துறவி ரவிதாசின் புதிய சிலையைத் திறந்து வைத்தார்
துறவி ரவிதாஸ் பிறந்த இடத்தைச் சுற்றியுள்ள வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
துறவி ரவிதாஸ் அருங்காட்சியகம், பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
"இந்தியாவுக்கு ஒரு வரலாறு உள்ளது, நாட்டிற்கு எப்போது தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் சில துறவிகள், முனிவர்கள் அல்லது சிறந்த ஆளுமைகள் இந்தியாவில் பிறக்கின்றனர்."
"துறவி ரவிதாஸ் பக்தி இயக்கத்தின் மகத்தான துறவி. பலவீனமான மற்றும் பிளவுபட்ட இந்தியாவுக்கு அது புதிய சக்தியை அளித்தது"
"துறவி ரவிதாஸ் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், சமூகப் பிளவைக் குறைக்கவும் பாடுபட்டார்"
"ரவிதாஸ் அனைவருக்கும் சொந்தமானவர், அனைவரும் ரவிதாஸூக்குச் சொந்தமானவர்கள்."
"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி, துறவி ரவிதாசின் போதனைகள் மற்றும் கோட்பாடுகளை அரசு முன்னெடுத்துச் செல்கிறது"
"நாம் சாதியத்தின் எதிர்மறை மனப்பான்மையைத் தவிர்த்து, துறவி ரவிதாசின் ந

ஜே! குரு ரவிதாஸ்!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பாரதம் முழுவதிலுமிருந்து இங்கு குழுமியிருக்கும் மதிப்புமிக்க துறவிகளே, பக்தர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே,
 

ரவிதாஸ் அவர்களின் ஜெயந்தி கொண்டாட்டங்களில் பங்கேற்க உங்களில் பலர் தொலைதூரத்திலிருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, பஞ்சாபிலிருந்து ஏராளமான சகோதர சகோதரிகள் வருவதால், வாரணாசி 'மினி பஞ்சாப்' போல் காட்சியளிக்கிறது. இவை அனைத்தும் துறவி ரவிதாஸ் அவர்களின் அருளால் சாத்தியமாகியுள்ளது. 
 

என் சகோதர சகோதரிகளே,
இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், காசியின் பிரதிநிதி என்ற முறையில், இது எனது சிறப்பு பொறுப்பாகும். வாரணாசிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதும், வாரணாசியின் வளர்ச்சிக்காக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இது பக்தர்களின் இந்த இடத்திற்கான பயணத்தை மிகவும் வசதியாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும். மேலும், துறவி ரவிதாஸ் பிறந்த இடத்தின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 
 

நண்பர்களே,
பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் அரசியலில் இல்லாதபோதும், எந்தப் பதவியிலும் இல்லாதபோதும், துறவி ரவிதாஸ் அவர்களின் போதனைகள் மூலம் வழிகாட்டுதலைப் பெற்றேன். 
 

நண்பர்களே,
ரவிதாஸ் அவர்கள் சமத்துவம், நல்லிணக்கம் பற்றிய போதனைகளை வழங்கினார், மேலும் தலித்துகள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் மீது எப்போதும் சிறப்பு அக்கறை காட்டினார். சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போது மட்டுமே சமத்துவம் வரும். முன்பு பரம ஏழைகளாகவும், சிறியவர்களாகவும் கருதப்பட்டவர்களுக்குத்தான் இப்போது மிகப்பெரிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 
 

சகோதர சகோதரிகளே,
இன்று, நாட்டில் உள்ள ஒவ்வொரு தலித்தும், ஒவ்வொரு விளிம்புநிலை நபரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சாதி அடிப்படையிலான பிரிவினைகளைத் தூண்டிவிட்டு, போராடுவதை நம்பியிருக்கும் இந்தியக் கூட்டணி, மக்கள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்கான திட்டங்களை எதிர்க்கிறார்கள். 
துறவி ரவிதாஸ் அவர்களின் அருளால் நாட்டு மக்களின் கனவுகள் நிச்சயம் நனவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை துறவி ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi Is Not Asking You Not To Spend, But Spend Wisely | Inside Story

Media Coverage

PM Modi Is Not Asking You Not To Spend, But Spend Wisely | Inside Story
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 13, 2026
May 13, 2026

Leadership That Leads by Example: PM Modi's Push for Mindful Growth, Innovation & Infrastructure