நம் சகோதரிகள் மற்றும் மகள்களின் நெற்றியில் இருந்து குங்குமத்தைத் துடைப்பதன் விளைவுகளை இன்று, பயங்கரவாதிகள் அனைவரும் அறிவார்கள்: பிரதமர்
ஆப்பரேஷன் சிந்தூர் என்பது நீதிக்கான அசைக்க முடியாத உறுதிமொழி: பிரதமர்
பயங்கரவாதிகள் நம் சகோதரிகளின் நெற்றியில் இருந்து குங்குமத்தைத் துடைக்கத் துணிந்தனர்; அதனால்தான் இந்தியா பயங்கரவாதத்தின் தலைமையகத்தையே அழித்தது: பிரதமர்
பாகிஸ்தான் நமது எல்லைகளில் தாக்குதல் நடத்தத் தயாராக இருந்தது, ஆனால் இந்தியா அதன் மையத்தில் அவர்களைத் தாக்கியது: பிரதமர்
ஆப்பரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மறுவரையறை செய்துள்ளது, ஒரு புதிய அளவுகோலை, ஒரு புதிய இயல்பை அமைத்துள்ளது: பிரதமர்
இது போரின் சகாப்தம் அல்ல, ஆனால் இது பயங்கரவாதத்தின் சகாப்தமும் அல்ல: பிரதமர்
பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை, ஒரு சிறந்த உலகத்திற்கான உத்தரவாதம்: பிரதமர்
பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் இணைந்து வாழ முடியாது, பயங்கரவாதமும் வர்த்தகமும் இணைந்து செல்ல முடியாது, தண்ணீரும் ரத்தமும் ஒருபோதும் ஒன்றாகப் பாய முடியாது: பிரதமர்

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், சமீபத்திய நாட்களில் இந்தியாவின் வலிமை மற்றும் நிதானத்தை இந்த நாடு கண்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு இந்திய குடிமகனின் சார்பாகவும் நாட்டின் வலிமைமிக்க ஆயுதப்படைகள், உளவுத்துறை அமைப்புகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அவர் தனது வணக்கத்தைத் தெரிவித்தார். இந்தியாவின் துணிச்சலான வீரர்கள், ஆப்பரேஷன் சிந்தூரின் நோக்கங்களை அடைவதில் காட்டிய அசைக்க முடியாத துணிச்சலை பிரதமர் எடுத்துரைத்தார், அவர்களின் வீரம், மீள்தன்மை மற்றும் வெல்ல முடியாத மனப்பான்மையைப் பாராட்டினார். இந்த இணையற்ற துணிச்சலை நாட்டின் ஒவ்வொரு தாய், சகோதரி மற்றும் மகளுக்கும் அர்ப்பணித்தார்.

 

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டித்து, அது நாட்டையும் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று கூறிய திரு. மோடி, இந்தச் செயலை பயங்கரவாதத்தின் கொடூரமான வெளிப்பாடு என்று விவரித்தார். அங்கு விடுமுறைக்கு வந்திருந்த அப்பாவி பொதுமக்களின்  நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பிய பின்னர், அவர்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இது வெறும் கொடூரமான செயல் மட்டுமல்ல, நாட்டின் நல்லிணக்கத்தை உடைக்கும் ஒரு மோசமான முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதல் குறித்து தனது ஆழ்ந்த தனிப்பட்ட வேதனையை வெளிப்படுத்திய அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கக் கோருவதில் முழு தேசமும் - ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் எவ்வாறு ஒன்றுபட்டு நின்றது என்பதை எடுத்துரைத்தார். பயங்கரவாதிகளை ஒழிக்க அரசு ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் பெண்களின் கண்ணியத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பதன் விளைவுகளை அவர்கள் இப்போது முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்து, அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் எச்சரித்தார்.

