அசோக் விஹார் ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்
தில்லி நகரின் வளர்ச்சியை விரைவுபடுத்த வீட்டுவசதி, உள்கட்டமைப்பு, கல்வி ஆகியவற்றில் உருமாற்றம் ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தில்லிக்கு இன்று ஒரு முக்கிய நாள் : பிரதமர்
குடிசைப்பகுதிகளுக்கு பதிலாக நிரந்தர வீடுகளை கட்டுவதற்கான இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது: பிரதமர்
புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிற கொள்கையாகும்: பிரதமர்

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் மனோகர் லால் அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, டோகன் சாஹு அவர்களே, டாக்டர் சுகந்தா மஜும்தார் அவர்களே, ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா அவர்களே, எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.  

உங்கள் அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2025-ம் ஆண்டு, பாரதத்தின் வளர்ச்சிக்கு பல புதிய வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறுவதற்கான நமது பயணம் இந்த ஆண்டு மேலும் வேகம் பெறும். இன்று, பாரதம் உலகின் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடையாளமாக நிற்கிறது. 2025-ல் பாரதத்தின் இந்தப் பங்கு மேலும் வலுப்பெறும். இந்த ஆண்டு உலக அளவில் இந்தியாவின் சர்வதேச தோற்றத்தை மேம்படுத்தும். இந்த ஆண்டு பாரதத்தை ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாற்றும். இந்த ஆண்டு இளைஞர்களிடையே புதிய புத்தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு தொழில்முனைவோர் எழுச்சியை துரிதப்படுத்தும். இந்த ஆண்டு வேளாண் துறையில் புதிய மைல்கற்களை அமைக்கும். இந்த ஆண்டு "பெண்கள் தலைமையிலான வளர்ச்சி" என்ற நமது மந்திரத்தை புதிய உயரங்களுக்கு உயர்த்தும். இந்த ஆண்டு வாழ்க்கையை எளிதாக்குவதிலும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும். இந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியே இன்றைய நிகழ்ச்சியும் கூட.

 

நண்பர்களே,

இன்று தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்களில் ஏழைகளுக்கான வீடுகள் திட்டம், பள்ளிகள், கல்லூரிகள் தொடர்பான திட்டங்களும் அடங்கும். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, ஒரு வகையில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள குடும்பங்களுக்கும், தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடிசைகளில் இருந்து நிரந்தர வீடுகளுக்கு, வாடகை வீடுகளில் இருந்து சொந்த வீடுகளுக்கு மாறுவது இது உண்மையில் ஒரு புதிய தொடக்கமாகும். அவர்களுக்கு கிடைத்த வீடுகள் கண்ணியமும் சுயமரியாதையும் நிறைந்த வீடுகள். இந்த வீடுகள் புதிய நம்பிக்கைகள், கனவுகள் கொண்டவை. உங்கள் மகிழ்ச்சி, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க நான் இங்கு வந்துள்ளேன். நான் இங்கு நிற்கும்போது, பல பழைய நினைவுகள் உயிர்பெறுவது இயல்பானது. நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நாடு போராடிக் கொண்டிருந்தபோது, நெருக்கடி நிலைக்கு எதிராக ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. பலரைப் போலவே நானும் தலைமறைவு இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தேன் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். அந்த நேரத்தில், அசோக் விஹார் நான் வசிக்கும் இடமாக இருந்தது. எனவே, அசோக் விஹாருக்குச் வருவது பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது.  

நண்பர்களே,

இன்று, ஒட்டுமொத்த தேசமும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியா' என்றால் ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதியான நல்ல வீடு இருக்க வேண்டும். இந்த தீர்மானத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதை அடைவதில் தில்லிக்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. அதனால்தான் பிஜேபி தலைமையிலான மத்திய அரசு சேரிகளை நிரந்தர வீடுகளாக மாற்றுவதற்கான இயக்கத்தைத் தொடங்கியது.  இன்று, மேலும் 1,500 வீடுகள் அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த 'ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்புகள்' பின்தங்கிய மக்களின் கண்ணியம், சுயமரியாதையின் அடையாளமாகும்.  

 

 நண்பர்களே,

இந்த வீடுகளின் உரிமையாளர்கள் தில்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் எனது குடும்பத்தின் உறுப்பினர்கள்.  

