இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறையை மாற்றும் நடவடிக்கையாக, கொச்சியில் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 'புதிய உலர் துறைமுகம்', 'சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் வசதி (ஐ.எஸ்.ஆர்.எஃப்)' ஆகியவற்றைப் பிரதமர் திறந்து வைக்கிறார்.
வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்கும் வகையில், 'புதிய உலர் துறைமுகம்' பெரிய வணிகக் கப்பல்களைக் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்த உதவும்.
கொச்சி, புதுவைப்பீனில் ஐஓசிஎல் எல்பிஜி இறக்குமதி முனையத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார்
ஆந்திராவில் உள்ள வீரபத்ரர் கோவில், கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் மற்றும் திரிப்பிரையர் ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலில் பிரதமர் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தேசிய அகாடமியின் புதிய வளாகத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 ஜனவரி 16 மற்றும் 17 தேதிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் .

ஜனவரி 16-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஆந்திர மாநிலம் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் பிரதமர் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரம் செல்லும் பிரதமர், தேசிய சுங்க, மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமியின் (என்.ஏ.சி.ஐ.என்) புதிய வளாகத்தைத் திறந்து வைக்கிறார். இந்திய வருவாய் பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 74 மற்றும் 75 வது தொகுதியின்  பயிற்சி அதிகாரிகள்  மற்றும் பூட்டானின் ராயல் குடிமைப்பணியின்  பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

ஜனவரி 17-ம் தேதி காலை 07:30 மணியளவில், கேரளாவின் குருவாயூர் கோவிலில் பிரதமர் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். காலை 10.30 மணிக்கு திருப்பிரையர் ஸ்ரீராமஸ்வாமி கோவிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். அதன் பிறகு நண்பகல் 12.00 மணியளவில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை தொடர்பான முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறைக்கு பெரும் ஊக்கம்

கொச்சிக்கு வருகை தரும் பிரதமர், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் புதிய உலர் துறைமுகம், சி.எஸ்.எல் இன் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் வசதி (ஐ.எஸ்.ஆர்.எஃப்),  கொச்சி புதுவைபீனில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  நிறுவனத்தின் எல்பிஜி இறக்குமதி முனையம் ஆகிய  ரூ.4,000 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இந்த முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறையை மாற்றுவதற்கும், அதில் திறன் மற்றும் தன்னிறைவை உருவாக்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளன.

கொச்சியில் உள்ள சி.எஸ்.எல் வளாகத்தில் சுமார் ரூ .1,800 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய உலர் துறைமுகம், புதிய இந்தியாவின் பொறியியல் திறனை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய திட்டமாகும். 75/60 மீட்டர் அகலம், 13 மீட்டர் ஆழம், 9.5 மீட்டர் வரை நீளம் கொண்ட இந்த 310 மீட்டர் நீளமுள்ள உலர் துறைமுகம் இப்பகுதியின் மிகப்பெரிய கடல் உள்கட்டமைப்புகளில் ஒன்றாகும். புதிய உலர் கப்பல் திட்டத்தில் கனமான தரை ஏற்றுதல் அமைப்பு உள்ளது, இது எதிர்கால விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் பெரிய வணிக கப்பல்கள் போன்ற பாதுகாப்பு சார்ந்த சொத்துக்களை கையாளுவதற்கான மேம்பட்ட திறன்களை இந்தியாவுக்கு அளிக்கும், இதனால் அவசர தேசிய தேவைகளுக்கு வெளிநாடுகளை இந்தியா சார்ந்திருப்பதை அகற்றும்.

சுமார் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும்  (ஐ.எஸ்.ஆர்.எஃப்) திட்டம் அதன் சொந்த தனித்துவமான வசதியாகும். இது 6000 டன் திறன் கொண்ட கப்பல் லிப்ட் அமைப்பு, பரிமாற்ற அமைப்பு, ஆறு பணி நிலையங்கள் மற்றும் சுமார் 1,400 மீட்டர் பெர்த் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது ஒரே நேரத்தில் 130 மீட்டர் நீளமுள்ள 7 கப்பல்களுக்கு இடமளிக்கும். ஐ.எஸ்.ஆர்.எஃப் சி.எஸ்.எல்லின் தற்போதைய கப்பல் பழுதுபார்க்கும் திறன்களை நவீனமயமாக்கி விரிவுபடுத்தும். மேலும்,  கொச்சியை உலகளாவிய கப்பல் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

கொச்சி புதுவைப்பீனில்  சுமார் 1,236 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தியன் ஆயிலின் எல்பிஜி இறக்குமதி முனையம் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. 15400 மெட்ரிக் டன் சேமிப்புத் திறனுடன், இந்த முனையம் பிராந்தியத்தில் உள்ள மில்லியன் கணக்கான வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு எல்பிஜியின் நிலையான விநியோகத்தை உறுதி செய்யும். அனைவருக்கும் அணுகக்கூடிய மற்றும் மலிவு எரிசக்தியை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை இந்த திட்டம் மேலும் வலுப்படுத்தும்.

