அறிவியல் திறனின் பிரகடனம் இது.
இந்தியா சந்திரனில் உள்ளது. நமது நாட்டின் பெருமையை சந்திரனில் வைத்துள்ளோம். இதுவரை யாரும் செல்லாத இடத்தை அடைந்தோம். இதுவரை யாரும் செய்யாததை நாம் செய்தோம். இது இன்றைய இந்தியா, அச்சமற்ற இந்தியா, வீர இந்தியா. இந்த இந்தியா ஒரு புதிய வழியில் சிந்தித்து இருண்ட மண்டலத்திற்குள் நுழைந்த பிறகும் உலகில் ஒளிக்கற்றையைப் பரப்புகிறது. 21 ஆம் நூற்றாண்டில், இந்த இந்தியா உலகின் மிகப்பெரிய பிரச்சினைகளை தீர்க்கும். ஆகஸ்ட் 23-ம் தேதி அந்த நாள் ஒவ்வொரு நொடியும் என் கண்முன் மீண்டும் மீண்டும் ஒளிர்கிறது. தரையிறங்குவது உறுதி செய்யப்பட்டபோது இஸ்ரோ மையத்திலும், நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்த அந்த காட்சியை யாராலும் மறக்க முடியாது! ஒவ்வொரு இந்தியனும் அந்த வெற்றியைத் தனக்கே உரியதாக உணர்ந்தான். ஒவ்வொரு இந்தியனும் ஒரு பெரிய தேர்வில் தேர்ச்சி பெற்றதைப் போல உணர்ந்தான். இன்றளவும் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் உங்கள் அனைவராலும் சாத்தியமாகியுள்ளது. எனது நாட்டு விஞ்ஞானிகள் இதை சாத்தியமாக்கியுள்ளனர். நான் உங்களை எவ்வளவு புகழ்ந்தாலும், அது எப்போதும் குறைவுதான்.

நண்பர்களே, 

நமது மூன் லேண்டர் நிலவில் உறுதியாக கால் பதித்த புகைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். விக்ரமின் நம்பிக்கை ஒரு பக்கம், பிரக்யானின் துணிச்சல் இன்னொரு பக்கம். நமது பிரக்யான் தொடர்ந்து நிலவில் தனது கால்தடங்களை விட்டு வருகிறது. இப்போது வெளியான பல்வேறு கேமராக்களில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தவை, உண்மையில் ஆச்சரியமானவை. மனித நாகரிகம் தோன்றியதிலிருந்து, பூமியில் பல லட்சம் ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, மனிதன் அந்த இடத்தின் படங்களை தனது கண்களால் பார்க்கிறான். இந்தப் படங்களை உலகுக்குக் காட்டும் வேலையை இந்தியா செய்துள்ளது! உங்களைப் போன்ற அனைத்து விஞ்ஞானிகளும் இதைச் செய்திருக்கிறார்கள். இந்தியாவின் அறிவியல் உணர்வு, நமது தொழில்நுட்பம் மற்றும் நமது அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இன்று முழு உலகமும் அங்கீகரித்துள்ளது. சந்திரயான் மகா அபியான் திட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.

என் குடும்ப உறுப்பினர்களே,

விண்வெளிப் பயணங்களின் தரையிறங்கும் இடத்திற்கு பெயரிடும் அறிவியல் பாரம்பரியம் இருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். நமது சந்திரயான் தரையிறங்கிய நிலவின் பகுதிக்கு பெயர் வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி 'ஷிவ் சக்தி' என்று அழைக்கப்படும். மனித குல நலனுக்கான தீர்மானத்தை சிவபெருமானும், அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றும் ஆற்றலை 'சக்தி'யும் நமக்குத் தருகின்றன. சந்திரனின் 'சிவ சக்தி' புள்ளி கன்னியாகுமரிக்கும் இமயமலைக்கும் இடையேயான தொடர்பை உணர்த்துகிறது. நமது முனிவர்கள் கூறியுள்ளனர் - 

அதாவது, நாம் எந்த மனத்துடன் நமது கடமைகளைச் செய்கிறோமோ, எந்த மனத்துடன் நம் எண்ணங்களுக்கும் அறிவியலுக்கும் இயக்கத்தைக் கொடுக்கிறோமோ, அந்த மனம் மங்களகரமான மற்றும் நன்மை பயக்கும் தீர்மானங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். மனதின் இந்த மங்களகரமான தீர்மானங்களை நிறைவேற்ற, சக்தியின் ஆசீர்வாதம் அவசியம். இந்த சக்திதான் நமது பெண் சக்தி; எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள். இது கூறப்பட்டுள்ளது.

படைப்பு முதல் அழிவு வரை, முழு பிரபஞ்சத்தின் அடிப்படையும் பெண் சக்திதான். சந்திரயான் -3 இல் நமது பெண் விஞ்ஞானிகள், நாட்டின் பெண் சக்தி ஆற்றிய முக்கிய பங்கை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். சந்திரனின் 'சிவ சக்தி' புள்ளி பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் இந்த அறிவியல் மற்றும் தத்துவ சிந்தனையைக் காணும். இந்த சிவசக்தி புள்ளி எதிர்கால சந்ததியினர் அறிவியலை மனிதகுலத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த ஊக்குவிக்கும். மனித குலத்தின் நலனே நமது தலையாய கடமை.