நண்பர்களே

மோடி ஒருபோதும் தனக்காக ஒரு வீட்டைக் கட்டவில்லை என்பதை நாடு நன்கு அறியும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், இந்த மோடி 4 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் கனவை நிறைவேற்றியுள்ளார். நானும், எனக்கென ஒரு அரண்மனை வீடு கட்டியிருக்க முடியும். ஆனால் எனது ஒரே கனவு எனது சக மக்கள் உறுதியான வீடுகளை வைத்திருப்பதை உறுதி செய்வதாக இருந்தது. நீங்கள் மக்களை சந்திக்கும் போதெல்லாம், குறிப்பாக சேரிகளிலும் சேரிகளிலும் வசிப்பவர்களை சந்திக்கும் போதெல்லாம், என் சார்பாக அவர்களுக்கு ஒரு வாக்குறுதியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்றோ, நாளையோ அவர்களுக்கு ஒரு நிரந்தர வீடு கட்டப்படும் என்றும், அவர்களுக்கென்று ஒரு வீடு கொடுக்கப்படும் என்றும் அவர்களிடம் சொல்லுங்கள்.  இந்த வசதிகள் கண்ணியத்தை எழுப்புகின்றன. தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன, இது இத்துடன் நின்று விடாது. தில்லியில், இதுபோன்ற சுமார் 3,000 வீடுகளின் கட்டுமானம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகள் தில்லிவாசிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்த பகுதியில் ஏராளமான அரசு ஊழியர்களும் உள்ளனர். அவர்களின் தங்குமிடங்களும் மிகவும் பழையதாகிவிட்டன. அவர்களுக்கும் புதிய வீடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

நண்பர்களே

வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் நமது நகரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நகரங்களுக்கு தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரிய கனவுகளுடன் வருகிறார்கள். அந்தக் கனவுகளை நனவாக்க தங்கள் வாழ்க்கையை முழு மனதுடன் அர்ப்பணிக்கிறார்கள். அதனால்தான் பிஜேபி தலைமையிலான மத்திய அரசு நமது நகரங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரமான வாழ்க்கையை உறுதி செய்ய உறுதிபூண்டுள்ளது.  ஏழைகளாக இருந்தாலும் சரி, நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும் சரி, அனைவரும் நல்ல வீடுகளைப் பெற உதவுவதில் எங்கள் முயற்சிகள் கவனம் செலுத்துகின்றன. சமீபத்தில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு, மலிவு வாடகை வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு திட்டத்தை செயல்படுத்துகிறோம்.  பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தில்லியில் மட்டும், இந்தத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 30,000 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  

 

நண்பர்களே,

இந்த முயற்சியை மேலும் விரிவுபடுத்த நாங்கள் இப்போது திட்டமிட்டுள்ளோம். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தில், நகர்ப்புற ஏழைகளுக்காக 1 கோடி புதிய வீடுகள் கட்டப்படும். பிஜேபி தலைமையிலான மத்திய அரசு இந்த இல்லங்களுக்கான நிதியுதவியை வழங்கும்.  ஆண்டு வருமானம் ரூ. 9 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு சலுகைகளைப் பெறுவார்கள். கூடுதலாக, நடுத்தர வர்க்க குடும்பங்கள் ஒரு சொந்த வீடு என்ற கனவை நனவாக்க உதவுவதற்காக, மத்திய அரசு வீட்டுக் கடன்களுக்கு குறிப்பிடத்தக்க வட்டி மானியங்களை வழங்குகிறது. வட்டியின் பெரும்பகுதியை அரசு ஈடுசெய்கிறது.  

நண்பர்களே,

ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். நாடு முழுவதும் தரமான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொழில்முறை நிறுவனங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் பிஜேபி அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எங்கள் குறிக்கோள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதுடன், தற்போதைய, எதிர்கால தேவைகளுக்கு புதிய தலைமுறையை தயார்படுத்துவதும் ஆகும். இந்த தொலைநோக்கை மனதில் கொண்டே புதிய தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். 

நண்பர்களே,

நம் நாட்டில் கல்வி முறையை மேம்படுத்துவதில் சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அதன் நோக்கம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ-க்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.  இந்த புதிய வசதி நவீன கல்வியை விரிவுபடுத்துவதற்கும், தேர்வுகளை நடத்துவதற்கான மேம்பட்ட முறைகளை பின்பற்றுவதற்கும் உதவும். 

நண்பர்களே,

உயர்கல்வியில் தில்லி பல்கலைக்கழகத்தின் நற்பெயர் தொடர்ந்து வலுவாக வளர்ந்து வருகிறது.  தில்லியின் இளைஞர்கள் உயர் கல்வியைத் தொடர அதிக வாய்ப்புகளை இங்கேயே வழங்குவதே எங்கள் முயற்சியாகும். இன்று, அடிக்கல் நாட்டப்பட்ட புதிய வளாகங்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கூடுதல் மாணவர்கள் தில்லி பல்கலைக்கழகத்தில் படிக்க உதவும். 