"சிந்தூர் நடவடிக்கை என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, கோடிக்  கணக்கான இந்தியர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு" என்று பிரதமர் வலியுறுத்தி, நீதிக்கான ஒரு அசைக்க முடியாத உறுதிமொழி என்றும், மே 6-7 அன்று இந்த உறுதிநிலை நிறைவேற்றப்பட்டதை  உலகம் கண்டதாகவும் விவரித்தார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மீது இந்திய ஆயுதப் படைகள் துல்லியமான தாக்குதல்களை நடத்தி, ஒரு தீர்க்கமான அதிர்ச்சியை வழங்கியதாக பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியா இவ்வளவு துணிச்சலான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று பயங்கரவாதிகள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும், ஆனால் தேசத்திற்கு முன்னுரிமை என்பதை அதன் வழிகாட்டும் கொள்கையாகக் கொண்டு ஒற்றுமையாக நிற்கும்போது, ​​உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டு, தாக்கத்தை ஏற்படுத்தும் விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்கள் மீதான இந்தியாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அவர்களின் உள்கட்டமைப்பை மட்டுமல்ல, அவர்களின் மன உறுதியையும் சிதைத்ததாக அவர் கூறினார். பகவல்பூர் மற்றும் முரிதுகே போன்ற இடங்கள் நீண்ட காலமாக உலகளாவிய பயங்கரவாதத்தின் மையங்களாக செயல்பட்டு வந்தன என்றும், அமெரிக்காவின் 9/11 தாக்குதல்கள், லண்டன் பாதாள ரயில் குண்டுவெடிப்புகள் மற்றும் இந்தியாவில் பல தசாப்தங்களாக நடந்த பயங்கரவாத சம்பவங்கள் உட்பட உலகளாவிய பெரிய தாக்குதல்களுடன் அவற்றை தொடர்புபடுத்தின என்றும் பிரதமர் தெரிவித்தார். பயங்கரவாதிகள் இந்தியப் பெண்களின் கண்ணியத்தை அழிக்கத் துணிந்ததால், இந்தியா பயங்கரவாதத்தின் தலைமையகத்தை அழித்துவிட்டது என்றும் அவர் கூறினார். இந்த நடவடிக்கையின் விளைவாக, பல தசாப்தங்களாக இந்தியாவிற்கு எதிராக வெளிப்படையாக சதி செய்த முக்கிய நபர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட ஆபத்தான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர், மேலும் இந்தியாவிற்கு எதிராக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியவர்கள் விரைவாக நடுநிலையாக்கப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்தினார்.

இந்தியாவின் துல்லியமான மற்றும் பலமான தாக்குதல்கள், பாகிஸ்தானை ஆழ்ந்த விரக்தியில் ஆழ்த்தியதாக திரு மோடி கூறினார். தனது கிளர்ச்சியில், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இணைவதற்குப் பதிலாக பாகிஸ்தான் ஒரு பொறுப்பற்ற செயலை மேற்கொண்டது. அது இந்திய பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள் மற்றும் பொதுமக்களின்  வீடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது, மேலும் ராணுவ தளங்களையும் குறிவைத்தது என்று அவர் மேலும் கூறினார். இந்தத் தாக்குதல், பாகிஸ்தானின் பாதிப்புகளை எவ்வாறு அம்பலப்படுத்தியது என்பதை அவர் எடுத்துரைத்தார்.  அதன் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள், இந்தியாவின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், வானத்தில் அவற்றை செயலிழக்கச் செய்ததற்கு முன் அவை வைக்கோல் போல நொறுங்கின, என்றார். பாகிஸ்தான், இந்தியாவின் எல்லைகளைத் தாக்கத் தயாராக இருந்தபோது, ​​இந்தியா, பாகிஸ்தானின் மையத்தில் ஒரு தீர்க்கமான அதிர்வை ஏற்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டார். இந்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மிகவும் துல்லியமான தாக்குதல்களை நடத்தி, அந்நாடு நீண்ட காலமாக பெருமையாகக் கூறி வந்த பாகிஸ்தானின் விமான தளங்களை கடுமையாக சேதப்படுத்தின. இந்தியாவின் பதிலடியின் முதல் மூன்று நாட்களுக்குள், பாகிஸ்தான் அதன் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகமாக அழிவைச் சந்தித்தது. இந்தியாவின் ஆக்ரோஷமான எதிர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் பதட்டங்களிலிருந்து விடுபட உலக சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்து, பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகளை பாகிஸ்தான் தேடத் தொடங்கியது. கடுமையான இழப்புகளைச் சந்தித்த பிறகு, மே 10-ஆம் தேதி மதியம் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் டிஜிஎம்ஓவைத் தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்தார். அதற்குள், இந்தியா ஏற்கனவே பெரிய அளவிலான பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றி, முக்கிய போராளிகளை ஒழித்து, பாகிஸ்தானின் பயங்கரவாத மையங்களை இடிபாடுகளாகக் குறைத்துவிட்டது. பாகிஸ்தான் தனது வேண்டுகோளில், இந்தியாவுக்கு எதிரான அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் ராணுவ ஆக்கிரமிப்பையும் நிறுத்துவதாக உறுதியளித்ததாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த அறிக்கையின் காரணமாக, இந்தியா நிலைமையை மறுபரிசீலனை செய்து, பாகிஸ்தானின் பயங்கரவாத மற்றும் ராணுவ நிறுவல்களுக்கு எதிரான அதன் எதிர் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இந்த இடைநீக்கம் ஒரு முடிவு அல்ல என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். இந்தியா வரும் நாட்களில் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தொடர்ந்து மதிப்பீடு செய்யும், அதன் எதிர்கால நடவடிக்கைகள் அதன் உறுதிமொழிகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்யும்.

