PM to Inaugurate Majlis Park - Maujpur Babarpur (Pink Line) & Deepali Chowk - Majlis Park (Magenta Line) corridors of Delhi Metro
PM to also lay the foundation stone for three new corridors under Delhi Metro’s Phase V-A expansion
PM to inaugurate and lay foundation stones for multiple projects under General Pool Residential Accommodation (GPRA) Redevelopment Plan
Projects have been redeveloped through an innovative self-sustaining financial model without burdening the public exchequer

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இம்மாதம் 8-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் அங்கு கூடியுள்ள பொதுமக்கள் இடையே அவர் உரையாற்றுகிறார். முன்னதாக சரோஜினி நகரில் கட்டப்படுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கான சாவிகளை ஒப்படைக்கிறார்.

இதனையடுத்து 18,300 கோடி ரூபாய் மதிப்பிலான தில்லி மெட்ரோ திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், இரண்டு புதிய வழித்தடங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். இதில் மஜிலிஸ் பூங்கா – மெளஜ்பூர் – பாபர்பூர் இடையேயான 12.3 கி.மீ நீளமுள்ள இளஞ்சிவப்பு வழித்தடத்தையும் தீபாலிஜவுக் – மஜிலிஸ் பூங்காக இடையே 9.9 கி.மீ நீளமுள்ள மெஜந்தா நிற வழித்தடத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தப் புதிய வழித்தடங்கள் புராரி, ஜகத்பூர், வஜ்ஜிராபாத், கஜூரிகாஸ், பஜன்புரா, யமுனா விகார், மதுபன் சௌக், ஹைதர்பூர், பத்திலி, மூர், பலஸ்வா மற்றும் மஜ்ஜிலிஸ் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாக அமையும்.

தில்லி மெட்ரோ ரயில் ஐந்தாம் கட்டப் பணிகளின் கீழ் 16.0 கி.மீ நீளமுள்ள 3 புதிய வழித்தடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பொதுக் குடியிருப்பு மற்றும் மறு மேம்பாட்டுத்  திட்டத்தின் கீழ், 15,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இது சரோஜினி நகர், நேதாஜி நகர், கஸ்தூரிபாய் நகர் மற்றும் ஸ்ரீனிவாஸ்புரி போன்ற பல்வேறு முக்கியப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த பகுதிகளை நவீனமயமாக்கும் திட்டங்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்குமான மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.          

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report

Media Coverage

India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 20, 2026
July 20, 2026

Yuva to Global Stage: How PM Modi’s Policies Are Turning India’s Youth, Farms & Factories into Growth Engines