 

நண்பர்களே,

ஒருபுறம், தில்லியில் கல்வி முறையை மேம்படுத்த மத்திய அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, மறுபுறம், இங்குள்ள மாநில அரசு அப்பட்டமான பொய்களைக் கூறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய மாநில அரசு, தில்லியின் பள்ளிக் கல்வி முறைக்கு பெரும் தீங்கு விளைவித்துள்ளது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், கல்விக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. தில்லி குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அலட்சியமாக இருக்கும் இந்த மாநில அரசு, கல்விக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் பாதியைக் கூட செலவிடவில்லை. 

நண்பர்களே,

இது நாட்டின் தலைநகரம். தில்லி மக்களுக்கு நல்லாட்சி பற்றி கனவு காண உரிமை உண்டு. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளாக, தில்லி ஒரு நெருக்கடியில் சூழப்பட்டுள்ளது.  மதுபான ஒப்பந்தங்களில் மோசடிகள், குழந்தைகள் பள்ளிகளில் முறைகேடுகள், ஏழைகளுக்கான சுகாதாரத் துறையில் மோசடிகள், மாசுபாட்டை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற போர்வையில் ஊழல் என முறைகேடுகள் அதிகரித்துள்ளன.  

நண்பர்களே

தில்லி, நாட்டின் தலைநகராக இருப்பதால், மத்திய அரசின் பொறுப்பான திட்டங்களுக்கு தாயகமாக உள்ளது. இங்கு பெரும்பாலான சாலைகள், மெட்ரோ பாதைகள், பெரிய மருத்துவமனைகள், கல்லூரி வளாகங்களை உருவாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இருப்பினும், இங்கே தனது கடமைகளின் பங்கைக் கையாள வேண்டிய தில்லி அரசு, இந்த விஷயத்தில் எந்தவொரு முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ளது.  

நண்பர்களே,

யமுனை சுத்தம் செய்யப்படாவிட்டால், தில்லிக்கு எப்படி குடிநீர் கிடைக்கும்? இவர்களின் நடவடிக்கைகளால்தான் தில்லி மக்கள் அசுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தில்லி அரசில் இவர்கள் தொடர்ந்தால், இவர்கள் தில்லியை இன்னும் மோசமான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வார்கள். 

 

நண்பர்களே,

நாட்டுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நல்ல திட்டங்களும் தில்லியில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கும் பயனளிக்க வேண்டும் என்பது எனது தொடர் முயற்சியாகும். பிஜேபி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் ஏழை, நடுத்தர மக்களுக்கு வசதிகளை வழங்குவதோடு பணத்தை மிச்சப்படுத்தவும் உதவுகின்றன.  

நண்பர்களே,

பிஜேபி தலைமையிலான மத்திய அரசு மின்சாரக் கட்டணத்தை பூஜ்ஜியமாகக் குறைப்பது மட்டுமல்லாமல், மின்சாரத்திலிருந்து சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளையும் மக்களுக்கு வழங்குகிறது. பிரதமரின் சூரிய சக்தி வீடுகள் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடும்பமும் மின் உற்பத்தியாளராக மாறி வருகிறது.  இந்த முயற்சியின் கீழ், சோலார் பேனல்களை நிறுவ ஆர்வமுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 75,000 முதல் 80,000 ரூபாய் வரை அரசு வழங்குகிறது. இதுவரை, நாடு முழுவதும் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தங்கள் கூரைகளில் பேனல்களை நிறுவியுள்ளன. இது குடும்பங்கள் தங்கள் தேவைகளுக்கு இலவச மின்சாரத்தைப் பெறுவதை உறுதி செய்யும். மேலும் உற்பத்தி செய்யப்படும் எந்தவொரு உபரி மின்சாரமும் பணம் சம்பாதித்துக் கொடுக்கும்.  

நண்பர்களே,

இன்று, மத்திய அரசு தில்லியில் கிட்டத்தட்ட 75 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்குகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் தில்லி மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியில் ரேஷன் கார்டு கிடைப்பதே கடினமாக இருந்தது. நீங்கள் பழைய செய்தித்தாள்களைப் பார்த்தால், மக்கள் எதிர்கொண்ட சவால்களை நீங்கள் காண்பீர்கள். 

