ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் யாத்கிர் பல கிராமங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு
அடிக்கல் நாட்டினார்
நாராயண்பூர் இடது கரை கால்வாய் விரிவாக்கத்தின் கீழ் புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் தொடக்கம் பதாதாலிருந்து மரதாகி எஸ் அந்தோலா என்எச் 150சி பசுமை நெடுஞ்சாலையில் 65.5 கிலோ மீட்டர் அளவிலான
6 வழிச்சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் “இந்த விடுதலையின் அமிர்த கால பெருவிழாவில்
விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) உருவாக்க வேண்டும்” “நம் நாட்டில் உள்ள ஒரு மாவட்டம் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக நாடே வளர்ச்சியடையாது”
“கல்வி, சுகாதாரம் மற்றும் இணைப்பு வசதிகளை பொறுத்தமட்டில் மாவட்ட அளவிலான முன்னேற்ற திட்டங்களுக்கு முன்னோடியாக திகழும் 10 மாவட்டங்களில் யாத்கிர் முன்னிலை”
“ஊக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு அணுகுமுறை மூலம் இரட்டை எஞ்சின் அரசு இயங்குகிறது”
“பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதித் திட்டத்தின் கீழ் யாத்கிரில் உள்ள சுமார் 1.25 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ.250 கோடி நிதி உதவி” “நமது நாட்டின் விவசாயக் கொள்கையில் சிறு விவசாயிகளுக்கே முன்ன
கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காக பிரதமர் அம்மாநில அரசைப் பாராட்டியுள்ளார்.
இந்தப் பகுதிகளில், நல்லாட்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு பகவந்த் கூபா அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர சகோதரிகளே! 

யாத்கிரி, வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் வகிக்கிறது. ராட்டி ஹள்ளியின் பழமை வாய்ந்த கோட்டை, நமது வரலாறு மற்றும் மூதாதையர்களின் வலிமையின் சின்னமாக விளங்குகிறது. நமது பாரம்பரியம், கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஏராளமான இடங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த அமிர்தகாலத்தில் வளர்ந்த இந்தியாவை நாம் கட்டமைக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரும், ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு மாநிலமும் இணைந்தால் மட்டுமே இதை சாத்தியமாக்க முடியும்.

நண்பர்களே,

எங்களது அரசின் முன்னுரிமை வாக்கு வங்கி அல்ல, வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி மட்டுமே. நாட்டில் ஒரு மாவட்டம் வளர்ச்சியின் அடிப்படையில் பின்தங்கியதாக இருந்தால் கூட, நாடு முன்னேற முடியாது. எனவே, முந்தைய அரசுகளால் பின்தங்கியவை என்று அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் முன்னேற விரும்புவதை நாங்கள் ஊக்குவித்தோம். யாத்கிர் உட்பட நாடு முழுவதும் இது போன்ற 100 மாவட்டங்களில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தை நமது அரசு தொடங்கியது. இந்த மாவட்டங்களில் சிறந்த ஆளுகைக்கு முக்கியத்துவம் அளித்து, வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் பணிகளை தொடங்கினோம்.

சகோதர, சகோதரிகளே,

21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் மற்றொரு முக்கிய பிரச்சனை தண்ணீர் பாதுகாப்பு. இந்தியா வளர வேண்டுமானால் எல்லை பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு போல தண்ணீர் பாதுகாப்பு சம்பந்தமான சவால்களும் எதிர்கொள்ளப்பட வேண்டும். வசதி மற்றும் சேமிப்பைக் கருத்தில் கொண்டு இரட்டை என்ஜின் அரசு பணியாற்றி வருகிறது. நுண்ணீர் பாசனத்திற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக முக்கியத்துவத்தை இன்று அளித்து வருகிறோம். கடந்த 6-7 ஆண்டுகளில் 70 லட்சம் ஹெக்டர் நிலங்கள் நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கவும் இரட்டை என்ஜின் அரசு கடுமையாக உழைத்து வருகிறது. அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளுக்கு ஜல்ஜீவன் இயக்கம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது நாட்டில் உள்ள 18 கோடி ஊரக வீடுகளில் 3 கோடி வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்புகள் இருந்தன. இன்று சுமார் 11 கோடி வீடுகள் இந்த வசதியைப் பெற்றுள்ளன.

 

உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கு இரட்டை என்ஜின் அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தால், கர்நாடக மாநிலம் முதலீட்டாளர்களின் விரும்பத்தக்க தலமாக மாறியுள்ளது. இந்தப் பகுதியின் வளர்ச்சியால் அனைவரும் வளம் பெறட்டும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கு இரட்டை என்ஜின் அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தால், கர்நாடக மாநிலம் முதலீட்டாளர்களின் விரும்பத்தக்க தலமாக மாறியுள்ளது. இந்தப் பகுதியின் வளர்ச்சியால் அனைவரும் வளம் பெறட்டும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

 

நண்பர்களே,

எங்களது அரசின் முன்னுரிமை வாக்கு வங்கி அல்ல, வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி மட்டுமே. நாட்டில் ஒரு மாவட்டம் வளர்ச்சியின் அடிப்படையில் பின்தங்கியதாக இருந்தால் கூட, நாடு முன்னேற முடியாது. எனவே, முந்தைய அரசுகளால் பின்தங்கியவை என்று அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் முன்னேற விரும்புவதை நாங்கள் ஊக்குவித்தோம். யாத்கிர் உட்பட நாடு முழுவதும் இது போன்ற 100 மாவட்டங்களில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தை நமது அரசு தொடங்கியது. இந்த மாவட்டங்களில் சிறந்த ஆளுகைக்கு முக்கியத்துவம் அளித்து, வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் பணிகளை தொடங்கினோம்.

சகோதர, சகோதரிகளே,

21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் மற்றொரு முக்கிய பிரச்சனை தண்ணீர் பாதுகாப்பு. இந்தியா வளர வேண்டுமானால் எல்லை பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு போல தண்ணீர் பாதுகாப்பு சம்பந்தமான சவால்களும் எதிர்கொள்ளப்பட வேண்டும். வசதி மற்றும் சேமிப்பைக் கருத்தில் கொண்டு இரட்டை என்ஜின் அரசு பணியாற்றி வருகிறது. நுண்ணீர் பாசனத்திற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக முக்கியத்துவத்தை இன்று அளித்து வருகிறோம். கடந்த 6-7 ஆண்டுகளில் 70 லட்சம் ஹெக்டர் நிலங்கள் நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கவும் இரட்டை என்ஜின் அரசு கடுமையாக உழைத்து வருகிறது. அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளுக்கு ஜல்ஜீவன் இயக்கம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது நாட்டில் உள்ள 18 கோடி ஊரக வீடுகளில் 3 கோடி வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்புகள் இருந்தன. இன்று சுமார் 11 கோடி வீடுகள் இந்த வசதியைப் பெற்றுள்ளன.

உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கு இரட்டை என்ஜின் அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தால், கர்நாடக மாநிலம் முதலீட்டாளர்களின் விரும்பத்தக்க தலமாக மாறியுள்ளது. இந்தப் பகுதியின் வளர்ச்சியால் அனைவரும் வளம் பெறட்டும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

மிக்க நன்றி!

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s pharma exports cross $28 bn till February, likely to end up with growth in rupee terms in FY26

Media Coverage

India’s pharma exports cross $28 bn till February, likely to end up with growth in rupee terms in FY26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 5, 2026
April 05, 2026

From Aatmanirbhar to Viksit Bharat: PM Modi’s Leadership Powers India’s Multi-Sector Triumph