பொதுச் சேவை என்பது சிறந்த நிர்வாகத்தின் மிகப் பெரிய சோதனையாக திகழ்வதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். பணிவு, அர்ப்பணிப்பு, கடமை உணர்வுடன் தொடர்ந்து பணியாற்றுபவரே மக்களின் நம்பிக்கையை பெறுகிறார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“சேவையை புனிதக் கடமையாக கருதி மக்கள் நலனுக்காக அயராது உழைத்து சிறந்த நிர்வாகம் மூலம் அவர்களுடைய பாதுகாப்பு, நலனை உறுதி செய்து, பணிவு, சுய ஒழுக்கம், வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புடன் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணிப்பவர் மக்களின் நம்பிக்கை, கௌரவம், அங்கீகாரம், வளமை ஆகியவற்றை உண்மையில் பெறுகிறார்.”
जनसेवा ही सुशासन की सबसे बड़ी कसौटी है। विनम्रता, समर्पण और कर्तव्यनिष्ठा के साथ निरंतर कार्य करने वाला व्यक्ति ही जनविश्वास अर्जित करता है।
— Narendra Modi (@narendramodi) June 10, 2026
सदानुरक्तप्रकृतिः प्रजापालनतत्परः।
विनीतात्मा हि नृपतिर्भूयसी श्रियमश्नुते॥ pic.twitter.com/mn0Ax0F8hs