நண்பர்களே,

தில்லியில் உள்ள ஏழை, நடுத்தர வர்க்க குடும்பங்கள் மலிவு விலையில் மருந்துகளைப் பெறுவதற்காக, நகரத்தில் சுமார் 500 மக்கள் மருந்தக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், 80% வரை தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கின்றன. உதாரணமாக, 100 ரூபாய் விலையுள்ள ஒரு மருந்து வெறும் 15 ரூபாய் அல்லது 20 ரூபாய்க்கு கிடைக்கிறது.  

 

நண்பர்களே

இலவச சிகிச்சையை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்களை தில்லி மக்களுக்கு வழங்க விரும்புகிறேன். இருப்பினும், இங்குள்ள அரசு மக்கள் மீது அக்கறையின்றி உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தில்லியில் அதை அமல்படுத்துவதை 'ஆம் ஆத்மி' கட்சியினர் தடுத்து வருகின்றனர். இதனால், தில்லி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

நண்பர்களே,

பிஜேபி அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இப்போது, எந்தவொரு குடும்பத்திலும், குழந்தைகள் இனி தங்கள் வயதான பெற்றோரின் சுகாதாரத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த மோடி அவர்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்த முடியும். ஆனால், மிகுந்த வருத்தத்துடன், இந்த மோடி தில்லியில் உள்ள தனது வயதான பெற்றோருக்கு எவ்வளவு சேவை செய்ய விரும்பினாலும், அதை அந்த 'ஆம் ஆத்மி'-யினர் பறித்துள்ளனர் என்பதை நான் சொல்ல வேண்டும். 

நண்பர்களே,

தில்லி மக்களுக்காக மத்திய அரசு மிகுந்த உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. 'ஆம் ஆத்மி' மாற்றப்பட்டு பிஜேபி-யால் இங்குள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.

நண்பர்களே,

தில்லியில் எங்கெல்லாம் 'ஆம் ஆத்மி'வின் தலையீடு இல்லையோ, அங்கெல்லாம் விஷயங்கள் திறம்பட செய்யப்படுகின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம்.  தில்லியில் நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் கட்டுமானப் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன. ஏனென்றால் 'ஆம் ஆத்மி' தலையீடு இல்லை.

 

நண்பர்களே,

தில்லியில் எங்கெல்லாம் 'ஆம் ஆத்மி'வின் தலையீடு இல்லையோ, அங்கெல்லாம் விஷயங்கள் திறம்பட செய்யப்படுகின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம்.  தில்லியில் நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் கட்டுமானப் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன. ஏனென்றால் 'ஆம் ஆத்மி' தலையீடு இல்லை.

நண்பர்களே,

'ஆம் ஆத்மி' கட்சியினரால் தில்லியில் மட்டுமே பிரச்சினைகளை உருவாக்க முடியும். அதே நேரத்தில் பிஜேபி தில்லி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதிர்காலத்தில் தில்லியில் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்கும்.

 

நண்பர்களே,

2025-ம் ஆண்டு டெல்லியில் நல்லாட்சியின் புதிய நீரோட்டத்தை வரையறுக்கும். இந்த ஆண்டு "தேசம் முதலில், நாட்டு மக்கள் முதலில், எனக்கு, தில்லிவாசிகள் முதலில்" என்ற உணர்வை வலுப்படுத்தும். இந்த ஆண்டு தில்லியின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.  இந்த உறுதியுடன், புதிய வீடுகள், புதிய கல்வி நிறுவனங்களுக்காக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டி வாழ்த்துகிறேன். 

என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் –

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

மிக்க நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India-EU Relations: Trust And Strategic Engagement In A Changing World

Media Coverage

India-EU Relations: Trust And Strategic Engagement In A Changing World
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives in a air crash in Baramati, Maharashtra
January 28, 2026

The Prime Minister, Shri Narendra Modi condoled loss of lives in a tragic air crash in Baramati district of Maharashtra. "My thoughts are with all those who lost their loved ones in the crash. Praying for strength and courage for the bereaved families in this moment of profound grief", Shri Modi stated.


The Prime Minister posted on X:

"Saddened by the tragic air crash in Baramati, Maharashtra. My thoughts are with all those who lost their loved ones in the crash. Praying for strength and courage for the bereaved families in this moment of profound grief."

"महाराष्ट्रातील बारामती येथे झालेल्या दुर्दैवी विमान अपघातामुळे मी अत्यंत दुःखी आहे. या अपघातात आपल्या प्रियजनांना गमावलेल्या सर्वांच्या दुःखात मी सहभागी आहे. या दुःखाच्या क्षणी शोकाकुल कुटुंबांना शक्ती आणि धैर्य मिळो, ही प्रार्थना करतो."