"அரசு, சமூகம், துறவிகள் சமாஜ் அனைத்தும் காசியின் புத்துயிரூட்டலுக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன"
"ஸ்வர்வேத் மகாமந்திர் இந்தியாவின் சமூக மற்றும் ஆன்மீக வலிமையின் நவீன அடையாளமாகும்"
"இந்தியாவின் கட்டிடக்கலை, அறிவியல், யோகா ஆகியவை ஆன்மீகக் கட்டுமானங்களைச் சுற்றிக் கற்பனை செய்ய முடியாத உயரங்களை அடைந்துள்ளன"
"காலத்தின் சக்கரங்கள் இன்று மீண்டும் திரும்பியுள்ளன, இந்தியா அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வதுடன், அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலையைப் பிரகடனப்படுத்துகிறது"
"இப்போது பனாரஸின் பொருள் "வளர்ச்சி, நவீன வசதிகள், நம்பிக்கை, தூய்மை மற்றும் மாற்றம்" என்பதாகும்.
ஒன்பது தீர்மானங்களைப் பிரதமர் முன்வைத்தார்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா, அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, உத்தரப்பிரதேச அமைச்சர் அனில் ஜி, சத்குரு ஆச்சார்யா பூஜ்ய ஸ்ரீ சுதந்திர தேவ் ஜி மகராஜ், பூஜ்ய ஸ்ரீ விக்யான் தேவ் ஜி மகராஜ், பிற முக்கிய நபர்கள், நாடு முழுவதிலுமிருந்து கூடியுள்ள அனைத்து பக்தர்களுக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் வணக்கம்!

 

இன்று நான் காசியில் தங்கியிருக்கும் இரண்டாவது நாள். எப்போதும் போல, காசியில் கழிக்கும் ஒவ்வொரு கணமும் அசாதாரணமானது, அற்புதமான அனுபவங்கள் நிறைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய விஹாங்கம் யோகா நிறுவனத்தின் வருடாந்திர கொண்டாட்டத்திற்காக நாம் இதே முறையில் கூடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். மீண்டும் ஒரு முறை, விஹாங்கம் யோகா சந்த் சமாஜத்தின் நூற்றாண்டு விழாவின் வரலாற்று நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. விஹாங்கம் யோகா பயிற்சி தனது 100 ஆண்டுகால மறக்க முடியாத பயணத்தை நிறைவு செய்துள்ளது. மகரிஷி சதாபால் தேவ் அவர்கள் கடந்த நூற்றாண்டில் ஞானம் மற்றும் யோகத்தின் தெய்வீக ஒளியை ஒளிரச் செய்தார். இந்த நூறு ஆண்டுகளில், இந்த தெய்வீக ஒளி உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இந்த நன்னாளில், 25,000 குந்தியா ஸ்வர்வேத் ஞான மகாயக்ஞத்தின் பிரமாண்ட நிகழ்ச்சியும் இங்கு நடைபெறுகிறது. இந்த மகாயாகத்தில் உள்ள ஒவ்வொரு காணிக்கையும் தீர்மானத்தை வலுப்படுத்தும் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு அதிகாரமளிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்தச் சந்தர்ப்பத்தில், மகரிஷி சதாபால் தேவ் அவர்களுக்கு எனது மனமார்ந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதுடன், எனது உண்மையான உணர்வுகளை முழு நம்பிக்கையுடன் அவருக்கு அர்ப்பணிக்கிறேன். தனது குரு மரபைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் அனைத்து மகான்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

 

என் குடும்ப உறுப்பினர்களே,

 

காசி மக்கள், மகான்கள் முன்னிலையில், வளர்ச்சி மற்றும் புனரமைப்பில் பல புதிய மைல்கற்களை எட்டியுள்ளனர். காசியின் மாற்றத்திற்காக அரசும், சமூகமும், மகான்களும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர். இன்று ஸ்வர்வேத் மந்திர் கட்டி முடிக்கப்பட்டது இந்த தெய்வீக உத்வேகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. மகரிஷி சதாபால் தேவ் அவர்களின் போதனைகள் மற்றும் வழிகாட்டுதலின் அடையாளமாக இந்த பிரமாண்டமான கோயில் திகழ்கிறது.

