ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும் அபுதாபி ஆட்சியாளருமான எனது சகோதரர் எச்.எச்.ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், 2023 டிசம்பர் 1 அன்று சிஓபி -28 இன் உலக பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்  துபாய் செல்கிறேன்.

பருவநிலை நடவடிக்கை தளத்தில் இந்தியாவுக்கு முக்கிய கூட்டாளியாக இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையின் கீழ் இந்த முக்கியமான நிகழ்வு நடைபெறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நமது நாகரிக நெறிமுறைகளுக்கு ஏற்ப, நாம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தொடரும்போது கூட, இந்தியா எப்போதும் பருவநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நமது ஜி20 தலைமைத்துவத்தின் போது, பருவநிலை நமது முன்னுரிமையில் முதன்மையாக இருந்தது. புதுதில்லி தலைவர்களின் பிரகடனத்தில் பருவநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த பல உறுதியான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தை சிஓபி -28 முன்னெடுத்துச் செல்லும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், பருவநிலை நடவடிக்கை குறித்த எதிர்கால போக்கிற்கான பாதையை வகுப்பதற்கும் சிஓபி28 ஒரு வாய்ப்பை வழங்கும். இந்தியா கூட்டிய உலகளாவிய தெற்கின் குரல் உச்சிமாநாட்டில், சமத்துவம், பருவநிலை நீதி மற்றும் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகளின் அடிப்படையில் பருவநிலை நடவடிக்கையின் தேவை குறித்தும், தகவமைப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் பேசுபொருளாக இருந்தது. வளரும் நாடுகளின் முயற்சிகளுக்கு போதுமான பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் ஆதரவளிப்பது முக்கியம்.  நிலையான வளர்ச்சியை அடைவதற்கு சமமான கார்பன் மற்றும் மேம்பாட்டு இடத்தை அவர்கள் அணுக வேண்டும்.

பருவநிலை நடவடிக்கை என்று வரும்போது இந்தியா பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி செயல்திறன், காடு வளர்ப்பு, எரிசக்தி சேமிப்பு, மிஷன் லைஃப் போன்ற பல்வேறு துறைகளில் நமது சாதனைகள் பூமித் தாயின் மீதான நமது மக்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.

காலநிலை நிதி, பசுமைக் கடன் முன்முயற்சி மற்றும் தொழில் மாற்றத்திற்கான தலைமைக் குழு உள்ளிட்ட சிறப்பு அமைப்புகளில் சேர நான் ஆவலாக உள்ளேன்.

துபாயில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கிடையே சில தலைவர்களை சந்தித்து, உலகளாவிய பருவநிலை நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பையும் நான் எதிர்நோக்குகிறேன்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India to add 100 merchant ships to its fleet in 5 years: Sarbananda Sonowal

Media Coverage

India to add 100 merchant ships to its fleet in 5 years: Sarbananda Sonowal
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
கேலோ இந்தியா கலந்துரையாடல் - இளைஞர்களிடையே நாளை உரையாற்றுகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி
August 26, 2026
Khelo India Dialogue will bring together sports, youth leadership, civic responsibility, volunteering, fitness and nation-building on a common platform
Yuva Samvaad under Khelo India Dialogue to Focus on Five Key Themes: Sports, Olympic Aspirations, Youth Leadership, Viksit Bharat and Nasha Mukt Yuva

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஆகஸ்ட் 27) காலை 11 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம் 'கேலோ இந்தியா கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் விளையாட்டுப் பயணத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவதையும், அவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவதையும், வளரச்சியடைந்த இந்தியாவுக்கான யோசனைகளை அவர்கள் வழங்குவதையும் இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

2026 தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மை பாரத் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கல்லூரிகளில் இளைஞர்களின் பங்கேற்புடன் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தேசிய வளர்ச்சித் திட்டத்தின் மையத்தில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை வைத்து, ஆரோக்கியமான, ஒழுக்கமான, விளையாட்டுத் திறனுள்ள ஒரு தேசத்தை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நாடு தழுவிய கேலோ இந்தியா கலந்துரையாடல், விளையாட்டு, இளைஞர் தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு, தன்னார்வத் தொண்டு, உடற்தகுதி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைக்கும். இது, நாட்டின் விளையாட்டு லட்சியங்களில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஒரு நேரடி வழியை வழங்குவதோடு, இந்தியாவின் இளைஞர்களின் விளையாட்டுச் சூழல் அமைப்பு குறித்த தொடர் உரையாடலில் அவர்களின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் இடம்பெறுவதையும் உறுதி செய்யும்.

தேசிய அளவிலான இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளம் பங்கேற்பாளர்கள், மை பாரத் தன்னார்வலர்கள், உள்ளூர் விளையாட்டு வீரர்கள், பொதுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளூர் அளவிலான கலந்துரையாடல்கள் நடைபெறும். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும், முன்னணி இந்திய விளையாட்டு வீரர்கள், பதக்கம் வென்றவர்களுக்கும் இடையேயான நேரடிக் கலந்துரையாடல் இந்த முன்முயற்சியின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியின் மைய அம்சமாக யுவ சம்வாத் எனப்படும் இளையோர் உரையாடல் இருக்கும். இதில் இளம் பங்கேற்பாளர்கள் தங்களின் சொந்த யோசனைகள், கண்ணோட்டங்கள், எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த அழைக்கப்படுவார்கள். இந்த உரையாடல் கீழ்க்கண்ட ஐந்து கருப்பொருள்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படும்:

* மேம்பட்ட வசதிகள், பயிற்சி, விளையாட்டு அறிவியல், அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் விளையாட்டுச் சூழலை மேம்படுத்துதல்;

* அறிவியல் பூர்வமாக திறமை கண்டறிதல், வெளிப்படையான தேர்வு, நீண்டகால விளையாட்டு வீரர் நலன் ஆகியவற்றின் மூலம் 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்காக திறமையாளர்களை வளர்த்தெடுத்தல்;

* மை பாரத் தலைமையிலான தன்னார்வத் தொண்டு மூலம் இளைஞர் தலைவர்களை உருவாக்குதல்;

* சமூக உணர்வு, எதிர்காலத்திற்குத் தயாரான திறன்கள், கட்டமைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி இளைஞர்களுக்கு வலுவூட்டுதல்;

* போதைப்பொருள் அற்ற இளைஞர் இயக்கத்தை ஊக்குவித்தல்.