“A robust energy sector bodes well for national progress”
“Global experts are upbeat about India's growth story”
“India is not just meeting its needs but is also determining the global direction”
“India is focusing on building infrastructure at an unprecedented pace”
“The Global Biofuels Alliance has brought together governments, institutions and industries from all over the world”
“We are giving momentum to rural economy through 'Waste to Wealth Management”
“India is emphasizing the development of environmentally conscious energy sources to enhance our energy mix”
“We are encouraging self-reliance in solar energy sector”
"The India Energy Week event is not just India's event but a reflection of 'India with the world and India for the world' sentiment"

கோவா ஆளுநர் திரு பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, கோவாவின் துடிப்பான முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு ஹர்தீப் சிங் பூரி, திரு  ராமேஸ்வர் தெளி அவர்களே, பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

இந்திய எரிசக்தி வாரத்தின் இரண்டாவது பதிப்பில் நான் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். துடிப்பான ஆற்றலுக்குப் பெயர் பெற்ற மாநிலமான கோவாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற கோவா, அதன் அழகு மற்றும் வளமான கலாச்சாரத்தால் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கிறது. தற்போது, கோவாவும் வளர்ச்சியில் புதிய உச்சங்களை எட்டி வருகிறது. எனவே, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான எதிர்காலம் குறித்து விவாதிக்க நாம் கூடும்போது, கோவா ஒரு சிறந்த இடமாக நிற்கிறது.

 

நண்பர்களே,

இந்த இந்திய எரிசக்தி வார நிகழ்வு ஒரு முக்கிய கட்டத்தில் நடைபெறுகிறது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது உலகளாவிய வளர்ச்சி மதிப்பீடுகளை விஞ்சியுள்ளது. தற்போது, பாரதம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது. மேலும், சர்வதேச செலாவணி நிதியம் சமீபத்தில் இதேபோன்ற வளர்ச்சியின் வேகத்தை கணித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் இப்போது பாரதம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தின் தரவரிசைக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 

நண்பர்களே,

உலக அளவில் எரிசக்தி, எண்ணெய் மற்றும்  சமையல் எரிவாயுவின்  மூன்றாவது பெரிய நுகர்வு நாடாக இந்தியா தற்போது உள்ளது. கூடுதலாக, இது உலக அளவில் எல்.என்.ஜி, சுத்திகரிப்பு மற்றும்  வாகன சந்தையின் நான்காவது பெரிய இறக்குமதியாளராக உள்ளது. தற்போது, மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதுடன், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாதனை விற்பனையை  இந்தியா பதிவு  செய்துள்ளது. 2045-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதன்மை எரிசக்தி தேவை இரட்டிப்பாகும் என்று கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

 

 

நண்பர்களே,

இந்த எதிர்காலத் தேவைகளை எதிர்பார்த்து, பாரதம் தன்னை முன்கூட்டியே தயார்படுத்தி வருகிறது. அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளுக்கு மத்தியில், நாடு முழுவதும் மலிவான எரிசக்தி கிடைப்பதை  இந்தியா உறுதி செய்து வருகிறது. பல உலகளாவிய காரணிகள் இருந்தபோதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முயற்சிகள் மூலம்தான், பாரதம் தனது சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, உலகளாவிய வளர்ச்சியை வடிவமைக்கும் உலகளாவிய எரிசக்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராகவும் உருவெடுத்துள்ளது.

 

 

நண்பர்களே,

இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சி பாரதத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல; இது 'உலகத்துடன் இந்தியா, உலகத்திற்காக இந்தியா' என்ற நெறிமுறைகளையும் பிரதிபலிக்கிறது. எனவே, இந்தத் தளம் எரிசக்தித் துறையில் விவாதிப்பதற்கும், அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்குமான இடமாக உருவாகியுள்ளது.  நமது கூட்டு முயற்சிகளுக்கு இந்த மேடை ஒரு சான்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சி பாரதத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல; இது 'உலகத்துடன் இந்தியா, உலகத்திற்காக இந்தியா' என்ற நெறிமுறைகளையும் பிரதிபலிக்கிறது. எனவே, இந்தத் தளம் எரிசக்தித் துறையில் விவாதிப்பதற்கும், அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்குமான இடமாக உருவாகியுள்ளது.  நமது கூட்டு முயற்சிகளுக்கு இந்த மேடை ஒரு சான்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மிகவும் நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Manufacturing emerges as new growth engine for India’s GCC office demand

Media Coverage

Manufacturing emerges as new growth engine for India’s GCC office demand
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam applauding the courage and perseverance of India's Youth
July 20, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam applauding the courage and perseverance of India's Youth:

"प्राप्यापदं न व्यथते कदाचिदुद्योगमन्विच्छति चाप्रमत्तः।

दुःखं च काले सहते महात्मा धुरन्धरस्तस्य जिताः सपत्नाः॥"

Shri Modi said that our youth is achieving historic success through their courage, self-confidence, and relentless hard work, and this is the greatest strength of a rapidly developing India.

The Prime Minister posted on X:

आज हमारे युवा साथी धैर्य, आत्मविश्वास और अथक परिश्रम से ऐतिहासिक सफलता हासिल कर रहे हैं। यही विकसित हो रहे भारत की सबसे बड़ी ताकत है।

प्राप्यापदं न व्यथते कदाचिदुद्योगमन्विच्छति चाप्रमत्तः।

दुःखं च काले सहते महात्मा धुरन्धरस्तस्य जिताः सपत्नाः॥