 

இந்த கோயிலின் தெய்வீகத்தன்மையும் கம்பீரமும் அதே அளவு வசீகரிக்கின்றன மற்றும் வியக்க வைக்கின்றன. கோயிலுக்குச் செல்லும்போது, நானே அதன் அழகில் மயங்கி விட்டேன். ஸ்வர்வேத் மந்திர் பாரதத்தின் சமூக மற்றும் ஆன்மீக வலிமையின் நவீன அடையாளமாகும். வேதங்கள், உபநிடதங்கள், இராமாயணம், கீதை மற்றும் மகாபாரதம் போன்ற நூல்களிலிருந்து தெய்வீக செய்திகளுடன் ஸ்வர்வேதம் அதன் சுவர்களில் அழகாக சித்தரிக்கப்பட்டிருப்பதை நான் கவனித்தேன்.

 

எனவே, இந்தக் கோயில் ஆன்மீகம், வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு ஒரு வாழும் எடுத்துக்காட்டு. ஆயிரக்கணக்கான பயிற்சியாளர்கள் இங்கு ஒன்றாக விஹாங்கம் யோகா பயிற்சியில் ஈடுபடலாம். எனவே, இந்த பிரமாண்டமான கோயில் யோகத்திற்கான யாத்திரையாக மட்டுமல்லாமல், ஞான யாத்திரையாகவும் திகழ்கிறது.

 

என் குடும்ப உறுப்பினர்களே,

 

பல நூற்றாண்டுகளாக பொருளாதார செழிப்புக்கும், பௌதீக வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நாடு பாரதம். முன்னேற்றத்தின் அளவுகோல்களை நிறுவி, செழிப்பின் படிகளை அடைந்துள்ளோம். புவியியல் விரிவாக்கம் மற்றும் சுரண்டலுக்கான ஒரு வழிமுறையாக பௌதீக வளர்ச்சியை இந்தியா ஒருபோதும் அனுமதித்ததில்லை. உடல் முன்னேற்றத்திற்காக, ஆன்மீக மற்றும் மனித சின்னங்களையும் உருவாக்கியுள்ளோம்.

 

காசி போன்ற துடிப்பான பண்பாட்டு மையங்களின் ஆசீர்வாதத்தைப் பெற்று, கொனார்க் போன்ற கோயில்களைக் கட்டியிருக்கிறோம்! சாரநாத் மற்றும் கயாவில் உத்வேகமூட்டும் ஸ்தூபிகளை நாங்கள் கட்டியுள்ளோம். நாலந்தா, தட்சசீலம் போன்ற பல்கலைக்கழகங்கள் இங்கு நிறுவப்பட்டன! எனவே, நமது கலையும் கலாச்சாரமும் பாரதத்தின் இந்த ஆன்மீக கட்டமைப்புகளைச் சுற்றி கற்பனை செய்ய முடியாத உயரங்களைத் தொட்டுள்ளன. இங்கு, அறிவு மற்றும் ஆராய்ச்சியின் புதிய பாதைகள் திறக்கப்பட்டுள்ளன, இது முன்முயற்சிகள் மற்றும் தொழில்களுடன் தொடர்புடைய எல்லையற்ற சாத்தியங்களுக்கு வழிவகுக்கிறது. யோகா போன்ற விஞ்ஞானம் நம்பிக்கையுடன் செழித்து வளர்ந்துள்ளது, இங்கிருந்துதான் மனித விழுமியங்களின் தொடர்ச்சியான ஓட்டம் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

 

 

சகோதர சகோதரிகளே,

 

