Quoteகொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்தை அர்ப்பணித்தார்
Quoteபல்வேறு ரயில் திட்டங்களுக்கும், திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார்
Quote“கேரளாவின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், கொச்சியில் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து மற்றும் இதர திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டிருப்பது மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் அதிகரிக்கும்”
Quote“கேரள மக்களின் கடின உழைப்பும், கட்டுப்பாடும் அவர்களுக்கு தனித்துவ அடையாளத்தைத் தந்துள்ளன”
Quote“உலக வரைபடத்தில் பிரகாசமான இடத்தை இந்தியா பெற்றுள்ளது”
Quote“ஒத்துழைப்பு கூட்டமைப்பில் அரசு கவனம் செலுத்துகிறது, மாநிலங்களில் முன்னேற்றத்தை நாட்டின் முன்னேற்ற ஆதாரமாகக் கருதுகிறது”
Quote“வேகத்திலும் அளவிலும் இந்தியாவின் முன்னேற்றம் முன்னெப்போதும் இல்லாதது”
Quote“போக்குவரத்து தொடர்புக்கான முதலீடுகள் சேவைகளை விரிவுபடுத்துவது மட்டுமின்றி தூரத்தைக் குறைத்து சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி பல்வேறு கலாச்சாரங்களை இணைக்கிறது”
Quote“ஜி20 கூட்டங்களும், நிகழ்வுகளும் கேரளாவிற்கு கூடுதலாக உலகளாவிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது”
Quote“உள்ளார்ந்த வளமுள்ள கலாச்சார
Quoteமுன்னதாக திருவனந்தபுரம்- காசர்கோடு இடையேயான கேரளாவின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை இன்று காலையில் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

வணக்கம்!

கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராயி விஜயன் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, கேரள அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சசி தரூர் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே. இன்று கேரள மாநிலம் தனது முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையைப் பெற்றுள்ளது. நீர்வழி மெட்ரோ போக்குவரத்து, ரயில்வே சம்பந்தமான பல்வேறு திட்டங்கள் வடிவத்தில் புதிய பரிசுகள் கொச்சி நகரத்திற்கு கிடைத்துள்ளன‌.

 

|

சகோதர, சகோதரிகளே,

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்நிலை குறித்து நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். உலக நாடுகளின் நிலவரம் பற்றியும் அவற்றின் பொருளாதார நிலை குறித்தும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலகளாவிய சூழல்களுக்கு இடையேயும் வளர்ச்சிக்கு உகந்த இடமாக இந்தியா கருதப்படுகிறது. நம் மீது உலக நாடுகள் பெரும் நம்பிக்கை வைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலாவது, மத்தியில் உள்ள உறுதியான அரசு, இந்தியாவின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பது; இரண்டாவது, நவீன உள்கட்டமைப்பிற்கு இதுவரை இல்லாத வகையிலான அதிக முதலீடு; மூன்றாவது, நமது இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முதலீடு; இறுதியாக, எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும், எளிதான வாழ்க்கைக்கு வழிவகை செய்யவும் மத்திய அரசு உறுதிப்பூண்டிருப்பது.

 

|

சகோதர, சகோதரிகளே,

கடந்த 9 ஆண்டுகளில் இணைப்பு சார்ந்த உள்கட்டமைப்பிற்கு இதுவரை இல்லாத வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் உள்கட்டமைப்பிற்கு ரூ. 10 லட்சம் கோடிக்கும் மேலாக ஒதுக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலங்களை இணைப்பது, வந்தே பாரத் விரைவு ரயில்களின் சிறப்பம்சமாகும். அந்த வகையில் நவீன வசதிகள் பொருத்தப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விரைவான பயணத்தை மேற்கொள்ளும் இந்த ரயில், வடக்கு மற்றும் தெற்கு கேரளாவை இணைக்கும். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டம், தனித்துவம் வாய்ந்தது. கொச்சி நகரைச் சுற்றியுள்ள ஏராளமான தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு மலிவான மற்றும் நவீன போக்குவரத்து சேவையை இந்தத் திட்டம் வழங்கும்.

 

|

மனதின் குரல் நிகழ்ச்சியில் கேரள  மக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் பல்வேறு தயாரிப்புகள் பற்றி நான் பேசியிருந்ததை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பப்பட உள்ளது. நூறாவது நிகழ்ச்சி, தேச கட்டமைப்பில் ஒவ்வொரு தனி நபரின் முயற்சி மற்றும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்விற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

 

|

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

|

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்நிலை குறித்து நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். உலக நாடுகளின் நிலவரம் பற்றியும் அவற்றின் பொருளாதார நிலை குறித்தும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலகளாவிய சூழல்களுக்கு இடையேயும் வளர்ச்சிக்கு உகந்த இடமாக இந்தியா கருதப்படுகிறது. நம் மீது உலக நாடுகள் பெரும் நம்பிக்கை வைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலாவது, மத்தியில் உள்ள உறுதியான அரசு, இந்தியாவின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பது; இரண்டாவது, நவீன உள்கட்டமைப்பிற்கு இதுவரை இல்லாத வகையிலான அதிக முதலீடு; மூன்றாவது, நமது இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முதலீடு; இறுதியாக, எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும், எளிதான வாழ்க்கைக்கு வழிவகை செய்யவும் மத்திய அரசு உறுதிப்பூண்டிருப்பது.

 

  • Jitendra Kumar May 16, 2025

    🙏🇮🇳
  • krishangopal sharma Bjp January 01, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
  • krishangopal sharma Bjp January 01, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
  • krishangopal sharma Bjp January 01, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
  • Parshuram Napit December 30, 2024

    b j p jindabad
  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय श्री राम 🚩 वन्दे मातरम् जय भाजपा विजय भाजपा
  • Devendra Kunwar October 08, 2024

    BJP
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • JBL SRIVASTAVA May 27, 2024

    मोदी जी 400 पार
  • Vaishali Tangsale February 12, 2024

    🙏🏻🙏🏻👏🏻
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
LIC tops PSUs chart with record Rs 19,013 crore profit in Q4FY25

Media Coverage

LIC tops PSUs chart with record Rs 19,013 crore profit in Q4FY25
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM congratulates the Indian contingent for their performance at 2025 Asian Athletics Championships
June 02, 2025

Prime Minister, Shri Narendra Modi, has praised the Indian contingent for their stupendous performance at the recently held 2025 Asian Athletics Championships in South Korea."The hard work and determination of every athlete were clearly visible throughout the tournament", Shri Modi stated.

The Prime Minister posted on X :

"India is proud of our contingent for their stupendous performance at the recently held 2025 Asian Athletics Championships in South Korea. The hardwork and determination of every athlete were clearly visible throughout the tournament. Best wishes to the athletes for their future endeavours."