இந்த 3 திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், நாட்டின் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்க்கும் திறன் மற்றும் துணைத் தொழில்கள் உள்ளிட்ட எரிசக்தி உள்கட்டமைப்பின் வளர்ச்சி அதிகரிக்கும். இந்தத் திட்டங்கள் ஏற்றுமதி, இறக்குமதி  வர்த்தகத்தை அதிகரிக்கும், தளவாடச் செலவுகளைக் குறைக்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், தற்சார்பை உருவாக்கும் மற்றும் ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக வாய்ப்புகளை உருவாக்கும்.

சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தேசிய அகாடமி

குடிமைப்பணி  திறன் மேம்பாடு மூலம் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் உள்ள தேசிய சுங்க, மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமியின் (என்.ஏ.சி.ஐ.என்) புதிய அதிநவீன வளாகம் உருவாக்கப்பட்டு கட்டப்பட்டது. 500 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த அகாடமி மறைமுக வரிவிதிப்பு (சுங்கம், மத்திய கலால் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நிர்வாகம் ஆகிய துறைகளில் திறனை வளர்ப்பதற்கான மத்திய  அரசின் தலைமை நிறுவனமாகும். தேசிய அளவிலான உலகத் தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனம் இந்திய வருவாய் சேவை (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரிகளுக்கும், மத்திய அரசு சார்ந்த சேவைகள், மாநில அரசுகள் மற்றும் பங்குதாரர்  நாடுகளுக்கும் பயிற்சி அளிக்கும்.

இந்தப் புதிய வளாகத்தை சேர்ப்பதன் மூலம், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக ஆக்மென்டட் & மெய்நிகர் ரியாலிட்டி, பிளாக்-செயின் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய தலைமுறை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்த தேசிய அகாடமி  கவனம் செலுத்தும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Cabinet approves Rs 33,000 crore BHAVYA scheme to develop ‘100 plug-and-play industrial parks’

Media Coverage

Cabinet approves Rs 33,000 crore BHAVYA scheme to develop ‘100 plug-and-play industrial parks’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets everyone on occasion of Navratri
March 19, 2026
PM shares a Sanskrit Subhashitam and a Hymn on this occasion

Prime Minister Shri Narendra Modi has extended his warmest greetings to everyone on the auspicious occasion of Navratri, praying for prosperity, health, and the fulfillment of the resolve for a Viksit Bharat.

The Prime Minister shared a Sanskrit Subhashitam on this occasion, highlighting the divine and benevolent grace of Goddess Shailaputri as the holy festival of Navratri commences. PM Modi also shared a devotional hymn dedicated to the Goddess on this occasion, noting that through the boundless mercy of the Goddess, the welfare of all citizens would be ensured, providing a powerful impetus to the collective goal of a developed India.

In a series of posts, the Prime Minister wrote on X:

"देशभर के मेरे परिवारजनों को नवरात्रि की हार्दिक मंगलकामनाएं। शक्ति की आराधना का यह दिव्य अवसर आप सभी के लिए सुख, सौभाग्य, समृद्धि और उत्तम स्वास्थ्य लेकर आए। शक्तिस्वरूपा मां दुर्गा की असीम कृपा से सबका कल्याण हो, जिससे विकसित भारत के हमारे संकल्प को भी नई ऊर्जा मिले। जय अंबे जगदंबे मां!"

"नवरात्रि के पहले दिन मां दुर्गा के प्रथम स्वरूप देवी शैलपुत्री की पूजा का विधान है। उनके आशीर्वाद से हर किसी के जीवन में संयम, शांति और सकारात्मक ऊर्जा का संचार हो, यही कामना है।

वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखराम्।
वृषारूढां शूलधरां शैलपुत्रीं यशस्विनीम्॥"

I bow to Goddess Shailaputri, who fulfills all the wishes of her devotees, who is adorned with a crescent moon on her forehead, who rides a bull and who holds a trident in her hand. She is a glorious and revered goddess.

"जगतजननी मां दुर्गा के चरणों में कोटि-कोटि देशवासियों की ओर से मेरा नमन और वंदन! नवरात्रि के पावन पर्व पर देवी मां से विनती है कि वे हर किसी को अपने स्नेह और अनुकंपा का आशीर्वाद प्रदान करें। जय माता दी!"