அடிமைத்தன காலத்தில் பாரதத்தை பலவீனப்படுத்த முயன்ற ஒடுக்குமுறையாளர்கள் முதலில் நமது இந்த அடையாளங்களை குறிவைத்தனர். சுதந்திரம் பெற்ற பிறகு இந்த பண்பாட்டு சின்னங்களை மறுசீரமைப்பது அவசியம். நமது பண்பாட்டு அடையாளத்தை நாம் மதித்திருந்தால், நாட்டிற்குள் ஒற்றுமையும் சுயமரியாதை உணர்வும் வலுப்பெற்றிருக்கும். துரதிர்ஷ்டவசமாக, இது நடக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு சோம்நாத் கோயிலை புனரமைக்க கூட எதிர்ப்பு இருந்தது. இந்த மனநிலை பல தசாப்தங்களாக நாடு முழுவதும் நிலவியது. இதன் விளைவாக, தேசம் தனது பாரம்பரியத்தைப் பற்றி பெருமை கொள்ள மறந்து தாழ்வு மனப்பான்மையின் படுகுழியில் வீழ்ந்தது.

 

ஆனால் சகோதர சகோதரிகளே,

 

சுதந்திரம் அடைந்து ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு காலத்தின் சக்கரம் மீண்டும் திரும்பியுள்ளது. நாடு இப்போது செங்கோட்டையில் இருந்து 'அடிமை மனப்பான்மை' மற்றும் 'தனது பாரம்பரியத்தின் மீதான பெருமிதம்' ஆகியவற்றிலிருந்து விடுதலையை பறைசாற்றுகிறது. சோம்நாத்தில் தொடங்கிய போராட்டம் தற்போது ஒரு இயக்கமாக மாறியுள்ளது. இன்று, காசியில் உள்ள விஸ்வநாதர் தாமின் பிரம்மாண்டம் பாரதத்தின் நித்திய மகிமையின் கதையை விவரிக்கிறது. புத்தர் வட்டத்தை உருவாக்குவதன் மூலம், பாரதம் மீண்டும் புத்தரின் ஞான பூமிக்கு உலகை அழைக்கிறது. ராமர் கோயிலின் வளர்ச்சியும் நாட்டில் வேகமாக முன்னேறி வருகிறது. வரும் வாரங்களில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியும் நிறைவடைய உள்ளது.

 

 

நண்பர்களே,

 

நாடு அதன் சமூக உண்மைகளையும் கலாச்சார அடையாளத்தையும் இணைத்துக் கொண்டால் மட்டுமே நாம் முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும். அதனால்தான், இன்று, நமது யாத்திரைத் தலங்களின் வளர்ச்சி நடக்கிறது, மேலும் நவீன உள்கட்டமைப்பில் பாரதம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியின் வேகம் என்ன என்பதை பனாரஸில் இருந்து மட்டுமே அறிய முடியும்.

 

அதன் பின்னர், பனாரஸ் வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தில் ஒரு புதிய எழுச்சியைக் கண்டது. முன்பெல்லாம், விமான நிலையத்தை அடையும் போது நகரத்தை எப்படி அடைவது என்ற கவலை இருந்தது! மோசமான சாலைகள், எங்கும் குழப்பம்-இதுதான் பனாரஸின் அடையாளம். ஆனால், இப்போது பனாரஸ் என்றால் வளர்ச்சி! இப்போது, பனாரஸ் என்றால் பாரம்பரியத்துடன் கூடிய நவீன வசதிகள்! இப்போது, பனாரஸ் என்றால் தூய்மை மற்றும் மாற்றம்!