இந்தியாவின் ஆயுதப் படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் துணை ராணுவப் பிரிவுகள் முதலியவை  எல்லா நேரங்களிலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மிகுந்த விழிப்புடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் நிறுவப்பட்ட கொள்கையாக ஆப்பரேஷன் சிந்தூர் உள்ளது, இது இந்தியாவின் உத்தி சார்ந்த அணுகுமுறையில் ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறிக்கிறது" என்று அவர் அறிவித்தார். இந்த நடவடிக்கை ஒரு புதிய தரத்தை, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு புதிய இயல்பாக அமைத்துள்ளது என்று கூறினார். இந்தியாவின் பாதுகாப்புக் கோட்பாட்டின் மூன்று முக்கிய தூண்களை பிரதமர் கோடிட்டுக் காட்டினார்; முதலாவதாக, இந்தியாவின் மீதான எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலும் வலுவாக மற்றும்  உறுதியாக எதிர்கொள்ளப்படும்  வகையில் தீர்க்கமான பதிலடி. இந்தியா அதன் சொந்த விதிமுறைகளின்படி பதிலடி கொடுக்கும், பயங்கரவாத மையங்களை அவற்றின் வேர்களில் குறிவைக்கும். இரண்டாவது, அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு சகிப்புத்தன்மை இல்லை; அணு ஆயுத அச்சுறுத்தல்களால் இந்தியா பயப்படாது. இந்த சாக்குப்போக்கின் கீழ் செயல்படும் எந்தவொரு பயங்கரவாத பாதுகாப்பான புகலிடமும் துல்லியமான மற்றும் தீர்க்கமான தாக்குதல்களை எதிர்கொள்ளும். மூன்றாவது தூண், பயங்கரவாத ஆதரவாளர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் வேறுபாடு இல்லை; பயங்கரவாதத் தலைவர்களையும், அவர்களைப் பாதுகாக்கும் அரசுகளையும் தனித்தனி நிறுவனங்களாக இந்தியா இனி பார்க்காது. சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​பாகிஸ்தானின் தொந்தரவான யதார்த்தத்தை உலகம் மீண்டும் ஒருமுறை கண்டது.  பாகிஸ்தானின் மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் வெளிப்படையாகக் கலந்து கொண்டது, அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் ஆழமான ஈடுபாட்டை நிரூபிக்கிறது என்பதை  அவர் சுட்டிக்காட்டினார். எந்தவொரு அச்சுறுத்தலிலிருந்தும் தனது குடிமக்களைப் பாதுகாக்க இந்தியா தொடர்ந்து தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

போர்க்களத்தில் இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானை தோற்கடித்து வருகிறது என்றும், ஆப்பரேஷன் சிந்தூர், நாட்டின் ராணுவ வலிமைக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது என்றும் வலியுறுத்திய திரு. மோடி, பாலைவனம் மற்றும் மலைகளில் நடைபெறும் போர், இரண்டிலும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க திறனை எடுத்துரைத்தார், அதே நேரத்தில் புதிய யுகப் போரிலும் மேன்மையை நிறுவினார். இந்த நடவடிக்கையின் போது, ​​இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் செயல்திறன் தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார். 21-ஆம் நூற்றாண்டின் போரில் ஒரு வலிமையான சக்தியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுவதை உலகம் இப்போது காண்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிரான போராட்டத்தில், ஒற்றுமை, இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இந்த சகாப்தம்,  போரின் சகாப்தம் அல்ல என்றாலும், அது பயங்கரவாதத்தின் சகாப்தமாகவும் இருக்க முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். "பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்பது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான உலகத்திற்கான உத்தரவாதம்" என்று அவர் அறிவித்தார்.