என் குடும்ப உறுப்பினர்களே,
உங்கள் வழிகாட்டுதல் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் அவசியம். நீங்கள் பல முக்கியமான பணிகளில் ஈடுபட்டுள்ளீர்கள்; வரவிருக்கும் தலைமுறைதான் இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும். அவர்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி நீங்கள் என்ன முடிவு செய்கிறீர்களோ, அதை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை உங்கள் ஆராய்ச்சியும் உங்கள் பல ஆண்டுகால கடின உழைப்பும் நிரூபித்துள்ளன. நாட்டு மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், நம்பிக்கையை சம்பாதிப்பது சிறிய விஷயம் அல்ல நண்பர்களே. 
உங்கள் கடின உழைப்பால் இந்த நம்பிக்கையை சம்பாதித்துள்ளீர்கள். நாட்டு மக்களின் ஆசீர்வாதம் உங்களுடன் உள்ளது. இந்த ஆசீர்வாதங்களின் சக்தியால், நாட்டிற்கான இந்த அர்ப்பணிப்புடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு உலகளாவிய தலைவராக மாறும். நம்மிடம் உள்ள அதே கண்டுபிடிப்பு உணர்வு, 2047 ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்கும் என்று நான் மிகுந்த நம்பிக்கையுடன் உங்களுக்குச் சொல்ல முடியும். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவரையும் சந்திக்கும் பாக்கியம் எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது. நாட்டு மக்கள் பெருமிதம் அடைந்துள்ளனர். கனவுகள் விரைவாக தீர்மானங்களாக மாறி வருகின்றன, மேலும் உங்கள் கடின உழைப்பு அந்த தீர்மானங்களை நிறைவேற்ற ஒரு சிறந்த உந்துதலாகும். என் தரப்பிலும், கோடிக்கணக்கான நாட்டு மக்கள் சார்பிலும், உலகெங்கிலும் உள்ள அறிவியல் சமூகத்தின் சார்பிலும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரத் மாதா ஜி ஜெய்,
பாரத் மாதா ஜி ஜெய்
பாரத் மாதா ஜி ஜெய்,
நன்றி!

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From discovery of India to trust in Bharat

Media Coverage

From discovery of India to trust in Bharat
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகிக்கும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெறும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
June 09, 2026

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்து வரும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெறும், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.  பிரதமரின் சிறந்த ஆளுகைக்கும், தென்பகுதி நாடுகளின் மக்களுக்காக அவர் குரல் கொடுப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய, பொருளாதார ரீதியாக ஆற்றல்மிக்க இந்தியாவை உருவாக்கும் அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் உலகத் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயக்க, 2026 ஜூன் 8-ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் , இலங்கை அரசின் சார்பிலும் மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். “இந்த மைல்கல் சாதனை, நீங்கள் பதவியில் இருந்த ஆண்டுகளின் சான்றாக மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைச் சேர்ந்த மக்கள், உங்கள் தலைமை மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கைக்கும் சான்றாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார, சமூக மாற்றத்தையும் இலங்கை அதிபர் எடுத்துரைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, இலங்கை உட்பட இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள பல நாடுகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். இது அந்த நாட்டிற்கு அவர் மேற்கொண்ட நான்காவது பயணமாகும். அப்பயணத்தின் போது, ஒரு வெளிநாட்டு பிரமுகருக்கு வழங்கப்படும் இலங்கையின் மிக உயர்ந்த விருதான மித்ரா விபூஷணம் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பயணம், இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது. 2022-ம் ஆண்டில் இலங்கை சந்தித்த பொருளாதார நெருக்கடிகளின்போது இந்தியா வழங்கிய முக்கிய ஆதரவு உட்பட, இந்தியாவின் உறுதியான ஒத்துழைப்பால் மிக நெருக்கமாகப் பயனடையும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

பப்புவா நியூ கினியாவின் பிரதமர் திரு ஜேம்ஸ் மாரபே , ஒரு தனிப்பட்ட காணொலிச் செய்தியில், பிரதமர் திரு நரேந்திர மோடியை “ஒரு முன்மாதிரியான தலைமைத்துவத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “இப்போது 25 கோடிக்கும் அதிகமான மக்களை திரு நரேந்திர மோடி வறுமையிலிருந்து நல்ல வாழ்க்கைக்கு உயர்த்தியிருப்பது ஒரு அற்புதமான சாதனை” என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மாரபே, பப்புவா நியூ கினியாவின் ஆழ்ந்த நட்பையும், இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மூன்றாவது மன்றத்தின் உச்சி மாநாட்டிற்காக, ஒரு இந்தியப் பிரதமர் முதன்முறையாக மே 2023-ல் பப்புவா நியூ கினியாவிற்கு மேற்கொண்ட பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் பயணம் அமைந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், பசிபிக் தீவு நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பில் ஒரு மைல்கல் ஆகும். இந்தப் பயணம், உலகளாவிய தென் பகுதி நாடுகளின் அர்ப்பணிப்புள்ள ஒத்துழைப்பு நாடாக இந்தியாவின் பங்கை எடுத்துக் காட்டியது.

டிரினிடாட் - டொபாகோவின் பிரதமர் திரு கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர் ,  பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், உலக விவகாரங்களில் இந்தியா ஒரு முன்னணி குரலாக உருவெடுத்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார். எளிமையான தொடக்கத்திலிருந்து மூன்று பதவிக் காலங்களில் 140 கோடி மக்கள் கொண்ட ஒரு தேசத்தை வழிநடத்தி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பயணத்தை அவர் எடுத்துரைத்துள்ளதோடு, வெளியுறவுக் கொள்கை, பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

டிரினிடாட் - டொபாகோவிற்கு இந்தியர்கள் சென்றதன் 180-வது ஆண்டு நிறைவை ஒட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 3 முதல் 4 வரை டிரினிடாட் - டொபாகோவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டார். இது 26 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணமாக அமைந்தது.