 

சகோதர சகோதரிகளே,

 

உள்கட்டமைப்பு இல்லாதது நமது ஆன்மீக பயணங்களில் மிகப்பெரிய சவாலாக இருப்பதால் இந்த நவீன வளர்ச்சியைப் பற்றி குறிப்பிடுவது அவசியம். உதாரணமாக, பனாரஸுக்கு வரும் யாத்ரீகர்கள் நகரத்திற்கு வெளியே அமைந்துள்ள ஸ்வர்வேத் மந்திரைப் பார்வையிட விரும்புவார்கள். இருப்பினும், சாலைகள் இன்று இருப்பது போல இல்லையென்றால், இந்த விருப்பத்தை நிறைவேற்றுவது சவாலானதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது, பனாரஸுக்கு வரும் யாத்ரீகர்களுக்கு ஸ்வர்வேத் மந்திர் ஒரு முக்கிய இடமாக உருவெடுக்கும். இதன் மூலம் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்திலும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகள் உருவாகி, மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

 

என் குடும்ப உறுப்பினர்களே, 9 உறுதிமொழிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

 

முதலில் - ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து, நீர் சேமிப்பிற்கான விழிப்புணர்வை தீவிரமாக ஏற்படுத்துங்கள்.

இரண்டாவதாக - கிராமங்களுக்குச் சென்று, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு ஆன்லைன் கொடுப்பனவுகளைக் கற்பிக்கவும்.

மூன்றாவது - உங்கள் கிராமம், உங்கள் சுற்றுப்புறம் மற்றும் உங்கள் நகரத்தை தூய்மையில் முதல் முதலிடமாக மாற்ற வேலை செய்யுங்கள்.

நான்காவதாக - முடிந்தவரை உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், மேட் இன் இந்தியா தயாரிப்புகளைப் பயன்படுத்தவும்.

ஐந்தாவதாக - முடிந்தவரை, முதலில் உங்கள் சொந்த நாட்டிற்குச் செல்லுங்கள், உங்கள் நாட்டிற்குள் பயணம் செய்யுங்கள், நீங்கள் மற்ற நாடுகளுக்குச் செல்ல விரும்பினால், நீங்கள் முழு நாட்டையும் பார்க்கும் வரை வெளிநாடு செல்ல நினைக்க வேண்டாம். நான் இந்த செல்வந்தர்களிடமும் சொல்கிறேன், நீங்கள் ஏன் வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்கிறீர்கள்? நான் 'வெட் இன் இந்தியா' என்று சொல்கிறேன், இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

ஆறாவதாக, இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு மேலும் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த முறையும் இந்த வேண்டுகோளை உங்களிடம் வைத்தேன், மீண்டும் சொல்கிறேன். இது பூமித் தாயைக் காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான பிரச்சாரமாகும்.

 

ஏழாவது - சிறுதானியங்கள் மற்றும் ஸ்ரீ அன்னாவை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், அதை நன்கு ஊக்குவிக்கவும், இது ஒரு சூப்பர்ஃபுட்.

எட்டாவது- உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு ஆகியவற்றையும் உங்கள் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுங்கள்.

ஒன்பதாவது - குறைந்தது ஒரு ஏழைக் குடும்பத்திற்காவது உறுதுணையாக இருங்கள், அவர்களுக்கு உதவுங்கள். பாரதத்தில் வறுமையை ஒழிக்க இது அவசியம்.

 

இந்த நாட்களில், நீங்கள் 'வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை'யைக் காண்கிறீர்கள். அது தொடர்பான நிகழ்ச்சியில் நேற்று மாலை கலந்து கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் 'வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்ரா'வில் பங்கேற்கப் போகிறேன். இந்த 'யாத்திரை' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அனைத்து ஆன்மீகத் தலைவர்கள் உட்பட அனைவரின் கடமையாகும். இந்த 'யாத்திரை'க்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 

பாரத் மாதா கி - ஜெய்!

பாரத் மாதா கி - ஜெய்!

பாரத் மாதா கி - ஜெய்!

நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors

Media Coverage

PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 13, 2025
December 13, 2025

PM Modi Citizens Celebrate India Rising: PM Modi's Leadership in Attracting Investments and Ensuring Security