பாகிஸ்தானின் ராணுவமும் அரசும் தொடர்ந்து பயங்கரவாதத்தை வளர்த்து வருவதாகவும், இதுபோன்ற செயல்கள் இறுதியில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்றும் திரு மோடி எச்சரிக்கை விடுத்தார். பாகிஸ்தான் தழைக்க விரும்பினால், அது அதன் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்ற வேண்டும், அமைதிக்கு வேறு வழி இல்லை என்று அவர் அறிவித்தார். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் இணைந்து வாழ முடியாது, பயங்கரவாதமும் வர்த்தகமும் இணையாக இயங்க முடியாது, ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று கூறி இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். உலக சமூகத்திற்கான செய்தியாக, பாகிஸ்தானுடனான எந்தவொரு விவாதமும் பயங்கரவாதத்தில் மட்டுமே கவனம் செலுத்தும், பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாகக் கொண்டிருக்கும் என்ற இந்தியாவின் நீண்டகால கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, பிரதமர், புத்தரின் போதனைகளைப் பற்றி சிந்தித்து, அமைதிக்கான பாதை வலிமையால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மனிதகுலம் அமைதி மற்றும் செழிப்பை நோக்கி முன்னேற வேண்டும் என்றும், ஒவ்வொரு இந்தியரும் கண்ணியத்துடன் வாழவும், வளர்ந்த பாரதத்தின் கனவை நனவாக்கவும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தியா அமைதியை நிலைநிறுத்த, அது வலுவாக இருக்க வேண்டும் என்றும், தேவைப்படும்போது அந்த வலிமையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். சமீபத்திய நிகழ்வுகள், இந்தியாவின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் உள்ள உறுதியை நிரூபித்துள்ளன என்று அவர் கூறினார். தனது உரையை நிறைவு செய்கையில், அவர் இந்திய ஆயுதப் படைகளின் வீரத்திற்கு மீண்டும் ஒருமுறை வணக்கம் செலுத்தினார், மேலும் இந்திய மக்களின் தைரியம் மற்றும் ஒற்றுமைக்கு தனது ஆழ்ந்த மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi vows stronger India-Malaysia ties in strategic pivot; says ‘no compromise’ on terrorism

Media Coverage

PM Modi vows stronger India-Malaysia ties in strategic pivot; says ‘no compromise’ on terrorism
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the limitless potential of students and the spirit of ‘Pariksha Pe Charcha’
February 09, 2026

The Prime Minister, Shri Narendra Modi said that our students are endowed with extraordinary talent and possess the complete potential to turn their dreams into reality. He noted that the objective of Pariksha Pe Charcha is to guide students on how to meaningfully use their abilities and skills for personal growth and success.

The Prime Minister shared a Sanskrit Subhashitam on the occasion-

“विद्या वितर्को विज्ञानं स्मृतिस्तत्परता क्रिया। यस्यैते षड्गुणास्तस्य नासाध्यमतिवर्तते॥”

The Subhashitam conveys that a person who possesses knowledge, logic, science, memory, promptness and activity can overcome any challenge, and nothing is impossible for such an individual.

The Prime Minister wrote on X;

“अद्भुत प्रतिभा के धनी हमारे विद्यार्थियों में अपने सपनों को सच करने की पूरी क्षमता है। 'परीक्षा पे चर्चा' का उद्देश्य भी यही है कि कैसे वे अपनी प्रतिभा और कौशल का सार्थक इस्तेमाल कर सकते हैं।

विद्या वितर्को विज्ञानं स्मृतिस्तत्परता क्रिया।

यस्यैते षड्गुणास्तस्य नासाध्यमतिवर्तते॥”